🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உனக்குள் ஒருவன்... உணர்ந்தால் இறைவன்… (பகுதி 3)

வணக்கம் நண்பர்களே... "இருளில் விழிக்கின்றாய், எதிரே இருப்பது புரிகின்றதா ? இசையை ரசிக்கின்றாய், இசையின் உருவம் வருகின்றதா ? உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகின்றதா ? வெளியே தெரிகின்றதா ? கடவுள் இருக்கின்றார், அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா ? காற்றில் தவழுகிறாய், அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா? கண்ணுக்குத் தெரிகின்றதா...?" (படம்: ஆனந்த ஜோதி)


முந்தைய பதிவான (பகுதி 2)-யை ரசித்துப் பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

புதிதாக என் தளம் வருபவர்களுக்கு : (மற்ற நண்பர்கள் பாடல் வரிகளை ரசிக்கச் செல்லலாம்) நண்பர்களே... தெய்வம் இருப்பது எங்கே ? இந்தப் பதிவு எழுதும் போது, என் மனதில் பல பாடல் வரிகள் தோன்றின. அவற்றில் எனக்குப் பிடித்த பாடல் வரிகளை மிக்ஸ் செய்து (DD Mix - Dindigul Dhanabalan Mix) வெளியிட்டேன்.. அதற்கு முன்... அந்தப் பதிவைப் படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கி, படித்து / கேட்டு விட்டு வந்து, இந்தப் பாடல் வரிகளைப் படித்தால், பாடல்களின் மகத்துவத்தை அறியலாம். நீலக்கலரில்-அருமை வரிகள், என் கருத்துக்கள் எழுதினால் பதிவு நீளமாகி விடும் என்பதால், சிவப்புக் நிறத்தில் - நான் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுகிறேன்...

15. படம் : தசாவதாரம், முதல் வரி : ஓம் நமோ நாராயணா‌...

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது... கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது... எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்... ஐந்தில் எட்டு ஏன் கழியாது..? அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு பஞ்சராக்ஷரம் பார்க்காது... /// சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது... தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது... ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்... ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுத்தம் தான்...

கனவில் தோன்றிடும் காசும் பணமும் கைதனில் கிடைத்திடுமா...? கலை வான் நிலவைக் கவர்ந்திட நினைக்கும் காரியம் முடிந்திடுமா...? எண்ணம் போலவே எதுவும் நடந்தால் இறைவன் இல்லையடா... ஆஹாஆ... எண்ணம் போலவே எதுவும் நடந்தால் இறைவன் இல்லையடா... இக மீதில் நீ இருக்கும் வரை தான் இத்தனை தொல்லையடா... இத்தனை தொல்லையடா... (படம் : திருமணம்)

16. படம் : மணியோசை, முதல் வரி : தேவன் கோவில் மணியோசை

பாவிகள் மீதும்... ஆண்டவன் காட்டும்... பாசத்தின் ஓசை மணியோசை... தேவன் கோவில் மணியோசை... நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை...

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்... அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்... என் இறைவன் அவனே அவனே எனப் பாடும் குரல் கேட்டேன்... என் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்... (படம் : பாலும் பழமும்)

17. படம் : தியாகம், முதல் வரி : நல்லவர்க்கெல்லாம்...

ஆண்டவன் அரிய நெஞ்சில் - ஒரு துளி வஞ்சம் இல்லை... அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை... மனிதனம்மா மயங்குகிறேன், தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே - தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே... நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - ஒன்று மனசாட்சி - ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா... நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் - தெய்வத்தின் காட்சியம்மா - அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா - அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா...

தெய்வம் என்றால் அது தெய்வம்-அது சிலை என்றால் வெறும் சிலை தான்... உண்டென்றால் அது உண்டு... இல்லை என்றால் அது இல்லை... இல்லை என்றால் அது இல்லை... (படம் : பார்த்தால் பசி தீரும்)

18. படம் : அன்பே சிவம், முதல் வரி : யார் யார் சிவம்... நீ... நான்... சிவம்...

