🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கை வந்த கலை...

ஏன் என்ற கேள்வி - இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை... நான் என்ற எண்ணம் - கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை... பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே2 உரிமைகளைப் பெறுவதெல்லாம் - உணர்ச்சிகள் உள்ளதனாலே2 (படம் : ஆயிரத்தில் ஒருவன்) கேள்வியைத் தேடி அறிகிற அறிவாளி... கேள்வியோடு மட்டுமே திரிகிற முட்டாள்... இந்த இரண்டு பேருலே யாரு சந்தோசமா இருப்பாங்க...? என்னைக் கேட்டா எந்தக் கஷ்டமும் படாம கேள்வியை மட்டும் கேட்கிற முட்டாள் தான் சந்தோசமா இருப்பான்னு தோணுது... உனக்கு எப்படி தோணுது...?


பதிலையும் சொல்ற மனசாட்சி தான் சந்தோசமா இருப்பான்னு தோணுது...! ஹிஹி... சந்தோசப்படும் எல்லோருமே அறிவாளிகள் தான்... ஏன்னா முட்டாளுக்குச் சிரிக்கத் தெரியாது... சந்தோசமா இருக்கவும் பிடிக்காது... எப்போதும் அறிவாளிகள் தான் சந்தோசமா இருப்பாங்க... அடுத்தவர்களையும் சந்தோசப்படுத்திக்கிட்டே இருப்பாங்க...

இதைக் கேள்வியா கேட்டதுக்காக சிரிக்கிறதா...? இல்லை சும்மா இருக்கிறதா...? சிரிக்கலைன்னா என்னை வேறு பட்டியலில் சேர்த்து தஞ்சாவூர் கல்வெட்டிலே ?! எதற்கும் சிரிச்சு வைக்கிறேன்... ஹா.... ஹா... மன்னவர் பொருள்களைக் கை கொண்டு நீட்டுவார், மற்றவர் பணிந்து கொள்வார்... மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான், மற்றவர் எடுத்துக் கொள்வார்... வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல், வைப்பவன் கர்ண வீரன்... வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன்... வாழ்கவே வாழ்க வாழ்க ஆ... (படம் : கர்ணன்) இப்போ ஒரு கேள்வி : "உன் வாழ்க்கை உன் கையில்" என்று சொல்கிறோமே... "உன் வாழ்க்கை உன் மனதில்" என்று சொன்னாயே இப்பதிவில் ??? "எண்ணம் போல் வாழ்வு" என்பதாலா...?

என்றும் என்னைப் பரவசப்படுத்தும், சந்தோசப்படுத்தும் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்ற பாடலுக்காக எழுதினேன்... இந்தப் பதிவு உருவான சிந்தனையைப் பதிவின் முடிவில் தெரியும் மனசாட்சி... சரி இப்போ விசயத்திற்கு வா... மிருகங்களிடமிருந்து மனிதன் வந்தவன் என்றாலும், அவனை விலங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது கைகள் அல்லவா...? நான்கு கால்களிடமிருந்து நிமிர்ந்த மனிதன், இரண்டு கால்களை கைகளாக மா(ற்)றிய பிறகு தான் உழைப்பு என்பதே உருவாகத் தொடங்கிச்சி... தனக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் என எல்லா நிலைகளிலும் தன்னிறைவு பெற, அவன் கைகளையே முதன்மை கருவிகளாகப் பயன்படுத்தத் தொடங்கினான்... ஆதிமனிதன் சிக்கிமுக்கி கற்களை உரசி நெருப்பை உருவாக்கியது முதல், இன்று கணினியில் உலகையே வலைப்படுத்தி நிற்பது வரை கைகளே முதன்மை ஆதாரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கு...! கல்லுடைக்கும் கடின வேலை முதற்கொண்டு, ஓவியம் வரையும் நுட்ப வேலை வரை கைகள் இல்லையென்றால் எதுவுமே கை வராம போயிடும் என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை...!

