🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உனக்குள் ஒருவன்... உணர்ந்தால் இறைவன்... (பகுதி 1)


வணக்கம் நண்பர்களே... நாம் இன்று என் முந்தைய பதிவான தெய்வம் இருப்பது எங்கே ? என்ற பதிவிற்கேற்ற பாடல் வரிகளை வாசிப்போம்...


புதிதாக என் தளம் வருபவர்களுக்கு : (மற்ற நண்பர்கள் பாடல் வரிகளை ரசிக்கச் செல்லலாம்) நண்பர்களே... →தெய்வம் இருப்பது எங்கே ? ← இந்தப் பதிவு எழுதும் போது, என் மனதில் பல பாடல் வரிகள் தோன்றின. அவற்றில் எனக்குப் பிடித்த பாடல் வரிகளை மிக்ஸ் செய்து (DD Mix - Dindigul Dhanabalan Mix) வெளியிட்டேன்.. அதற்கு முன்... அந்தப் பதிவைப் படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கி, படித்து / கேட்டு விட்டு வந்து, இந்தப் பாடல் வரிகளைப் படித்தால், பாடல்களின் மகத்துவத்தை அறியலாம். நீலக்கலரில்-அருமை வரிகள், என் கருத்துக்கள் எழுதினால் பதிவு நீளமாகி விடும் என்பதால், சிவப்புக் நிறத்தில் - நான் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுகிறேன்...

01. படம் : மன்னன், முதல் வரி : அம்மா என்றழைக்காத உயிரில்லையே...

அம்மா என்றழைக்காத உயிரில்லையே... அம்மாவை வணங்காது உயர்வில்லையே... நேரில் நின்று பேசும் தெய்வம்... பெற்ற தாயன்றி வேறொன்று ஏது ?

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்... பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்... வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்... மேதினியில் நாம் வாழச் செய்தாள்... அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை - அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை... மண்ணில் மனிதரில்லை...
(படம் : அன்னையின் ஆணை)

02. படம் : நியூ, முதல் வரி : காலையில் தினமும் கண் விழித்தால்

காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா... அன்பென்றாலே அம்மா... என் தாய் போல் ஆகிடுமா...?

எத்தனை செல்வங்கள் வந்தாலுமே... எத்தனை இன்பங்கள் தந்தாலுமே... அத்தனையும் ஒரு தாயாகுமா... அம்மா ! அம்மா! அம்மா ! எனக்கது நீயாகுமா ?... தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்... துய‌ர‌ம் தெரிவ‌தில்லை... (படம் : தாயின் மடியில்)

03. படம் : அன்னை ஓர் ஆலயம், முதல் வரி : அன்னை ஓர் ஆலயம்

என் கண்களும், என் நெஞ்சமும், கொண்டாடும் தெய்வம், தாயே... அன்னை ஓர் ஆலயம்... அன்னை ஓர் ஆலயம்...

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்... மண்ணில் பிறக்கையிலே-பின் நல்லவராவதும்... தீயவராவதும்... அன்னை வளர்க்கையிலே...
(படம் : நீதிக்குத் தலை வணங்கு)

04. படம் : M குமரன் S/o மகாலெட்சுமி, முதல் வரி : நீயே நீயே... நானே நீயே... நெஞ்சில் வாழும்... உயிர் தீயே நீயே...

என் கண்ணில் ஈரம் வந்தால், என் நெஞ்சில் பாரம் வந்தால், சாய்வேனே உன் தோளிலே... கண்ணீரே கூடாதென்றும், என் பிள்ளை வாடாதென்றும் சொல்வாயே, அந்நாளிலே... இனியொரு ஜென்மம், எடுத்து வந்தாலும், உன் மகன் ஆகும், வரம் தருவாய்...

எல்லாம் எனக்குள் இருந்தாலும்... என்னை தனக்குள் வைத்திருக்கும்... அன்னை மனமே என் கோயில்... அவளே என்றும் என் தெய்வம்...
(படம் : பாசம்)

05. படம் : ராமு, முதல் வரி : நம்பினார் கெடுவதில்லை

நம்பினார் கெடுவதில்லை... நான்கு மறை தீர்ப்பு... நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு... பசிக்கு விருந்தாவான்... நோய்க்கு மருந்தாவான்... பரந்தாமன் சன்னதிக்கு... வாராய் நெஞ்சே..!

