திருக்குறள் அதிகாரங்கள் - ஐயனின் கணக்கியல் நுட்பம் (4)

இதுவரை என்ன செய்தோம்...? என்பதை விளக்க, "இதற்கு ஒரு தொழினுட்ப அட்டவணை உருவாக்க முடியாதா...?" என்று தாத்தா மனதில் கேள்வி கேட்க, புதியதொரு தொழினுட்ப அட்டவணையைக் கற்றுக்கொண்டேன்...! ( மு என்பது அதிகாரத்தின் முதலெழுத்து & க என்பது அதிகாரத்தின் கடையெழுத்து - அவற்றை ஒவ்வொன்றாக
வ.எண் | அதிகார எண். அதிகாரம் | மு ↑ | க ↑ |
---|---|---|---|
க | து | ||
வா | பு | ||
நீ | மை | ||
அ | ல் | ||
இ | கை | ||
வா | ம் | ||
ம | று | ||
அ | மை | ||
வி | ல் | ||
இ | ல் | ||
செ | ல் | ||
ந | மை | ||
அ | மை | ||
ஒ | மை | ||
பி | மை | ||
பொ | மை | ||
அ | மை | ||
வெ | மை | ||
பு | மை | ||
ப | மை | ||
தீ | ம் | ||
ஒ | ல் | ||
ஈ | கை | ||
பு | ழ் | ||
அ | மை | ||
பு | ல் | ||
த | ம் | ||
கூ | ம் | ||
க | மை | ||
வா | மை | ||
வெ | மை | ||
இ | மை | ||
கொ | மை | ||
நி | மை | ||
து | வு | ||
மெ | ல் | ||
அ | ல் | ||
ஊ | ழ் | ||
இ | சி | ||
க | வி | ||
க | மை | ||
கே | வி | ||
அ | மை | ||
கு | ல் | ||
பெ | ல் | ||
சி | மை | ||
தெ | கை | ||
வ | ல் | ||
கா | ல் | ||
இ | ல் | ||
தெ | ல் | ||
தெ | ல் | ||
சு | ல் | ||
பொ | மை | ||
செ | மை | ||
கொ | மை | ||
வெ | மை | ||
க | ம் | ||
ஒ | ல் | ||
ஊ | மை | ||
ம | மை | ||
ஆ | மை | ||
இ | மை | ||
அ | சு | ||
சொ | மை | ||
வி | மை | ||
வி | ம் | ||
வி | கை | ||
தூ | து | ||
ம | ல் | ||
கு | ல் | ||
அ | ல் | ||
அ | மை | ||
நா | டு | ||
அ | ண் | ||
பொ | கை | ||
ப | சி | ||
ப | கு | ||
ந | பு | ||
ந | ல் | ||
ப | மை | ||
தீ | பு | ||
கூ | பு | ||
பே | மை | ||
பு | மை | ||
இ | ல் | ||
ப | சி | ||
ப | ல் | ||
உ | கை | ||
பெ | மை | ||
பெ | ல் | ||
வ | ர் | ||
க | மை | ||
சூ | து | ||
ம | து | ||
கு | மை | ||
மா | ம் | ||
பெ | மை | ||
சா | மை | ||
ப | மை | ||
ந | ம் | ||
நா | மை | ||
கு | கை | ||
உ | வு | ||
ந | வு | ||
இ | வு | ||
இ | ம் | ||
க | மை | ||
த | ல் | ||
கு | ல் | ||
பு | ல் | ||
ந | ல் | ||
கா | ல் | ||
நா | ல் | ||
அ | ல் | ||
பி | மை | ||
ப | ல் | ||
க | ல் | ||
ப | ல் | ||
த | தி | ||
நி | ல் | ||
க | ல் | ||
பொ | ல் | ||
உ | ல் | ||
நெ | ல் | ||
நி | ல் | ||
அ | ல் | ||
கு | ல் | ||
பு | ல் | ||
நெ | ல் | ||
பு | வி | ||
பு | ம் | ||
ஊ | கை |
133 அதிகாரங்களில், ஒரேயொரு முறை பதினான்கு (14) எழுத்துக்கள் முதலெழுத்தாகவும், ஒரேயொரு முறை ஏழு (7) எழுத்துக்கள் கடையெழுத்தாகவும், பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை இருமுறை சொடுக்கிப் பார்த்து மேலேயே அறிந்திருப்பீர்கள்... கடந்த மூன்று பதிவுகளில் இதையே வேறுவிதமாகச் சொல்லியிருந்தேன்... இப்போது கணினி Excel கோப்பில் செய்த கணக்கியலை படமாகக் கீழே :-