பொதுவா மனிதனுக்கு மூளை தலையில் இருக்குன்னு சொல்வோம்... ஆனா செயல்படும் திறத்தை வைத்துப் பார்த்தா, மனிதனுக்கு மூளை கைகளையே இயங்குதளங்களாகக் கொண்டு செயல்படும் அதிசயத்தைப் பார்க்கிறேன்... ஆற்று நீரைத் தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே... ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே... சேற்றில் ஓடி நாற்று நட்டுக் களை எடுக்கும் கைகளே... செக்க வானம் போல என்றும் சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே... // பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே... பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே... பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே... பச்சை ரத்தம் வேர்வையாகப் படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே... உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே... உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே... உண்டாக்கும் கைகளே...

© தனிப்பிறவி கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1966 ⟫

நல்ல பாட்டு மனசாட்சி... உழைப்பது, உணவீட்டுவது, சமைப்பது, சாப்பிடுவது, எழுதுவது, வரைவது, தூக்குவது என்று எந்தச் செயல்களுக்கும் கைகளே ஆதாரங்கள்... அதனால் தான் வாழ்க்கையிலும் கை இருக்கிறது, நம்பிக்கையிலும் கை இருக்கிறது, இயற்கையிலும் கை இருக்கிறது, செயற்கையிலும் கை இருக்கிறது... பறக்கிற பறவை இறக்கையிலும் கை இருக்கிறது... அதனால் நம் வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளும் "நம் கையில் இருக்கின்றன" என்று கூறுகிறோம்...

© இன்றுபோல் என்றும் வாழ்க முத்துலிங்கம் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1977 ⟫

அன்புக் கை இது ஆக்கும் கை, இது அழிக்கும் கையல்ல... சின்னக் கை ஏர் தூக்கும் கை, இது திருடும் கையல்ல...2 நேர்மை காக்கும் கை, நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை - இது ஊழல் நீக்கும் தாழ்வைப் போக்கும் சீர் மிகுந்த கை... இது நாட்டைக் காக்கும் கை... உன் வீட்டைக் காக்கும் கை... இந்தக் கை நாட்டின் நம்பிக்கை... இது எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை2 (படம் : இன்று போல் என்றும் வாழ்க) புகையிலும் கை இருக்கிறது, பகையிலும் கை இருக்கிறது ← இவற்றால் உருவாகும் அழுகையிலும் கை இருக்கிறது ! எப்பூடி...? ஹா... ஹா...

அது சரி... உன் சிரிப்பிலும் இருக்கிறது, என்றும் இருக்க வேண்டும்... "இருக்கும்" வரை தேவை : புன்னகை... இப்போ கதை சொல்லும் நேரம் :-

ஒரு ஊருக்கு ஒரு சாமியார் வந்திருந்தார்... அவர் எல்லாம் தெரிந்த ஞானி... அவரிடம் என்ன கேள்வி கேட்டாலும் உடனே சரியான பதிலைச் சொல்லி விடுவார் என்று ஊரெங்கும் ஒரே பேச்சு... இரண்டு இளைஞர்கள் சந்தித்துக் கொண்டனர்... "ஊருக்கு எல்லாம் தெரிந்த ஞானி வந்திருக்கிறாராமே... எந்த கேள்வி கேட்டாலும் துல்லியமாகப் பதில் சொல்லும் அறிவாளியாமே அவர்... அவரை நாம் இரண்டு பேரும் சேர்ந்து முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபடுவோமா...?" என்று திட்டமிடத் தொடங்கினர்... ஒரு இளைஞன் ஒரு சிட்டுக்குருவியைப் பிடித்து தன் உள்ளங்கையில் வைத்து, மற்றொரு கையால் மூடிக் கொண்டான்... இப்போது இருவரும் ஞானி முன்னால் போய் நின்று, கைகளை மூடி வைத்திருந்த இளைஞன், "இப்போது என் கைகளுக்குள் ஒரு குருவி இருக்கிறது... அது இறந்து போய் இருக்கிறதா....? இல்லை உயிரோடு இருக்கிறதா...?" இதைக் கேட்ட ஞானி சிரித்தார்... "மகனே... அது உயிரோடு இருப்பதும், இறந்து போவதும் உன் கைகளில் இருக்கிறது... உயிரோடு இருக்கிறது என்று நான் சொன்னால், கைகளால் அதை அழுத்தி இறந்து போனதாகக் காட்டுவாய்... இறந்து போய் இருக்கிறது என்று நான் சொன்னால், அப்படியே அழுத்தாமல் உயிரோடு காட்டுவாய்... எல்லாம் உன் கைகளில் தான் இருக்கிறது..." என்றார் ஞானி... திகைத்துப் போயினர் இளைஞர்கள்... மேலும் ஞானி சொன்னார், "இந்தக் குருவிக்கு மட்டுமல்ல... நம் வாழ்க்கையின் உயர்வும், தாழ்வும் நம் கைகளில் தான் இருக்கிறது... அவற்றை ஆக்க சக்தியாகப் பயன்படுத்தப் போகிறோமா...? அழிவு சக்தியாக வீணடிக்கப் போகிறோமா...? என்பதும் நம் கைகளிலேயே இருக்கிறது...!"