கிளி போலப் பேசு... இளங்குயில் போலப் பாடு... மலர் போலச் சிரித்து... நீ குறள் போல வாழு... மனதோடு கோபம், நீ வளர்த்தாலும் பாவம்... மெய்யான அன்பே தெய்வீகமாகும்... (படம் : நம் நாடு)

06. படம் : சுமைதாங்கி, முதல் வரி : மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்... உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்... யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்... மனம்... மனம்... அது கோவிலாகலாம்... மனம் இருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்... வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்... துணிந்துவிட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம்... குணம்.. குணம்... அது கோவிலாகலாம்...

பத்து மாதம் சுமந்த தாய்க்கே பணிவிடைகள் செய்கின்றோம்... பத்து வருடம் சுமந்த பள்ளிக்கு என்ன செய்ய நினைக்கின்றோம்...? இருக்கும் கோவில்கள் போதாதென்று புதிதாய் கோவில்கள் கட்டுகின்றோம்... பள்ளிகள் எல்லாம் கோவில்கள் என்பதை, ஏனோ நாமும் மறக்கின்றோம்... மீண்டும் பள்ளிக்குப் போகலாம்... நம்மை நாம் அங்கே தேடலாம்... (படம் : பள்ளிக்கூடம்)

07. படம் : அவன் தான் மனிதன், முதல் வரி : ஆட்டுவித்தால் யாரொருவர்... ஆடாதாரே கண்ணா... ஆசையெனும் தொட்டினிலே... ஆடாதாரே கண்ணா...

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்... அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்... நானிருக்கும், நிலையில் உன்னை என்ன கேட்பேன்...? இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்... /// கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்... அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்... உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா... இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா...

முற்றும் கசந்தது என்று, பற்று அறுத்து வந்தவருக்குச் சுற்றம் என நின்றிருப்பான் ஒருவன்... அவனைத் தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்... பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு... ராஜ்யத்தை ஆண்டு கொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன்... அவனைப் புரிந்து கொண்டால்... அவன்தான் இறைவன்... (படம் : வளர்பிறை)

மனிதராக இருப்பவர்கள் தங்களின் மனதிற்கேற்றவாறு, கடவுளை நம்புவதுண்டு... வானத்திலிருந்து நேரடியாகக் குதித்த பல பேருக்குக் கடவுள் என்றவுடனே 'பெரியார்' ஞாபகம் வருகிறதே... அப்போ அவர்கள் மனதில் பெரியார் தான் கடவுளாக இருப்பாரோ...? மற்ற எதையும் அவர் சிந்திக்க வைக்கலையா...? துன்பம் வரும் போது...? கடை சீர் (7) உதடுகள் ஒட்டவில்லை என்றாலும், உதடுகள் ஒட்டும் என்று சொல்லப்படும் ஒரு குறள் :

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். (குறள் எண் : 623)

பொருள் : இடையூறுகள் வந்தபோது அதற்காக வருந்தாது மனத் தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள் - இடையூறுகள் கடவுளா...? மனத்தெளிவு கடவுளா...?

"ஹாய்... மனசாட்சி பேசறேன்... உலகத்திலே எளிதான வேலை செஞ்சிட்டே - கேள்விகள் கேட்கிறது தான்...! கோபமா...? வேண்டாம்பா, கோபத்திற்குக் குறள்கள் சொல்ல ஆரம்பிச்சிடுவே... நான் அதிகாரம் 31-ல் படிச்சிக்கிறேன்... இதே குறள் போல், உதடுகள் ஒட்டும் குறள் - நான் வேறு ஏதோ கேள்விப்பட்டேனே...!?"

ஓ.. அதுவா... பலரும் வயதான காலத்தில் அறிவது...! (குறள் எண் : 350)

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.


பொருள் : பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமே பற்றுக. உலகப் பற்றினை விடுவதற்காக, அதனையே எப்போதும் எங்கேயும் விடாமல் பற்றிக் கொள்க.