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா... மனதின் நீளம்... எதுவோ... அதுவே... வாழ்வின் நீளமடா... அன்பே சிவம்... அன்பே சிவம்...

அன்பில் வாழும் இதயம் தன்னை, தெய்வம் கண்டால் வணங்கும்... ஆசை இல்லா மனிதர் தன்னை, துன்பம் எங்கே நெருங்கும்..? பொன்னில் இன்பம், புகழில் இன்பம்-என்றே நெஞ்சம் மயங்கும்... பூவைப்போலே சிரிக்கும் உன்னைக் கண்டால் உண்மை விளங்கும் ! (படம் : உலகம் சுற்றும் வாலிபன்)

19. படம் : சரஸ்வதி சபதம், முதல் வரி : தெய்வம் இருப்பது எங்கே...?

ஆடை அணிகலன்... ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை... அங்கொரு கண்ணும்... இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை... இசையில், கலையில், கவியில், மழலை... மொழியில் இறைவன் உண்டு... இவை தான் தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு...

பட்டம் பதவி பெற்றவர் மட்டும் பண்புடையோராய் ஆவாரா...? பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர் பகுத்தறிவின்றிப் போவாரா...? ஒருவன் மனது ஒன்பதடா... அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா... உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா... அதில் உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா... (படம் : தர்மம் தலை காக்கும்)

20. படம் : அகத்தியர், முதல் வரி : தாயிற் சிறந்த கோயிலுமில்லை... தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை...

தாயிற் சிறந்த கோயிலுமில்லை... தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை... ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை... அன்னை தந்தையே அன்பின் எல்லை... தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம், தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்... மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்...

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்... அந்தப் பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்... கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்... குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று... குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று... நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று... ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று... (படம் : குழந்தையும் தெய்வமும்)

21. படம் : நல்லவன் வாழ்வான், முதல் வரி : ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்...

சத்தியத்தின் எல்லையிலே... உயர் சமரச நெறிகளிலே... அன்பின் சக்தியிலே... தேச பக்தியிலே... உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே... ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்... அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்... ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்... அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்.

ஒன்றே குலமென்று பாடுவோம்... ஒருவனே தேவன் என்று போற்றுவோம்... அன்னை இதயமாக, அன்பு வடிவமாக... வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்... கடவுளிலே கருணை தன்னைக் காணலாம்... அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்... நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்... அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம்... (படம் : பல்லாண்டு வாழ்க)

அப்பாடா... நிம்மதி...! பாட்டுக்கு எதிர்ப்பாட்டுப் பாடல்களைத் தேர்வு செய்வதில் தான் இந்த நிறைவுப் பகுதி முடிக்கத் தாமதம்... நண்பர்களே... தெய்வம் இருப்பது எங்கே ? - இந்தப் பதிவிற்கான பாடல்கள் முடித்து விட்ட மகிழ்ச்சி, திருப்தி...


கடைசிப் பாட்டிலே என்னைக் கூப்பிட்ட மாதிரி இருந்தது... அதான் வந்தேன்... நிம்மதி, மகிழ்ச்சி, திருப்தி இதெல்லாம் இருந்தால் தெய்வமெல்லாம் தெரியாது - இன்றைக்கு...! சிந்திக்கவும் சிரிக்கவும் கூட நேரம் இல்லாமல் உழைச்சிப்பாரு... அந்த வேர்வையில் எல்லாத்தையும் உணரலாம்... அதான் பாட்டிலே எல்லாம் சொல்லிட்டாங்க... மறதியில் கூட தெய்வம் இருக்கிறது என்று சமாளிக்காதே...! பதிவின் தலைப்பே போதும்...!

நன்றி தெய்வமே... (மனமே)

உனக்குள் ஒருவன்... உணர்ந்தால் இறைவன்...