ஆக மொத்தம் 14+7=21 அதிகாரங்கள் வருகிறது... மேற்படி அட்டவணையில் இரு தொகுப்புகளில், பயன்படுத்திய முதல் + கடை எழுத்துக்களின் எண்ணிக்கைகளைக் கூட்டினால் 14+7 + 6+7 =34=3+4= திருக்குறள் எண் ஏழு (7) வருகிறது... மொத்த அதிகார எண்களைக் கூட்டினால் (808+510) மூல எண் ஏழு (7) வரவில்லை... அதற்காக முந்தைய இரு பதிவுகளிலும், சில அதிகார எண்களை நீக்கி, திருக்குறள் எண் ஏழு (7) வருமாறு செய்தோம்... மேலும் விளக்கமாக :
→கடையெழுத்து கணக்கு (2)← பதிவில், 64.அமைச்சு, 78.படைச்செருக்கு ஆகிய இரண்டு அதிகாரங்களையும் நீக்கினோம்... அதே போல் : →முதலெழுத்து கணக்கு (3)← பதிவில், நீக்கப்பட்ட அதிகார எண்களின் பெயர்கள் :- 35.துறவு, 46.சிற்றினஞ்சேராமை, 53.சுற்றந்தழால் ஆகியவை ஆகும்... சுருக்கமாக : து, சி, சு, சு, கு - இவை எவ்வாறு நீங்கியது...? இதோ: இப்போது 133 அதிகாரங்களின் கடையெழுத்துக்களையும் (➕) முதலெழுத்துக்களையும் இணைத்துக் கணக்கிட்டுப் பார்ப்போமே...!
கடையெழுத்தும் ➕ முதலெழுத்தும் | ||
---|---|---|
எண் | எண் | |
1 | ||
2 | ||
3 | ||
4 | ||
5 | ||
மொத்தம் ① | ||
6 | ||
7 | ||
8 | ||
9 | ||
10 | ||
11 | ||
12 | ||
13 | ||
14 | ||
15 | ||
16 | ||
மொத்தம் ② | ||
① + ② | 1042 |
முதல்➕கடை = 266 எழுத்துக்களைக் கணக்கிட்டுப் பார்க்கும் போது, (14+7=)21 அதிகாரங்களிலிருந்து 16 அதிகாரங்களாகக் குறைகிறது...! எண்களால் திருக்குறள் எண்ணான ஏழு, (7) "எட்டும் எட்டும் ஏழு" (+= 7 ) எனும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அட்டவணையில் காண்கிறோம்... அதேபோல் எழுத்துக்களாலும் திருக்குறள் எண்ணான ஏழு, (7) கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்...
ஒரேயொரு முறை வரும் அதிகார
முதலெழுத்தும், கடையெழுத்தும் | ||
---|---|---|
வ. எண் | முதல் | கடை |
1 | ம | று |
2 | நா | டு |
3 | அ | ண் |
4 | வ | ர் |
5 | த | தி |
6 | நீ | மை |
7 | ஈ | கை |
8 | மெ | ல் |
9 | கே | வி |
10 | ஆ | மை |
11 | சொ | மை |
12 | தூ | து |
13 | பே | மை |
14 | சூ | து |
15 | மா | ம் |
16 | சா | மை |
11 | 5 | |
( 11 + 5 )=16=(1+6)= 7 |
து, சி, சு, சு, கு - ஆகிய எழுத்துக்கள் எவ்வாறு நீங்கியது...? அவை எடுத்துக்காட்டாக ஒரு கடையெழுத்து: வி எனும் எழுத்து, கேள்வி அதிகாரம் தவிர, கல்வி, புலவி ஆகிய அதிகாரங்களின் கடையெழுத்தாகவும், விருந்தோம்பல், வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை ஆகிய அதிகாரங்களின் முதலெழுத்தாகவும் வருகிறது...! ஒரேயொரு முறை வரும் கே எனும் முதலெழுத்தினால் தான், கேள்வி அதிகாரமும் இந்த பட்டியலில் வருகிறது... அதனால் முதலும் கடையுமாக வருகின்ற வி எனும் எழுத்து, ஒரேயொருமுறை பயன்படுத்தியதாக வராது... அடுத்து எடுத்துக்காட்டாக ஒரு முதலெழுத்து: ம எனும் எழுத்து, மக்கட்பேறு அதிகாரம் தவிர, மடியின்மை, மன்னரைச்சேர்ந்தொழுதல், மருந்து, ஆகிய அதிகாரங்களின் முதலெழுத்தும் அதுவே...! எனவே, ஒரேயொருமுறை பயன்படுத்தியதாக வராது... இதுவே ஐயனின் அதிகார கணக்கியல் ...! மேலும் மேற்படி நீங்கிய எழுத்துக்களான து, சி, சு, சு, கு - ஆகியவையும், ஐயனின் இதே நுட்பத்தால் நீங்கி, எண்களாலும், எழுத்துக்களாலும், திருக்குறள் எண் ஏழு (7) வருவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது...