உதடுகள் ஒட்டாத குறள்கள் இருக்காமே... அறிய → இங்கே ← சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அவன்தான் மனிதன் படத்தில் வரும் பாடல் வரிகளை பல ஆண்டுகளுக்கு பின் உங்களது தளத்தில் பார்த்து மகிழ்ந்தேன் என் சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு ! வாழ்த்துக்கள் நண்பரே ! இன்னொரு பாட்டு எனக்கு ஞாபகம் வருது பிடிச்சுருக்கா பாருங்க !
    என்ன பெத்த ராசா: பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா! இந்த பிள்ள மனசு பித்ததிலும் பித்தமடா! சாமி அது தாயுக்கு கீழதான் ! எந்தன் தாயவளும் சாமிக்கு மேலதான் !

    பதிலளிநீக்கு
  3. பாட்டுக்கு பாட்டு...

    பாட்டையும் எதிர் பாட்டையும் தேடி தேடி தொகுப்பு அசத்தியுள்ளீர்...

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. தொகுத்து பதிவிட்ட எல்லா பாடல்களும்,கடைசியில் (என்னைப் போன்றோருக்கு) தந்துள்ள 350 ஆவது குறள் உட்பட அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. பாலன் சகோ!

    பாடல் வரிகளில்-
    பின்னி எடுக்குரீங்கா....

    நீங்க ஒரு "பாடல் மன்னன்"!

    திருக்குறள் விளக்கம் கொடுத்து-
    அசர வைக்குறீங்க...

    மிக்க நன்றி!
    பயன்தரும் பதிவுகளை-
    வெளியிடும் உங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  6. புதியதில் பழையதை நன்கு தேடி கலக்கியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. அனைத்து பாடல் வரிகளுமே மனதில் நீங்கா இடம் பிடித்தவை பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அசத்தல் பாடல்கள்.. அம்மாவினருமைகள் ஒவ்வொன்றும் அழகு ..
    நல்ல கலக்சன்.....

    பதிலளிநீக்கு
  9. அனைத்து பாடல் வரிகளும் எனக்கு பிடித்தவை நன்றி தனபாலன் சார்
    அருமையான பகிர்வு தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  10. ஆஹா !!!! அனைத்துமே அருமையான பாடல்கள் ..அம்மாவின் பெருமைகளை அழகாய் சொல்லி சென்ற வரிகள் ..
    எனக்கு மனிதன் என்பவன் என்ற சுமைதாங்கி படப்பாடல் ரொம்ப பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  11. எல்லா பாடல்களும் எனக்கு பிடித்த பாடல். கடைசி குறள் மிக அருமை.
    இறைவனிடம் மட்டும் பற்றுடன் இருந்தால் எல்லாம் நல்லபடியாக அமையும் வாழ்க்கை.
    நல்ல பகிர்வுக்கு நன்றி.
    புதிய பாடல்களும், பழைய பாடல்களும் தேடி தேடி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அருமையான பாடல் வரிகளைத் தேடிப்பிடித்துப் போட்டு இருக்கிறீர்கள்.
    (பழைய ஞாபகங்கள் வந்து போயின)

    பகிர்விற்கு மிக்க நன்றி தனபாலன ஐயா.

    பதிலளிநீக்கு
  13. அருமையான அம்மா பாடல்கள்.வித்தியாசமான பதிவாயும் இருக்கு !

    பதிலளிநீக்கு
  14. உங்கள் பாட்டும் எதிர்ப் பாட்டும் மற்றவர்களை நிப்பாட்டுகின்றன

    பதிலளிநீக்கு
  15. பாட்டு தேர்வு மிக அருமை. உங்க பாணியில கலக்கறிங்க. கலக்குங்க... கலக்குங்க...

    பதிலளிநீக்கு
  16. அம்மா பாடல்கள்.மிக அருமையான தொகுப்பு..

    பதிலளிநீக்கு
  17. மிக அருமையான பதிவு... அனைத்துமே ஆழமான அருமையான வரிகள். அழகாகத் தொகுத்துப் போட்டிருக்கிறீங்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. அன்னையின் பெருமையினை உலகுக்கு உணர்திகொண்டே இருக்கும் பாடல் வரிகள். தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அம்மாவின் ஈடு இணையற்ற அன்பை பகிரும் அருமையான பாடல் வரிகள் .பகிர்வுக்கு நன்றி சகோ ..

    பதிலளிநீக்கு
  20. இந்த முறை உங்கள் பாடல்களில் பல என் அண்ணனுக்கு பிடித்தவையாக உள்ளன !

