இடுகைகள்

அனுபவ சிந்தனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மலரினும் மெல்லிது...

படம்
அனைவருக்கும் வணக்கம்... இணையம் மற்றும் சில கோப்புகள் (pdf) கிடைத்தவற்றைத் தொகுத்ததே இந்தப்பதிவு... சில பதில்கள் சற்றே நீண்டு இருக்கலாம்; தகுந்த நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டுகிறேன்... "அதற்காகச் செய்த நுட்பம் தானே...?" என்று நினைத்தால் உண்மையும் இல்லை... காரணம், பாடும் நிலாவே → SPB ← கேட்பொலி பதிவில், வானிலிருந்து வரும் நுட்பத்தைச் செய்வதற்கு முன், வழியில் நடந்து செல்லும் போது சில நுட்பங்களைக் கடந்து செல்ல நேரிட்டது; அதிலொன்றை இந்தப் பதிவில் பயன்படுத்தியுள்ளேன்...! சரி, ஒவ்வொரு கேள்விற்கான பதிலை அறிய வான நிற வண்ண கட்டத்திலோ, அவ்வரியிலோ சொடுக்கவும்... கைப்பேசியில் வாசிப்பவர்களுக்கும் எளிதாகும் வகையில் அமைத்துள்ளேன்... நன்றி...

மறக்க வேண்டியதும்... மறக்கக் கூடாததும்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதிய மணக்குடவர் முதல் பரிமேலழகர் வரை... அவ்வளவு ஏன், இன்றைக்கு வரைக்கும் உரை எழுதியவர்கள் அனைவரும், ஒரு சொல்லுக்கு மறதி என்றே எழுதி உள்ளார்கள்... ஆனால் ஒருவர் :-

திருக்குறளில் தொடரும் தவறான சிறப்புகள்...

படம்
வணக்கம் நண்பர்களே... திருக்குறள் எழுத்துக்களின் கணக்கியலை மேற்கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சில பதிவுகளை கணக்கியல் எனும் குறிச்சொல்லில் (Label) பதிவு செய்துள்ளேன்... மேலும் இதை எனது வாழ்வின் ஆய்வாக "எண்ணி" தொடர்ந்து கொண்டிருக்கிறேன்... இதுவரை செய்த ஆய்வின்படி :

திருக்குறளிலே ஒரு சொல்...

படம்
நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா...? தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா...? அனைவருக்கும் வணக்கம்... எண்ணற்ற சிறப்பான தமிழ்ச் சொற்களில் தமிழுக்கே உரித்தான சொல் என்ன...? அன்புடைமை அதிகாரத்தின் குறளின் குரல் பதிவுகளில் குறளுக்கேற்ப பாடல்கள் தேடலின் போது, 77-வது குறளுக்கு ஒரு அருமையான காணொளி கேட்க நேரிட்டதில் உருவானதே இந்தப்பதிவு...

திருக்குறள் போற்றி...

படம்
அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை → இங்கே ← சொடுக்கி அறியலாம்... பாவலர், சொற்பொழிவாளர், தமிழ்ச் சொற்பிறப்பு மொழியறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர்... அதிர்ந்து பேசா பண்பாளர், ஆய்ந்துபேசும் அறிஞர், எழுத்தாளராக வாழ்வதற்காக அரசுப்பணியைத் துறந்தவர், கண்பார்வை இழந்தாலும் தனது எழுத்துப்பணி தடைப்படக்கூடாது என்பதற்காகக் கண்களை மூடியெழுதிப் பழகியவர்... திருக்குறளுக்கு உரையைத் திருக்குறளிலேயே தேடவேண்டுமென வலியுறுத்திய குறளாசான்... குறள் வழித் திருமணம், புதுமனை புகுவிழா என குறளியத்தை வாழ்வியல் நெறியாக வகுத்து வாழ்ந்து காட்டியவர்... அவர் எழுதிய "திருக்குறள் போற்றி" பற்றிய விளக்கம் தொடர்கிறது :- அறத்தால் பொருள் ஈட்டி இன்பமுடன் வாழ்க... (சனவரி 30, 1930 – சூலை 25, 2021)

இருவிழிக் கல்விக்கொள்கை...

படம்
அனைவருக்கும் வணக்கம்... உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தேவையான :-

அன்பின் வழியது...