உழைப்பு பற்றிய பகிர்வு அறிய இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன், இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. எல்லாமே அருமை. பகுத்தறிவுக் காலத்தில் அந்தக் கட்சியில் இருந்த காலத்திலேயே கடவுள் இருக்கின்றார் கண்ணுக்குத் தெரிகின்றதா என்று பாடிய எம் ஜி ஆர் ஆச்சர்யம்!

    பதிலளிநீக்கு
  2. கூகுள் நிறுவனம் நிறைய
    மென்பொருட்களை இணையப்பயனாளர்களுக்கு
    வழங்கி வருகிறது..
    அதில் ஒன்றுதான்
    இங்கே குறிப்பிடப்படும் Google Input Tool For
    Windows “இலவச தமிழ் தட்டச்சு கருவி”யாகும்..

    இதனைத் தரவிறக்குமுன்,
    இதிலுள்ள
    நன்மைகளைப்பற்றி அறிந்து கொள்வோம்..

    1) இதனை ஒருமுறை தரவிறக்கி கணினியில்
    பதிந்துகொண்டால் போதுமானது..
    பின் எப்போதும்
    இதனை இயக்க இணைய இணைப்பு அவசியப்படாது..

    2) மேலும் இது கைப்பேசி-யில் குறுந்தகவல்
    அனுப்பவது போல் நாம் ‘தங்லீஷ்’-ல் தட்டச்சு செய்தால்
    தமிழில் தெரியும்..
    (எ-கா) Amma = அம்மா

    3) இதில் எழுத்துப்பிழை என்பது அறவே வராது..
    நாம் தவறாக தட்டச்சு செய்தாலும் அதை சரியான
    வார்த்தையாக மாற்றிகொள்வதே இதன்
    தனிச்சிறப்பாகும்..

    4) மேலும், இந்த மென்பொருளின் அளவு 1 MB –க்கும்
    குறைவாகும்..

    5) இதனை நாம் மற்ற எந்த எழுத்து மென்பொருட்களிலும்
    உபயோகிக்கலாம்.
    (எ-கா) MS Word, Notepad etc.,
    இந்த இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்ய
    கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்..

    http://www.google.com/inputtools/windows/index.html
    Google Input Tools for Windows
    www.google.com
    Google Input Tools for Windows is an input method editor which allows users to enter text in any of the supported languages using a Latin (English / QWERTY) keyboard. Users can type a word the way it sounds using Latin characters and Google Input Tools for Windows will convert the word to its native...

    பதிலளிநீக்கு
  3. அண்ணே!
    உங்களுக்கு எத்தனை பாட்டுக்கள் அத்துபடி!

    அதுதான்-
    சிறப்பான-
    எழுத வைக்குது-
    இப்படி!

    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே அருமையான பாடல்கள். தொகுத்துத் தந்தமைக்கு நன்றி! இவைகளை கேட்ட காதால், இப்போது பொருளில்லா காதை கிழிக்கும் ஓசையுடன் கூடிய பாடல்களை கேட்பது நம் துரதிர்ஷ்டமே!

    பதிலளிநீக்கு
  5. பாட்டும் எதிர்ப்பாட்டுமாக அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. பொருள் பொதிந்த பாடல் அந்நாளில் கேட்டு மகிழ்ந்தவை!

    பதிலளிநீக்கு
  7. தொகுப்பு அருமை. ஒவ்வொரு பாடலுக்கேற்ற எதிர்பொருள் அமைந்த பாடல்களையும் தொகுத்திருப்பது, உங்களுடைய ஆழமான ஈடுபாட்டை காட்டுகிறது.

    உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம். ஒவ்வொரு பாடலையும் நன்கு கேட்டு உள்ளுணர்ந்து பொருளுணர்ந்தால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும்.

    அந்த வகையில் நீங்கள் சிறப்புடையவர்.

    வாழ்த்துகள்..!!

    பதிலளிநீக்கு
  8. நல்ல தொகுப்பு.. ரசிச்சு எழுதியிருகீங்க நண்பா..