    பதிலளிநீக்கு
  21. அருமையான பாடல் தொகுப்பு அதிலும் மன்னன் பாடல் என் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  22. ராமு படத்துல வர்ற பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா. சுமைதாங்கி பட பாடலும் என் ஃபேவரிட்

    பதிலளிநீக்கு
  23. நல்ல பாடல்கள் நீங்கள் பகிர்ந்த அனைத்துமே.... அசத்தியுள்ளீர்...சகோ!....

    பதிலளிநீக்கு
  24. அனைத்து பாடல் வரிகளுமே கருத்தாழமிக்கது.மிக அருமையான பகிர்வு.எல்லாப் பாடல்களுமே மனதை தொட்டது,அம்மான்னா சும்மாவா?

    பதிலளிநீக்கு
  25. >>>
    காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை...

    அன்பென்றாலே அம்மா...என் தாய் போல் ஆகிடுமா?
    <<<

    இப்போதும் நான் அவ்வப்போது முனுமுனுக்கும் பாடல் இது திண்டுக்கல் ஜீ!

    நெகிழ வைக்கும் பாடல்!

    அருமையான பதிவு தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  26. புதிய பாடல்களையும் எடுத்துக் காட்டி கலக்கி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  27. ஆஹா...எதிர்பாட்டு எல்லாம் ஓஹோ ...அருமை சார்...

    பதிலளிநீக்கு
  28. எப்டி சார் இவ்ளோ பாடல்களை படங்களின் பெயரோட நியாபகம் வச்சிருக்கீங்க.. ஒப்பீடும் அருமை

    பதிலளிநீக்கு
  29. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களின் தொகுப்பாய் அமைந்தது உங்கள் பதிவு! நன்றீ ஐயா!

    பதிலளிநீக்கு
  30. அம்மா என்றயக்காத உயிரில்லையே தாயின் பெருமைய சொன்னிங்க, குறள் மற்றும் விளக்கவுரைகள் மிகவும் கவர்ந்தது நண்பரே

    பதிலளிநீக்கு
  31. எல்லாப் பாடல்களும் பழைய நினைவுகளைக் கூட்டி வந்தன.

    அத்தனை பாடல்களையும் பாடிப் பார்த்து மகிழ்ந்தேன்!

    மலரும் நினைவுகளாக ஒரு பதிவு!

    பாராட்டுக்கள்!



    பதிலளிநீக்கு
  32. அடடா . அத்தனைப் பாட்டுக்களும் காலத்தால் அழியாத முத்தான பாட்டுக் கள் .
    அருமை

    பதிலளிநீக்கு
  33. அனைத்து பாடல் வரிகளுமே நீங்கா இடம் பிடித்தவைபாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  34. நல்ல பாடல்களின் தொகுப்பு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. எவ்வளவு பாடல்களை சொல்லியிருக்கீங்க சார்? நிறையப் பாடல்கள் கேட்டதில்லை. ஆனாலும் தெரிந்த பாடல்களின் தொகுப்பு அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  36. அறியாத பாடல்கள் பல இருந்தன தேடினேன் கேட்டேன் ரசித்தேன்..............

    பதிலளிநீக்கு
  37. அம்மாவைப்பற்றி அத்தனை பாடல்களும் இரத்தின முத்துக்கள்...தேர்ந்த கலெக்சன்...(14 )

    பதிலளிநீக்கு
  38. புதுமையில் ஒளிந்து இருக்கும் பழமை
    அருமை இவை அனைத்திலும் பொருந்தும் நண்பா

    மரபின் எச்சங்கள் இன்னும் நமக்குள் இருக்கிறது அதை சுத்தமாய் துடைத்து எறிவது சுலபம் இல்லை ........அதன் காரணமாகவே எல்லாவற்றிலும் சாயல் இருப்பதை உணர முடிகிறது ....உங்கள் பதிவு அதை வெளிபடுத்துகிறது தொடருங்கள் அருமையான பதிவை

    பதிலளிநீக்கு
  39. புதுமையான முயற்சி.சிறப்பாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  40. அருமையான பதிவு.சிறப்பான பாடல்களின் தொகுப்பு.அழகான குறள்.
    தொடருங்கள் தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  41. பாடல் வரிகளைக் காட்டிலும் தங்களின் எதிர்ப்பாடல் வரிகள் கனமானவை; கருத்துச் செறிவு மிக்கவை.

