🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உங்களை எனக்குப் பிடிக்கிறது...! (SET 4) ISO - Part 8

வணக்கம் நண்பர்களே... வருடம் ஒரு நாள், அவரவர் வசதிற்கேற்ப ஏதோ ஒரு பிரபல மருத்துவமனையில், உடம்பை முழுக்க பரிசோதனை செய்வதல்ல சுய பரிசோதனை... நம் மனதை ஒரு நாள் சுய பரிசோதனை செய்வோமா...? வருடா வருடம் அவரவர் விருப்பமான நாளிலிருந்து 'நான் இனிமேல் இப்படித்தான் வாழப் போகிறேன்' என்கிற தீர்மானத்தைத் தொடர்கிறோமா...? இதற்கு நல்ல நாள் தேவையில்லை... வாங்க...

முதல் பகுதி : என்னைப் பற்றி ஆய்வு (SET 1) ISO - Part 4

இரண்டாம் பகுதி : அந்'தரத்திலே'... (SET 2) ISO Part 5

மூன்றாம் பகுதி : ஞாபகம் இருக்கா...? (SET 3) ISO Part 6

(படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கிக் கணக்கிடலாம்...) ஒவ்வொரு கேள்விற்கும் ஆமாம் (YES) என்றால் +2 மதிப்பெண், இல்லை (NO) என்றால் -1 மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள்... இனி...

பகுதி நான்கு (நிறைவு)

சுய மதிப்பீடு ஆய்வு : தலைமைப் பண்பு

(SELF EVALUATION TEST : LEADERSHIP)

சுருக்கமாக SET என்று வைத்துக் கொள்வோமா...?

76) Are you utilizing the time factor effectively ? (பயனுள்ள முறை)

77) Can you keep temperature under control always ? (கட்டுப்பாட்டின் கீழ்)

78) Are you meeting your body requirements ? (உகந்தவாறு)

79) Can you understand the body language of others ? (உடல் மொழி)

80) Are you choosing the right words during oral / written communication ? (சரியான சொற்கள்)

81 Are you developing the communication skills ? (தகவல் பரிமாற்றும் சாதுரியம்)

82) Are you familiar with report writing ? (நன்கு தெரிந்த)

83) Are you acknowledging the achievements of your subordinates / colleagues ? (ஒப்புக்கொள்ளுதல்)

84) Are you seeing targets for yourself ? (இலக்குகள்)

85) Do you review your action plan frequently ? (மீளாய்வு)

86) Do you utilize a “fact finding mission” for solving important problems ? (உண்மை கண்டறியும் பணி)

87) Do you accept the concept of “NO WINNER NO LOSER” game ? (பொதுக்கருத்தை ஏற்றுக் கொள்ளுதல்)

88) Do you practice the spirit of accommodation ? (ஒத்துப்போதல்)

89) Are you welcoming new opinions always ? (அபிப்பிராயங்கள்)

90) Are you cultivating your behavior ? (வளர்த்துக்கொள்ளுதல்)

91) Are you a straight forward person ? (நேர்வழியில் செல்கிற)

92) Are you a honest person ? (நேர்மை)

93) Are you avoiding duplication of work ? (படியெடுத்தல்)

94) Are you maintaining transparency in your works ? (ஒளிவுமறைவின்மை)

95) Are you kind to others ? (இரக்கம்)

96) Do you use the words “please” and “thanks” frequently ? (அடிக்கடி)

97) Do you mind “others’ interest” in your company ? (மற்றவர்களின் விருப்பம்)

98) Are you taking actions without prejudice ? (பாரபட்சம்)

99) Are you earning good will among your subordinates / colleagues ? (நல்லெண்ணம்)

100) Are you practicing “total involvement in work” ? (like saint) (வேலையில் முழு ஈடுபாடு)