    பதிலளிநீக்கு
  9. காற்றில் தவழுகிறார் அது உன் கண்ணுக்குத் தெரிகிறதா..கண்ணுக்குத் தெரிகிறதா..
    ''இவை மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் வரிகள். மிகவும் நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  10. இப்படியெல்லாம் உங்களுக்குதான் யோசிக்க தோனும். எங்களூக்கு வெகு தூரம். அருமையான தொகுப்பு பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. பாட்டுகளின் பல்கலைகழகம் சார் நீங்க !உங்கள் ஞானம் சார் !

    பதிலளிநீக்கு
  12. எனக்கு தெரிந்து பாடல்களை வைத்து அழகான பதிவுகளை எழுதுவது நீங்கள் மட்டுமே.... அருமை

    பதிலளிநீக்கு
  13. அருமையான வரிகளை அற்புதமாகத் தொகுத்து.... பிரமாதம்!

    பதிலளிநீக்கு
  14. அருமை
    திண்டுக்கல்லாரே

    ஆனால்கண்ணிலே
    அன்பிருந்தால்தான்
    கல்லிலே தெய்வம் வரும்.

    மனதில் ஆசைகளோடுதான்
    அனைவரும் கடவுளை அணுகுகின்றனர்

    அன்பு வடிவமான கடவுளை
    அன்பிற்காக யாரும் வணங்குவதில்லை.

    மனதிலே ஈரம் இருந்தால்தான்
    சொல்லில் இனிமை வரும்.
    பிற உயிர்களை நேசிக்கும் பண்பு வரும்.

    உயிர்களை இரக்கமின்றி கொன்று தின்னும் கூட்டம்
    இரக்கத்தை பற்றி
    உபதேசம் செய்கிறது

    அப்பாவி மக்களை கொன்று குவிப்பவன் ஜீவ காருண்யத்தை
    பற்றி வாய் கிழிய பேசுகிறான்.

    இல்லையேல் வெறும் வார்த்தை ஜாலங்கல்தான்.
    கேட்டு ரசித்து மறந்து போக

    அதனால்தான் இறைவன் படைத்த இன்புலகம் துன்பமயமாக பலருக்கு காட்சியளிக்கிறது.

    இருந்தும் இறைவன் படைத்த இந்த உலகம் இன்பமயமானதுதான். உள்ளத்தில் கள்ளமில்லா தவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
  15. பாட்டுக்கள் தேர்வு அருமை.
    அதற்கு எதிர்ப்பாட்டு எல்லாம் மிக பொருத்தம்.
    எல்லா பாடல்களும் இறைவன் இருப்பதை எங்கும் நீக்கமற இருப்பதை உணர்த்தும் பாடல், உணர்ந்த பாடல்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  16. பாட்டு- எதிர்பாட்டு கலக்கிட்டிங்க..ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  17. எத்தனை எத்தனை பாடல்கள்!
    ஆயிரமாயிரம் அர்த்தங்கள்!

    பழைய அர்த்தம் நிறைந்த பாடல்களின் வரிகள் மறுபடி படிக்கக் கிடைத்தது உங்கள் இந்தப் பதிவின் மூலம்.

    பதிலளிநீக்கு
  18. பாட்டும் எதிர்ப்பாட்டும் மிகவும் ரசித்துப்பாடவைத்து சிந்திக்கவைத்தன . அருமையான பகிர்வுக்ளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  19. அருமை. உங்கள் தளம் மிக அருமை. உறுப்பினராகிவிட்டேன்.

    இப்படிக்கு,

    தமிழ் பிரியன்

    பதிலளிநீக்கு
  20. பாட்டு- எதிர்பாட்டு சிறப்பான பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. அனைத்துப்பாடல்களும் மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. இதைத்தான் எசப்பாட்டு அப்படிங்கிறாங்களோ!!