ஒரேயொரு முறை வரும் று எனும் கடையெழுத்தினால் தான், மக்கட்பேறு அதிகாரமே இந்த பட்டியலில் வருகிறது... 61. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற - மக்கட்பேறு அதிகாரத்தின் முதல் குறள்... வீடுபேறு, மோட்சம் - போன்ற உறுதிப்பொருட்கள் இல்லாதவற்றை எல்லாம் முப்பாலில் தேடினாலும் கிடைக்காது...! அறம், பொருள், இன்பம் மட்டுமே... மற்றவையெல்லாம் தமிழ்ப் பக்தி இயக்க காலத்தில் சில சிறுமைகளால் பரப்பப்பட்டவை... அதற்குத் துணையாகப் புரட்டுப் புராணங்கள் ஏராளம் + தாராளம்...! அந்த சில கீழ்களால் முப்பாலும் சிதைக்கப்பட்டது என்பது தான் கொடூரம்... இந்த அதிகார கட்டமைப்பின் பல சிறப்புகளில் ஒரு சிறப்பு, மிகவும் முக்கியமானது ஒன்று உண்டு...! ஏழாவது அதிகாரம் மக்கட்பேறு தான் என உறுதியாகிறது... கிட்டத்தட்ட 2000 வருடத்திற்கு முன்பிருந்தே பரிமேலழகர், அவரின் மதம் சார்ந்து புதல்வரைப் பெறுதல் என்று உரைத்து, அதற்கான நான்கு வர்ண விளக்கங்கள் எல்லாம் இங்கே கணக்கு உடைத்தெறிந்து விட்டதை அறிவது மிக மிக முக்கியம்... நம் நாட்டில் ஒவ்வொரு மனிதனும், உலகில் வாழும் கணக்கற்ற உயிரினங்களில் "தான் ஒரு மனிதப்பிறவி" என்று நினைத்து வாழும்வரை, நம் நாடு எந்த வகையிலும் முன்னேற்றம் காணாது...!
கணினி கோப்பில் செய்த கணக்கியலை படமாகக் கீழே :- நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
அட்டவணை தயாரிப்பு சூப்பர். திருக்குறள் ஆராய்ச்சியை விட இது போல உங்கள் தொழில் நுட்ப அறிவுதான் என்னை எப்போதும் வியக்க வைக்கும். இதற்குத் தகுந்தாற்போல ஒரு அட்டவணை வசதியை உடனே தயார் செய்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குஇந்த வலைப்பூவில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை கேட்பொலியாக பயன்படுத்தியுள்ளேன்... அதை தொகுக்க ஒரு தொழினுட்பம் செய்து பார்த்தேன்... அது இன்னும் சரிவரவில்லை... ஆனால் அதில் செய்த ஒரு நுட்பம் இந்த தொழினுட்ப அட்டவணைக்கு உதவியது...
நீக்குஇரு முறை சொடுக்கிப் பார்த்ததும் நீங்கள் குறிப்பிட்டுள்ளது தெரிந்தது. புதியதொரு தொழில்நுட்பம் கற்றதற்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅடுத்தாப்ல மதிநுட்பத்தால்னு சொல்லிருக்கீங்க பாருங்க அதான் பிரச்சனை...அதுக்குப் பிறகு வரும் கணக்கிடலுக்கு அது தேவை. 7 நோக்கிப் போறீங்கன்னு புரிகிறது.