இது ஒரு சுய பரிசோதனை... உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைகளுக்கு (சில கேள்விகள் தவிர்த்து) அல்லது நண்பர்களுக்கு உதவலாம்... சரி... 15 கேள்விகள் 'YES' என்றால் (15)x(+2)=30 மதிப்பெண்கள். மீதம் 10 கேள்விகள் (10)x(-1)=-10 மதிப்பெண்கள். இந்தப் பகுதியில் மதிப்பெண்கள் = 30-10 = 20
10th / +2 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளிடம், பெரும்பாலான பெற்றோர்களின் கவனம் குழந்தைகளின் மதிப்பெண்களே... இன்றைய சூழல், சமுதாயம், கல்வி முறை, வேறு வழி (?), இன்னும் பலவற்றை பிறகு அலசுவோம்... பணம் தான் எல்லாம் என்று நினைக்கும் உள்ளங்கள், மதிப்பெண்கள் தான் எல்லாம் என்பதைக் குழந்தைகளிடம் விதைத்தால் எப்படி...? 10th / +2 தேர்வில் பள்ளியிலோ, மாவட்டத்திலோ, மாநிலத்திலோ முதன்மை வரும் குழந்தைகள் கல்லூரி படிப்பில் திணறுவது ஏன்...? வாழ்க்கை தேர்ந்தெடுப்பில் தோற்பதற்கான பல காரணங்களில் ஒன்று தான் இந்த மதிப்பெண்கள்; மற்றவற்றை யோசிங்க...

இங்குக் கேட்கப்பட்ட கேள்விகள் அவ்வாறு மதிப்பெண்கள் அதிகம் எடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல... அவரவர் சூழ்நிலைக்கேற்ப சில கேள்விகள் பொருந்தாமல் இருப்பதை விட்டு விடுங்கள்... மதிப்பெண்களை மறந்து விட்டு, உடல் நலம், மன நலம் - இவற்றைக் கருத்தில் கொண்டு நமது பலத்தையும், பலவீனங்களையும், உண்மையாகச் சோதனை செய்வதே இந்த ஆய்வு... பலவீனங்களை ஒப்புக்கொள்வது மிகச் சிறந்த பலம்... நமது மகாத்மா பலமுறை சுய பரிசோதனை செய்து கொண்டதால் தான், நமக்குச் சத்திய சோதனை கிடைத்தது... அதில் பலவீனங்களையும் சொல்லி உள்ளார்... சத்தியமே லட்சியமாக இருந்தால் எந்த சோதனைகளையும் தாங்கலாம்... இது முடிவல்ல... ஒரு குறிப்பு :-

1) 100 மதிப்பெண்களுக்கு மேல் - நல்ல தலைமைப்பண்பு...
2) தங்களின் எதிர்மறை பதில்களை ஆராயுங்கள்...
3) தங்களின் தரத்தை மேம்படுத்த அவ்வப்போது மதிப்பீடு செய்யுங்கள்...

விருப்பம் உள்ளவர்கள் SET என்று dindiguldhanabalan@yahoo.com-க்கு தகவல் அனுப்பவும்... அவர்களுக்கு pdf வடிவில் அனுப்பி வைக்கிறேன்... Print எடுத்துக் கொடுப்பவரிடம் ஆய்வு செய்து முடித்தவுடன் மதிப்பெண்களைக் கணக்கிடுவதைப் பற்றியும், குறிப்பையும் சொல்லுங்கள்...


"வழக்கம் போல் எழுதும் ஒரு குறளும் இல்லை; பாடல் வரிகளும் இல்லை !"

இந்த 100 கேள்விகள் மட்டும் தான் மிகவும் முக்கியமா...? கண்டிப்பாக இல்லை... இவை தலைமைப்பண்பிற்கான ஒரு சிறிய ஆய்வு தான்... இந்த 100 கேள்விகளுக்கும் வேண்டுமென்றால் குறள் எழுதவா மனசாட்சி ?

"தெரியாம கேட்டு விட்டேன்... உரையாடலை அப்புறம் பதிவிடலாம்..."

உள்மனத்தில் தவறு என்று தெரிந்ததை... செய்யாமல் உறுதியாக இருந்தால், வாழ்க்கை என்றும் சுவாரசியம் இருக்கும்... மற்றவர்களையும் மாற்றும் வல்லமையும் வழிகளும், அதனால், மகிழ்ச்சியான வாழ்வும் அமையும்... மற்றவர்களின் மனதிலும், முக்கியமாக குழந்தைகளின் மனதில் நாம் என்ன விதைக்கிறோமோ, அதைத் தான் அறுவடை செய்யவும் முடியும்; உணர வைக்கவும் முடியும் ! முதலில் நாம் உணர வேண்டியது முக்கியம் !
உங்களை எனக்குப் பிடிக்கிறது...!