    பதிலளிநீக்கு
  23. பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சிக்கு போன திருப்தி அப்பப்பா என்ன அருமையான பாடல்கள் கருத்துள்ள வரிகளும் கூட எத்தனை பொறுமையாக பகிர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றிங்க சகோ.

    பதிலளிநீக்கு
  24. உபோயோகமான செய்தி . நான் இந்த டூலை தான் பயன்படுத்தி வருகின்றேன் . நன்றி ரிஷி.

    பதிலளிநீக்கு
  25. பாடல்காளாக கேட்டபோது உணரமுடியாதாதை .. பாடல் வரிகளை படிக்கும் பொது உணர முடிந்தது . அருமை அண்ணா ...!

    பதிலளிநீக்கு
  26. manathukku amaithiyum ookkamum tharum varigal.visit my blog kaliaperumalpuducherry.blogspot.com. Expecting your comments and suggestions

    பதிலளிநீக்கு
  27. அருமையான பாடல் வரிகளின் தொகுப்பும் உழைப்பும் பிரமாதம்! ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க பாடிப் பறக்கிறது மனம்.

    பதிலளிநீக்கு
  28. அருமையான எசப்பாட்டுத் தொகுப்பு.
    நினைவுப்பேழை அற்புதம்.

    பதிலளிநீக்கு
  29. மனதைவிட்டு நீங்காத அற்புதமான பாடல்வரிகள்.
    அனைத்துப் பாடல்களும் இறைவன் எங்கும் எதிலும் நிறைந்திருப்பதை உணர்த்தும் பாடல்கள்.
    அருமை!சிறந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. நல்ல தேடுதல் நல்ல பரிந்துரை என்று சொல்வதா எடுத்துகாட்டு என்று சொல்வதா பாடலுக்கு பாடல் அருமையான பாடல்கள் நல்ல பகிர்வு நன்றி

    பதிலளிநீக்கு
  31. மனதில் என்றும் நிற்கும் பாடல்களை வைத்து பாட்டும், எதிர்பாட்டுமாக கலக்கிட்டீங்க தனபாலன்! ஸ்ரீராமுக்கு - வாத்யார் என்றுமே கடவுள் இல்லைன்னு சொன்னவரே இல்லியே...!

    பதிலளிநீக்கு
  32. அருமையான தொகுப்பு தனபாலன் ஐயா.
    ஆனால் ஒவ்வொரு பாடலுமே அந்த அந்த நேரத்தில் இன்பம் கொடுப்பவை!
    அதனை எடுத்து அதே சமயம் எதிராக உள்ள கருத்தையும் எடுத்துப் பதிய வைத்திருப்பது புதுமையான முறை.
    அருமை அருமை..
    வாழ்த்தி வணங்குகிறேன் தனபாலன் ஐயா.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம்
    தனபால் (அண்ணா)

    கருத்துக்கள் நிறைந்த முத்தான பாடல்கள் மூலம் இணைய உலகுக்கு பல இதிரும் புதிருமான கருத்தை அள்ளி விதைத்து விட்டடீர்கள் அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  34. எத்தனை எத்தனை பாடல்கள்! அத்தனையும் முத்துகள்!

    பாராட்டுக்குரிய படிப்பாளி; படைப்பாளி நீங்கள்!

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  35. பாட்டும் எசைப்பாட்டுமாக கலை காட்டுகிறதே தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  36. அருமையான தொகுப்பு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  37. பாடல்களால் பதிவு போடுபவர் தாங்கள் தான். அனைத்தும் நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  38. மனதில் நிறுத்தினால் நிலை எல்லாமே தெரியும்

    பதிலளிநீக்கு
  39. I don’t know how much time you took to write this post. Good work. You have great selections and comparisons of songs. Hats off to you.

    Packirisamy N

    பதிலளிநீக்கு
  40. பாடல்கள் பலவும் மனதில் புத்துணர்ச்சி தருபவை அதுவும் யார் யார் சிவம் எப்போதும் சிந்திக்கும் படைப்பு பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  41. திரைப் பாடல்களில் உங்களுக்கு இருக்கும் ஞானத்திற்கு phd செய்து ,டாக்டர் தனபாலன் என்றே போட்டுக்கலாம் !