நண்பர்களே... கீழுள்ள இரு காணொளிகளும் தண்ணீர் பற்றித்தான்... முதலாவது சேமிப்பது, இரண்டாவது சீரழிவது... நம்ம பதிவர்களின் கை வந்த கலைகள் : 1) அஞ்சா சிங்கம் ← செல்வின் அவர்களின் செல்வமான குறும்"பாடம்"...! 2) ஸ்கூல் பையன் ← கார்த்திக் சரவணன் அவர்களின் 1.42 நிமிடங்களில் அதிகாரம் 93...! (என்னவென்று படியுங்களேன்...)

ஆக்க சக்தியாகப் பயன்படுத்தப் போகிறோமா...?


அழிவு சக்தியாக வீணடிக்கப் போகிறோமா...?


யாருப்பா அது...? புது குறும்பு படமா...? என்னது சம்சாரம் - சிக்கனம் பற்றியா...? ஓ...சாரி... மின்சார சிக்கனத்தைப்பற்றியா...? வாழ்த்துகள்...
நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. கை தான் என்று சாதரணமாக இருப்பவர்களுக்கு நம்பிக்கையையும் , புன்னகையையும் ஒருசேர பின்னியதுபோலிருந்தது தங்களின் கைஜாலம் அண்ணே !பின்னூட்டம் இடுவதும் கைகள் தான் . இதை விட்டுவிட்டீர்களே அண்ணா !

    கடைசி தண்ணீர் மேட்டரும் தண்ணீ மேட்டரும் சூப்பர் ! நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன் !

    இனிய காலை வணக்கங்களுடன் ,
    மெக்னேஷ்

    தம+

    பதிலளிநீக்கு
  2. கை கை என்றதும் ... ஒருவேளை காங்கிரஸில் செர்ந்துவிட்டீர்களோ என்று நினைத்தேன் .

    நல்ல பதிவு .. ரசித்து படித்தேன் ..

    பதிலளிநீக்கு
  3. கதையை மிகவும் ரசித்தேன். மிக லகுவாக செய்திகளைத் தந்து உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் தங்களின் பாணியே தனிதான். கதையின் ஊடே கருத்து. கருத்தின் ஊடே கதை. இது உங்களால் மிகவும் சாத்தியமாகும் என்பதை உங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படிப்போர் அறிவர். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. DD அண்ணாச்சி
    கைய வச்சா அது
    ராங்கா போனதில்லை.
    அசத்தல் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. உழைக்கும் கைகளின் உயர்வை அழகுற சொன்னீர்கள்...

    பதிலளிநீக்கு
  6. தொட்டால் தொடரும் குறும் படத்தை ரசித்தேன் ,உங்க கைக்கு ஆதரவான படம்தான் :)
    த ம 6

    பதிலளிநீக்கு
  7. முதல் குறும் படம் அதிர வைக்கின்றது.