என்று மலை உச்சியிலிருந்து உரக்கக் கத்தினால், நாலாபுறமும் பல பேர்கள் இதையே சொல்வார்கள்... வாழ்க்கையே எதிரொலி போலத்தான்...!

புரிந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி...

ISO என்றால் என்ன...? அறிய அட...! அவ்வளவு தானா...! ISO - PART 1 என்னும் பதிவை, படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கித் தொடரலாம்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அண்ணே நான் பார்டர் ல பாஸ் பண்ணிட்டேன்

    பதிலளிநீக்கு
  2. இலக்கு நிர்ணயித்தல், சுய மதிப்பீடு, தலைமைப்பண்புகள் பற்றிய அலசல் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    தனபால் (அண்ணா)

    பலரை சிந்திக்க வைக்கும் பதிவு ஒவ்வொரு வினாவும் பல மடங்கு கருத்து குவிந்துள்ளது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. சுய பரிசோதனைகள் செய்தால் நிறைய அழுக்கடஞ்சி போயிதான் கிடக்கு மனசு இல்லையா?

    பதிலளிநீக்கு


  5. சுய பரிசோதனை மிகவும் சரியே. இந்த சுய பரிசோதனை முடிவுகளை
    அலுவலகத்தில் நமது மேல் நிலை அதிகாரியிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும்
    அவரது கருத்துக்களையும் ( நம் மேல் அவருக்கான பதில்களை) நம்முடன்
    அவர் பகிர்ந்துகொள்வார். அந்த அடிப்படையிலே தான் அடுத்த கட்ட பதவி உயர்வு
    இருக்கும் என்ற நிலை 1990 ல் எங்கள் நிறுவனத்தில் அகில் இந்திய அளவில்
    துவங்கப்பட்டது.

    துவக்க கட்டத்திலேயே மூன்றாம் நான்காம் பிரிவினைசார்ந்த ஊழியர்களுக்கான‌
    சங்கம் இதை நிராகரித்து விட்டது.

    முதல் பிரிவினைச் சேர்ந்த அதிகாரிகளோ ரகசிய அறிக்கை என்னும் ஆயுதத்தை
    கை விடத் தயாரில்லை. ஆகவே இதற்கு சரிவர அவர்கள் ஒத்துழைப்பு தராததால்
    இது நீர்த்துப்போனது.

    இந்த சுய பரிசோதனை மிகவும் தேவை.
    இதில் பங்கு பெறும் நபர்கள் ஒரு இத்ய சுத்தியுடன் பதில்கள் தரவேண்டும்.
    இது அவ்வளவு சாத்தியமில்லை. ஆதலால், இதில் வரும் முடிவுகளுக்கு
    ஒரு விழுக்காடு 5 முதல் 20 வரை உண்மை சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலே
    கழிவு தரப்படுகிறது.

    உடல் குறித்த சுய பரிசோதனைகளில் இந்த சிக்கல் இல்லை.

    எது எப்படி இருப்பினும் சுய பரிசோதனை என்னும் ஆய்வுக்கு மறு கருத்து
    இருக்க இயலாது.

    குடும்ப சூழ் நிலைகளில் இந்த சோதனை யை கணவனும் கணவனைக்குறித்து
    மனைவியும் வைஸி வர்ஸா செய்தார்களானால், குடும்ப சூழ் நிலை பெரிதும்
    இன்பமாகும். ஐயமில்லை.

    பாராட்டுகள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    www.vazhvuneri.blogspot.in

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் சகோ,பாராட்டுக்கள்...சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு!!

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான விசயங்களைக் கூறிவிட்டு வாழ்கையே எதிரொலி போலத் தான் என்னும் அற்புதமான விசயத்துடன் நிறைவு செய்துள்ளீர்கள் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  8. உங்களை எல்லோருக்கும் பிடிக்கிறது .அருமையான கட்டுரைகளை தந்து அறிவை பரவலாக்குவதால் .
    சிறப்பான கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான பகிர்வு நான்கு பாகமும் அசத்தல்

    பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு ஐயா.தலைமைப் பண்பிற்கான சுய மதிப்பீடு அருமை.வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
  11. சுய பரிசோதனை அருமையான விடயம்.
    எத்தனையோ விஷயங்களில் தினம்தினம் நாம் எம்மை பரிசோதித்துக்கொண்டேதான் வாழவேண்டிய காலகட்டத்தில் வாழ்கின்றோம். நல்ல பதிவு.