    பாராட்டுகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  42. நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பணிகள்.

    பதிலளிநீக்கு
  43. நிறையத் தேடலுடன் கூடிய உங்கள் பாடல்கள் பற்றிய பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  44. நியூ படத்தில் வரும் காலையில் தினமும் கண்விழித்தால் என்ற பாடல் அருமைதான். தொகுப்பு அனைத்தும் நன்றாகவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  45. பாடல் வரிகள் அனைத்தும் கவிதை...
    சுவாரஸ்யமான பதிவு:)

    பதிலளிநீக்கு
  46. தேடல் தொடரட்டும். எத்தனை முயற்ச்சியின் பின் வருகின்ற உங்கள் பதிவுகள் மனதிலும் நன்றாகவே பதிகின்றது. அத்துடன் ஆழமாகப் பார்க்கத் தூண்டுகின்றது

    பதிலளிநீக்கு
  47. கிளி போல பேசு...
    இளங்குயில் போல பாடு...
    மலர் போல சிரித்து...
    நீ குறள் போல வாழு...
    மனதோடு கோபம்,
    நீ வளர்த்தாலும் பாவம்...
    மெய்யான அன்பே தெய்வீகமாகும்.

    அனைத்தும் அருமையான வரிகள்...
    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  48. தாயின் பெருமையை உரக்க உரைக்கும் பாடல் வரிகளும் அருமையான குறட்பகிர்வும் மனத்தை ஆட்கொண்டன. பகிர்வுக்கு நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  49. all r my fav sir.post is amazing like that white peacock.super sir there is one more song from godfather mother sentiment song "theeyil nanaintha thena"

    பதிலளிநீக்கு
  50. சிறப்பு...சிறப்பு...
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  51. பாடல் வரிகளும் திருக்குறள் விளக்கமும் அருமை! பல பாடல்களை கேட்டிருந்தாலும் வரிகளை இசை முழுங்கியிருக்கும். உங்கள் பதிவில் சிறப்பாக வரிகள் அறியமுடிகிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
  52. அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே

    பதிலளிநீக்கு
  53. வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறீர்கள். அருமையான தொகுப்பு. கிட்டத்தட்ட மறந்துவிட்ட பாடல்களை எல்லாம் நினைவுக்குக் கொணர்ந்துவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  54. நன்றி DD அருமையான பாடல் வரிகள்
    தொகுப்பும் பகுப்பும்மனதிற்கு மிகவும் உவப்பு.
    அது சரி எல்லாம் ஏட்டிலும்பாட்டிலும்தான் தான் இருக்கின்றன.படித்து,கேட்டு மகிழ

    நீர் எந்த உலகில் இருக்கின்றீர்?DD

    வீட்டிலும் நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை?

    கால்நடைகளை அடைத்து வைப்பதுபோல் முதியோர்களை அடைத்து வைக்கும் முதிரோரில்லங்கள்

    காசுக்கு கருணை காட்டுவதாக நடிக்கும் செல்வந்தர்களுக்கு செல்வந்தர்களால் நடத்தப்படும் காப்பகங்கள்

    பத்து மாதங்கள் அடை காத்த அன்னையே பெண் சிசுவேன்றால் குப்பை திட்டியில் வீசி எறிகின்றாள் இந்த உலகம் தன்னை தன் குடும்பத்தை
    ஏசப்போகிறதே போகிறதே என்று அஞ்சி

    வரதஷினை கொடுமைக்கஞ்சி தாய்ப்பால் கொடுக்காமல் கள்ளி பால் கொடுத்து மறுநாள் அதன்மறைவிற்கு பால் ஊத்துகின்றாள்
    இன்றும் நம் தமிழ்நாட்டில்

    நதிகளெல்லாம் கூவம் ஆகிவிட்டதற்கு யார் காரணம்?
    எல்லாம் நாம்தான் காரணம்.
    தனி மனிதன் தவற்றுக்கு வருந்தவேண்டும், திருந்த வேண்டும்.
    அப்போதுதான் ஊரும்,உலகமும் திருந்தும்.

    பதிலளிநீக்கு
  55. வணக்கம்
    தனபால் அண்ணா

    நல்ல கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி,மிக மிக அருமை


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.