    வள்ளுவர் அருளிய சிற்றினம் சேராமை என்பதை சிந்தைக்குள் வைப்பதே சிறப்பு.

    கை வந்த கலை - என பதிவுலகைக் கட்டிப்போடும்
    தங்கள் கை - தங்கக் கை!..

    பதிலளிநீக்கு
  8. கைகள் தாம் என்னல்லாமோ செய்கின்றன. நாம் நினைப்பதை அது தான் செயல் படுத்துகிறது. நம்பிக்கை,புன்னகை, இயற்கை,செயற்கை ஆஹா...வாழ்க்கையிலும் கை இருக்கிறது. கலகலன்னு எழுதுற உங்க பாணி அருமை.

    குறும்படம் 2 ஓபன் ஆகவில்லை. பிறகு முயன்றுபார்க்கிறேன். நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  9. சிந்திக்க வைக்க சிறந்த பகிர்வு அருமை.
    இரு குறும்படங்களும் நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. தண்ணீர் பற்றிய காணெலிகள் அருமை... சாமியார் கதை நல்ல தகவல்

    பதிலளிநீக்கு
  11. அருமை சகோ

    எனக்கு எம்ஜியார் பாடின இது நாட்டைக் காக்கும் கை இன்று வீட்டைக்காக்கும் கை என்ற பாட்டு ஞாபகம் வந்தது. :)

    பதிலளிநீக்கு
  12. தங்கள் உழைப்பில் உருவான படைப்பு தங்கள் கைகளின் மேன்ம்னையைக் காண்பிக்கிறது. உயர் சிந்தனைகள் தொடரட்டும். நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  13. கருத்துக்களும் குறும் படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
  14. குறும்படம் , கை கை , எல்லாம் மிக அருமை, வோட் டன்

    பதிலளிநீக்கு
  15. எத்தனை கேள்விகள் பதில்கள்
    அத்தனையையும் அறிவு பூர்வமானது.
    மிகச் சிறப்பு. கை..கை...
    அறிகை நன்று பாராட்டுகள்
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  16. இரண்டு குறும்படங்களும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி! பதிவை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  17. மகிழ்வுடன் இருப்பனே அறிவாளி என்று நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள். இந்தப் பதிவு மேலோட்டமாக பார்த்தால் நகைச்சுவையாகத் தோன்றினாலும் மிக்க ஆழமான கருத்தினை முன்வைக்கும் பதிவு.

    வழக்கம் போல் பாடலுடன் சுவையாக இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி

    God Bless You

    பதிலளிநீக்கு
  18. இதற்கு பெயர் தான் கருத்துள்ள பதிவுன்னு சொல்றதா?
    நம்பிக்கை - இதில் கை இல்லையென்றால் அர்த்தமே இல்லையே.
    அந்த கதை அருமை.

    பதிலளிநீக்கு
  19. நல்லதொரு சிந்தனைக்குறிய பதிவு நண்பரே... வழக்கம்போல தங்களது பாணியில்... வாழ்த்துகள்

    குறும்படங்கள் அருமையான சிந்தனை.

    முதல் குறும்படத்தில் அந்த நான்கு பேரும் ந(க)டந்து போனபிறகு அந்த பேக் உள்பட அனைத்து பொருள்களையும் (பிணத்தைப்போல்) அனாதையாக கிடப்பது போல் காண்பித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    தமிழ் மணம் எங்கே ? எல்லாருடைய தளமும் இப்படித்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  20. பாடல்களைத் தேர்வு செய்துவிட்டுப் பதிவு எழுதுகிறீர்களா இல்லைப் பதிவுக்காகப் பாடல்களைத் தேடுகிறீர்களா? இப்போதெல்லாம் வலை உலகின் கவனம் குறும் படங்கள்பால் இருக்கிறதோ.?எப்படி இருந்தாலும் ரசித்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. அருமையான பதிவு! டிடி !எப்போதுமே அருமைதானே தங்கள் பதிவுகள்!!!! ரசித்தோம்.....கைகளாலே தட்டுகின்றோம் எங்கள் கருத்தை!