கீதா
ஆம், மீதம் உள்ள அதிகாரங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அடுத்த பதிவில் பார்த்து விடுவோம்...!
நீக்குபதிவு பிரமிப்பாக இருக்கிறது தொடர்ந்து வருகிறேன் ஜி
பதிலளிநீக்குமுதல் அட்டவணை எந்த வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது? அதிகார எண் வரிசையும் இல்லை முதலெழுத்து அல்லது கடைசி எழுத்து வரிசையிலும் இல்லை.
பதிலளிநீக்குஇந்தப்பதிவு கொஞ்ம் குழப்பம் உண்டாக்குகிறது. எனக்குப் புரியவில்லை.
அய்யன் இருந்த காலத்தில் ஆரிய படைப்புகள் வாய்வழி பகிரப்பட்டன. அவை ஒலி வடிவத்திற்கு முக்கியம் தந்து அந்த சரியான ஒலி அதிர்வுக்கு முக்கியத்துவம் தந்தனர்.
தமிழ் படைப்புகள் தமிழ் பிராகிருத எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டு நிலை நின்றன. அதே போல் ஆரிய படைப்புகளில் ஸ்லோகங்களில் எண் வரிசை என்ற ஒழுங்கு இருக்கவில்லை. ஆனால் திருக்குறள் முறையாக அதிகார எண் மற்றும் குரள் எண் என்று வரிசைப்படி எழுதப்பட்டு பகிரப்பட்டன.
ஆகவே தான் வள்ளுவர் எண்ணுக்கும் எழுத்துக்கும் முக்கியத்துவம் தந்தார் என்பது என் சிற்றறிவு.
குறை கூறுகிறேன் என்று கருத வேண்டாம். மன்னிக்கவும்.
// முதல் அட்டவணை எந்த வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது? //
நீக்குஎண் 1 முதல் - எண் 133 வரை அமைக்கப்பட்டுள்ளது...
// அதிகார எண் வரிசையும் இல்லை முதலெழுத்து அல்லது கடைசி எழுத்து வரிசையிலும் இல்லை.//
ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன் உள்ளது என்னங்க ஐயா...?
// குறை கூறுகிறேன் என்று கருத வேண்டாம். மன்னிக்கவும்... //
நீக்குகுறைகள் என்றால் மனதார ஏற்றுக்கொள்வேன்... அதனால் ஆய்வு மேம்படும்...
நீங்கள் சொல்வது பேதைமை என்று சொல்வதாகக் கருத வேண்டாம்...
இப்போஸ்ட்டைப் படிக்க ஆர்வமும், நுணுக்கமான கவனிப்பும் தேவை என ஆரம்பமே சொல்லிட்டீங்கள், உண்மையில் இதில் இரண்டுமே எனக்கு இல்லை, இருப்பினும் படிச்சேன் புரியவில்லை ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குஆராய்ச்சி அசத்துகிறது. நன்றி ஐயா
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. திருக்குறள் அதிகாரங்களை கணக்கியலோடு சேர்த்து ஆராய்ச்சி செய்வதில் நீங்கள் மிக சிறந்தவராக ஆகி விட்டீர்கள். வாழ்த்துகள். உங்கள் அறிவை கண்டு வியக்கிறேன். வியக்க வைக்கும் உங்கள் தொழிற் நுட்பத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிகச் சிறப்பான பதிவு.. ஐயனின் மனம் குளிர்ந்திருக்கும்..
பதிலளிநீக்குவாழ்க தங்களது தொண்டு!..
தொழிற் நுட்பம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கிறது உங்களுக்கு
பதிலளிநீக்குஅதிகாரங்களின் அட்டவணை அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
உங்களை பள்ளிகளில் திருக்குறள் வகுப்பு நடத்த அழைக்கலாம். சிறு வயதில் இந்த கணக்கியலை படித்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை பாதை நன்றாக இருக்கும்.
பள்ளி, கல்லூரிகளில் உங்களை சிறப்பு வகுப்பு நடத்த அழைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.