படம்
வணக்கம் அன்பு நண்பர்களே... முந்தைய பதிவுகளின் இணைப்பு அன்பின் கருவி... ഽ அன்பு என்பது... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?

அன்பு என்பது...

படம்
வணக்கம் அன்பு நண்பர்களே... முந்தைய பதிவான அன்பின் கருவி யானது அறத்திற்கு மட்டுமா துணை...? - இல்லவே இல்லை...! அன்பினால் துன்பம் வருமா...? - வரவே வராது...! காரணம்...? - அறம் தெரியாத கோழைக்கு அன்பும் தெரியாது...! தன்னலம் கருதாது அறத்தை ஒருவன் செயல்படுத்த வேண்டும் என்றால் அவனுக்குள் என்ன இருக்க வேண்டும்...? இரண்டாம் பகுதியில் குறளின் குரலில் விளக்கம் அறிவதற்கு முன், ஒரு பாட்டு கேட்போமா...?

அன்பின் கருவி...

படம்
வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி எழுதலாம் எனும் குழப்பம் இருந்தாலும், இதுநாள் வரையில் எழுதியது போலவே தொடர்கிறேன்... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?

கீழ்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... பிற மொழிகளால் மொழி பெயர்க்க முடியாத பல தமிழ்ச் சொற்களில், மக்களின் இயல்பைக் குறிப்பிடும் சொல் ஒன்று "சான்றாண்மை" மற்றொன்று "கயமை" என்பதாகும்... சான்றாண்மை என்பது உயர்ந்த தன்மையின் முடிவான எல்லையையும், கயமை என்பது இழிந்த தன்மையின் கடையான எல்லையையும் காட்டும்... இதனைத் தமிழ் மக்கள் கண்ட அளவிற்குப் பிற மக்கள் காணவில்லை என்பதோடு, தமிழ் கண்ட அளவிற்குப் பிற மொழிகளில் இல்லை என்பதால், இவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலை அவை இழந்து நிற்கின்றன... இது தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள பல தனிச் சிறப்புகளில் ஒன்று... முந்தைய கயமை பதிவில் கயவர்களை இரண்டே எழுத்தில் குறிப்பிடுகிறார் என்று முடித்திருந்தேன்... தொடர்கிறது...

கயமை...

படம்
அனைவருக்கும் வணக்கம்... நூற்றியெட்டு (108) மருத்துவ அவசர ஊர்தி (Ambulance) - இன்று இதன் ஒலி கேட்டாலே மனதில் பதட்டமும் வேண்டுதலும் இன்ன பலவும் தோன்றுகின்றன... திருக்குறள் அதிகாரங்களை மறைமொழியாக பேசின ஒரு காலத்தில், "நூற்றியெட்டை மறவாதீர்கள், எப்போதும் விழிப்பாயிருங்கள், உங்கள் உள்ளத்தில் அவற்றை நுழைய விடாதீர்கள்... உங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல, வீட்டில், வீதியில், நாட்டில், நகரில் உள்ள எவ்விடத்திலுமே இவற்றை நுழையவிடாதீர்கள்... எங்கேனும் கண்டு விட்டால் உடனே விலகுங்கள்..." என்று பேசியுள்ளார்கள்... அந்த 108 என்ன...?

வெங்கோலனும் மூடர் கூடமும்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... // சட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதைத் திட்டம் போட்டுத் தருகிற கூட்டம் வருடிக் கொண்டே இருக்குது... திருந்தாதே தலைவா திருத்தாதே... கெடுக்கிற காலம் நெருங்குவதால் இனி வாழ்கிற அவசியம் இருக்காது... இருக்கிறதெல்லாம் ஏலத்திற்குப் போனா ⚊ சிரிக்கிற வேலையும் இருக்காது, அழுகிற வேலையும் இருக்காது... // முந்தைய பகுதியை வாசிக்காதவர்களுக்காக ☛ பேயாட்சி ☚ இது போல் உள்ள வெங்கோலனின் தலைமையைத் துதித்து நாட்டையே கெடுத்துக் கொண்டிருக்கும் சில மனித உயிர்களை ஐயன் என்னவாக குறிப்பிடுகிறார்...? ஐயனே அரசியல் களத்தில்...!

பேயாட்சி...