    பதிலளிநீக்கு
  22. கை தொடர்பான பாடல்கள் அருமை. குட்டிக் கதையும் கை சமந்தப் பட்டது. உங்கள் கைப் பக்குவம் அபாரம்

    பதிலளிநீக்கு
  23. நம் கையில் தான் எல்லாம் இருக்கிறது என்பது ரொம்பவும் உண்மை. குறும்படங்கள் இரண்டுமே நிறைய யோசிக்க வைத்தன. நீருக்காக நாளை கொலைகூட நடக்குமோ? நினைப்பே அதிர வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம்
    அண்ணா.

    நல்ல பாடல் விளக்கமும் வள்ளுவரின் வாக்கும் குட்டிக்கதையும் குறும்படம் எல்லாம் இரசித்தேன்... அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  25. கை பற்றிய பகிர்வு அருமை.குறும்படங்கள் சிந்திக்க வைக்கும் கருக்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. கை எவ்வளவு முக்கியம்....!!!
    அருமையான பதிவு தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  27. தன் கைதான் தனக்குதவி என்பார்கள்!

    பதிலளிநீக்கு
  28. சிந்தனையைத் தூண்டும் உயர்தரமான பகிர்வு!.. வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  29. கதையும் கதை சொல்லும் செய்தியும் அருமை

    பதிலளிநீக்கு
  30. தமிழ்நாட்டில் ஏன் ? குடிக்கிறோம் என்று கேட்காமல் குடிக்கிறார்கள் ஐயா...!!

    பதிலளிநீக்கு
  31. எப்படித்தான் இப்படி விலாவாரியா பதிவு எழுதறீங்களோ தெரியலை?!

    பதிலளிநீக்கு
  32. பாடம் புகட்டும் அருமையான குட்டிக்கதை. வழக்கம் போல அருமையான பாடல் வரிகள் விளக்கங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  33. ஞானி சொன்ன விளக்கத்திற்கு, நீங்கள் சொன்ன தத்துவம் சிந்திக்க வைத்தது.
    த.ம.21

    பதிலளிநீக்கு
  34. மெல்ல வந்தாலும் மெல்லிசையோடு வந்துவிடுகிறீர்கள் வலைச்சித்தரே!
    இப்பாழுது காணொளிக் காட்சியோடு..........!!!
    அருமை அருமை!
    எப்படித்தான் இவ்வளவு பாடல்களைச் சூழ்நிலைக்குத் தக்க எடுத்தாள்கிறீர்களோ?
    ஆச்சரியம் தான்.
    நன்றி
    த ம 24

    பதிலளிநீக்கு
  35. சிந்தனையைத்தூண்டும் கருத்துக்களுடன் ஒரு அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  36. தங்கள் கைக்கு இது எல்லாம் கை வந்த கலைதான்.

    பதிலளிநீக்கு
  37. உங்கள் பதிவு எப்பவுமே தாங்கள் எழுதும் கருத்தோடு தொடர்புடைய பாடலகளுடன் அருமையாக இருக்கும்... இதுவும் அப்படியே...

    குறும்படங்கள் இரண்டும் முன்னரே பார்த்து ரசித்திருக்கிறேன்...

    அருமை அண்ணா....

    பதிலளிநீக்கு
  38. மூளையின் கட்டளையில்தான் கைகள் இயங்குவதாக கேள்வி..????

    பதிலளிநீக்கு
  39. சிறந்த வழிகாட்டல்
    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  40. தன் கையே தனக்கு உதவி என்று காந்தி சொன்னதும் ஞாபகம் வருகிறது.

    என்ன சொன்னாலும் கையையும் இயங்க வைப்பது மூளைதான்.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் சகோதரரே.!