    பதிலளிநீக்கு
  42. அனைத்துமே அற்புதமான காலத்தால் அழியாத, கருத்து நிறைந்த பாடல்கள்!பகிர்ந்தவிதம் அருமை! மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  43. அன்புள்ள தனபாலன்..

    வணகக்முடன் உறரணி.

    என்னுடைய பணிச்சூழலினால் உங்கள் தளத்திற்கும் மற்ற நண்பர்கள் தளத்திற்கும் செல்வதில் இயலாமை உள்ளது.வருத்தமாக உள்ளது. உங்களுடையதைப் பார்த்தாலும் அதுபற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளமுடியாமைக்கு நேரமின்மையே காரணம். இன்று எப்படியும் ஒதுக்கி வநதுவிட்டேன்.

    எனக்கு எப்போதும் பழைய பாட்டுக்கள் என்றால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்று கேட்க உட்கார்ந்துவிடுவேன்.உங்களுடைய இந்த பதிவில் பழைய பாட்டுக்களைத் தொகுப்பதே என்பதே பெரிய பணி. அதிலும் அவற்றை எண்ணங்களோடு ஒத்திசைய இயைந்து தருவது எத்தனை பொறுப்பான சமுகத் தொண்டு. உங்களின் பொறுப்பான உணர்ச்சியையும் அக்கறையையும் இந்தப் பதிவு எடுத்துக் காட்டுகிறது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அடிக்கடி வருவேன். நேரம் வாய்க்கையில் எழுதுவேன். நன்றி தனபாலன். உங்களின் ஆர்வமும் ஈடுபாடும் பிரமிக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  44. சிறந்த பதிவு என்பேன். தொடருங்கள் இத்தொடரை

    பதிலளிநீக்கு
  45. அருமையான பதிவு அய்யா. தொடரக் காத்திருக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  46. Mr.Dhanabalan ... I can't see ur post full view on my mobile chrome browser !!! Can u plz check for me ? am waitin for ur good reply !! Happy working :)

    பதிலளிநீக்கு
  47. அருமையானப் பாடல்கள், அதற்குச் சரியாக எதிர்பாட்டுகள் தேர்வு செய்துட்டீங்களே! :)

    பதிலளிநீக்கு
  48. தன்னையறியும் முதிர்ச்சி மட்டும் ஏற்பட்டுவிட்டால்...

    பதிலளிநீக்கு
  49. அண்ணா அனைத்து பாடலும் அருமை பதிவும் மிக அருமை எனக்கும் பாடல் எப்படி பதிவிடுவது என்பதை சொல்லி தாருங்களேன்

    பதிலளிநீக்கு
  50. மிகச்சிறந்த பாடல் வரிகள் மெய் மறந்து போக வைக்கும் இன்னிசை பாராட்டுகள் ...

    பதிலளிநீக்கு

  51. வணக்கம்!

    திரைப்படப் பாட்டின் உரையென உன்னை
    வரையறை செய்யும் மனம்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  52. தாமதமாக வந்து விட்டேன். பாடல்களை ஒப்பீடு செய்து முனைவர் பட்டம் பெற்றுவிடுங்கள்
    எனக்குத் தெரிந்து reply Comments இல்லாமல் பிறருடைய கருத்துக்கள் மட்டுமே அதிகமாக உள்ள பதிவுகள் உங்களுடையது மட்டும்தான் .பாராட்டுக்கள்.
    நல்ல உழைப்பு.முயற்சி

    பதிலளிநீக்கு
  53. நண்பரே
    தாங்கள் phd க்கு முயற்சிக்கலாமே
    அருமை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  54. காலத்தால் அழியாத மனதை விட்டு என்றுமே நீங்காத அற்புதமான பாடல்களின் வரிகளைத் தரம் பிரித்துக் கொடுத்துள்ளீர்கள். இனிமை. அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.