படம்
அனைவருக்கும் வணக்கம்... செங்கோன்மை, கொடுங்கோன்மை அதிகாரங்களை இணைத்து முன்பு பதிவு செய்தேன்... அதன் இணைப்பு →இங்கே← இப்போது அதன் தொடர்ச்சியாக அதிகார அகர வரிசையில் கடைசி வரும் அதிகாரம் தொடர்கிறது... இந்த முறை குறளின் குரலாக - ஐயனே அரசியல் களத்தில்...!

பொறை...

படம்
அனைவருக்கும் வணக்கம்... வலிமையுள் வலிமை எது...? பொறுமை காப்பது கோழைத்தனமா...? புறங்கூறுபவர்களாலும், நற்பண்புடையவர்கள் குறைவதாலும் உலகின் நிலை என்னவாகும்...? பொறுமை காக்கப் பேராற்றல் படைத்தவர் யார்...? தம்மை இகழ்ந்து பழித்துப் பேசுபவர்களையும் தாங்கிக் கொள்ளுதல் தலையாய பண்பு என்பது, தனது மேலேயே நின்று தன்னை ஆழமாக வெட்டி அல்லது குழிதோண்டுபவர்களையும் சாய்த்துவிடாமல் தாங்கிக் கொள்ளும் நிலம் போல இருக்க வேண்டும் என்பதே : அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை அத்தகைய நிலமே சுமையாகக் கருதும் மூவர் யார் ? 'பொறை' எனும் சொல் உள்ள அனைத்து குறள்களின் குரல் :

தேடலும் ஆய்வும்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... →எண்களோடு விளையாடு...!← எனும் பதிவில், திருக்குறளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த எண் 7 எனும் ஓர் இலக்க பகா எண் என்பதை விளக்கச் சற்றே விளையாடவும் செய்தேன்...! ஆனால் முப்பால், இயல்கள், அதிகாரங்கள், குறள்கள், போன்றவற்றின் எழுத்துக்களிலும், இவை வரிசைப்படுத்திய எண் வரிசைகளிலும், உரையாசிரியர்களின் விளையாட்டு எண்ணிலடங்கா...! ஆம், வேறுபாடுகள் பலபல... அவற்றில் சிலவற்றை மட்டும் இந்தப் பதிவில் அறிவோம்...

ஆல்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவுகள் : "மை" என முடியும் அதிகாரங்களின் தொகுப்பின் →இணைப்பு← மற்றும் இரண்டாம் தொகுப்பின் →இணைப்பு← இனி "ல்" தொகுப்போடு திருக்குறளின் அனைத்து அதிகாரங்களும் முடிவடைகிறது...

மறைமொழி...

படம்
அனைவருக்கும் வணக்கம்... 1953 ஆண்டு கோவை வள்ளுவர் படிப்பகத்தின் ஆண்டு விழாவில் தெய்வத்திரு. கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் பேசியது : திருக்குறளைப் படிப்பதற்கு ஒரு எளிய வழி : 13 நாட்கள் போதும்; நாள் 1-க்கு 10 ஆக அதைப் பாடம் பண்ணுதற்கு; 13 நாளும் 24 மணிநேரமல்ல, நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் போதுமானது, 13 நாட்களில் திருக்குறள் உங்களுக்குப் பாடமாகி விடும்... எது...? திருக்குறள் அதிகாரங்கள் மட்டும்...! மேலும் மறைமொழி பற்றிப் பேசியதின் ஒரு சிறு பகுதி :

மை...

படம்
அனைவருக்கும் வணக்கம்... அதிகார வைப்பு முறை கொண்டு திருக்குறளில் அறிய வேண்டியவை பல உள்ளன... அவற்றில் "மை" மட்டும்... ஆமை என உச்சரிப்பில் முடியும் பொச்சாவாமையை, சோர்வு இல்லாமையாக இருக்க வேண்டும் என்பதை எழுதிய சில முந்தைய பதிவுகள் : மறதி மரணத்திற்குச் சமம்... ഽ என்னது மறதியா...? மிதப்பின்மை (1) ഽ மிதப்பின்மை (2)

பகா வழி...!

படம்
அனைவருக்கும் வணக்கம்... சமீப காலமாக நம் நாட்டில் நடப்பதைப் பற்றி திருக்குறள் உண்டா...? பகா எண்களைப் போல் மனிதர்கள் உண்டா...?

ஔ...

படம்
அனைவருக்கும் வணக்கம்...// திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அது எது ? என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை. //