    ஆழமான சிந்தனைகளை தூண்டும் நல்லதோர் பதிவு.ரசித்தேன்.குருவிக் கதையின் கருத்தும்,நம்பிக்கையூட்டும் பாடல்களுமாக, இத்தனை சிறந்த பதிவை தங்களால் மட்டுமே தர முடியும். அருமையாக பகிர்ந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  42. காசு.பணம் உள்ளவர்கள்தான் சந்தோசமாக இருப்பதாக... சொல்லும்போது.... கேள்வி கேட்டுக் கொண்டெ இருக்கும் முட்டாப்பயலுகதான் சந்தொசமாக இருப்பதாக கூறுவது....??????

    பதிலளிநீக்கு
  43. அன்புள்ள அய்யா,

    பாட்டுச் சித்தரே! ‘கை வந்த கலை...’ வலைச்சித்தருக்கு கை வசப்படும் திரைப்படப் பாடல்கள் அனைத்தும் முத்துமுத்தான சத்தான கருத்துள்ள பாடல்கள் கொடுப்பதில் வல்லவராயன் நீங்கள்!

    பல கைகளைக் காட்டி பகுத்தறிவுப் பலகையைச் செதுக்கியது அருமை.

    குறும்படம் தண்ணீருக்காக நாளை உலகம் என்ன செய்யும் என்று காட்டியிருப்பது...? இயக்குநருக்கு பாராட்டுகளோடு அதை நாங்கள் பார்க்க நீங்கள் காட்டியிருப்பதற்கு நன்றி.

    ‘தொட்டால் தொடரும்’ என்று காட்சிபடுத்தியிருப்பதும் நன்றாக இருந்தது. அந்த இயக்குநருக்கும் பாராட்டுகள்.

    காவியக்கவிஞர் வாலி தலைமையில் நடந்த கலைஞருக்கு அண்ணா விருது வழங்கியதைப் பாராட்டி நடந்த கருத்தரங்கை மீண்டும் பார்க்கின்ற அரிய வாய்ப்பை அளித்ததற்கு... அனைவரின் பேச்சையும் இரசித்து மீண்டும் கேட்ட வைத்ததற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கவிஞர் வாலியைப் பார்க்கின்ற பொழுது அவர் மறைந்ததே ஞாபகம் வரவில்லை! எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அதிகப்பாடல்கள் எழுதிய கவிஞர் மறைந்த பொழுது... அவரைப் பெருமைப்படுத்த தமிழகம் மறந்த நிகழ்வை நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது!
    அருமையான பதிவு!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் வலைப் பூ நண்பரே!
    எனது (புதுவைவேலு), "கவி ஒளியை" YOU TUBE ல் ஓளி ஏற்றி, ஒலிக்கச் செய்த
    'சுப்பு தாத்தா' அவர்களுக்கு அன்பு வணக்கம், மிக்க நன்றி!

    பாடலை கேட்டு மகிழ வாருங்கள் நண்பர்களே!

    இணைப்பு:

    http://youtu.be/KBsMu1m2xaE

    .www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  45. தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். காண வாருங்கள்.http://blogintamil.blogspot.com/2015/02/1.html

    பதிலளிநீக்கு
  46. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  47. சிந்திக்க வைக்கும் மிகச்சிறப்பான பகிர்வு.

    அது தங்களுக்கு ஓர்

    ’கை வந்த கலை .....’ :)

    பதிலளிநீக்கு
  48. இரண்டையும் பார்த்தேன். முதல்படம் “தண்ணீர்“ ஏதோ பாலையில் நடப்பதாக உள்ளது அது மருத, முல்லையிலும் நடக்கும் என்பதை உணர்த்தியிருந்தால் இயல்பாக இருந்திருக்கும்
    முடிவு அழகான அருமை.
    இரண்டாவது “தண்ணி“ பற்றிய படமும் நல்லாத்தான் இருந்தது, இன்னும் இதைச் சிறப்பாக எடுத்திருக்கலாம்.
    உங்கள் பாணி பாடல்கலந்த “கலக்கல்” அருமை வலைச்சித்தரே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.