    உங்களை எல்லோருக்கும் எனக்கும் பிடிக்கிறது தனபாலன் சார்!!!

    த.ம.2

    பதிலளிநீக்கு
  12. சுய மதிப்பக்கான சிறப்பான பகிர்வு

    பதிலளிநீக்கு
  13. அவரவர் பார்வையில் அவரவரை எடை போட்டுக் கொள்ள சிறந்த பயிற்சி. சுப்பு தாத்தாவின் பின்னூட்டம் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  14. ஆய்வு அருமை !

    சுவாரசியமான விசயங்கள் பல கற்றுக்கொள்ள நேரிட்டது.

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  15. சுயபரிசோதனை தேவையான ஒன்று தான். மிக மிக பயனுள்ள பகிர்வு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  16. //உடல் நலம், மன நலம் இவைகளை கருத்தில் கொண்டு நமது பலத்தையும், பலவீனத்தையும் உண்மையா சோதனை செய்வதே இந்த ஆய்வு// ஒவ்வொரு வரியும் ஆணி அடித்தாற்போல இருக்கிறது.

    வாழ்க்கையே எதிரொலி போலத்தான் - மிக அழகாச் சொன்னீங்க!

    பதிலளிநீக்கு
  17. // உள் மனதில் தவறு என்று தெரிந்ததை... செய்யாமல் உறுதியாக இருந்தால், வாழ்க்கை என்றும் சுவாரசியம் இருக்கம் ....// உண்மை.
    நாம் உணர்ந்து நம் தலைமுறையை வழிகாட்ட வேண்டும் என்று அழகாக சொல்லி இருக்கிங்க. சமூகத்தில் மறைந்து வரும் பண்புகளை மீண்டும் கண்டறிய உதவும் ஒரு நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  18. பத்து நண்பர்களும் தேர்ந்தெடுத்த முத்துக்களாக இருப்பது ரொம்ப விசேஷம் பாராட்டுக்கள் தனபாலன்

    பதிலளிநீக்கு
  19. மிக அருமையான கட்டுரை ..என் மகளுக்கு இப்படி assess மற்றும் evaluation செய்வது ரொம்ப பிடிக்கும் ..அவளுக்கும் காட்டவேண்டும் .
    எல்லா விஷயத்தையும் உள்ளடக்கி அருமையான ஒரு மனவியல் சார்ந்த பதிவு .
    எல்லாருக்கும் உங்களை கண்டிப்பா பிடிக்கும் சகோ ..
    நானும் பாஸ் பண்ணிட்டேன் சுய மதிப்பீட்டில் :)))
    குழந்தைகள் மனதில்......நீங்கள் சொல்லியிருப்பது அற்புதமான கருத்து.

    பதிலளிநீக்கு
  20. நானும் படித்தேன் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றிகள் அண்ணா

    பதிலளிநீக்கு
  21. சுயசோதனை கேள்விகள் அருமை.நன்றி பகிர்வுக்கு.பகிர்ந்த அனைத்து வரிகளும் அசத்தல் ஏற்றுக் கொள்ளும் படியிருக்கு.

    பதிலளிநீக்கு
  22. இந்த சுய மதிப்பீட்டு கேள்விகளுக்கு மனசாட்சியுடன் பதிலளித்து தலைமைப் பண்பு என்னிடம் இருக்கிறதா? என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  23. நல்ல சுய பரிசோதனை வழிகாட்டி .
    முயன்று பார்த்து சொல்கிறேன்.
    உடல் நலம் போலவே தான் மண் நலமும் என்பதை நன்கு உணர்த்தும் பதிவு.

    பதிலளிநீக்கு
  24. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னதை நானும் திருப்பிச் சொல்கிறேன்.’உங்களை எனக்குப் பிடிக்கிறது!’

    பதிலளிநீக்கு
  25. உள்மனதில் தவறு என்று தெரிந்ததை செய்யாமல் உறுதியாக இருந்தால் - மற்றவர்களை மாற்றும் வல்லமை உண்டாகும் என்பது வைரவரிகள்... ஆனால் கல்லுக்கு நீதி சொல்ல முடியாது.. நீ என்ன சொன்னாலும் என்வழி மாறாது என்று இருப்பவர்களால் தான் பிரச்னையே!..

    பதிலளிநீக்கு
  26. அருமையான பதிவு.
    ஆண்டுக்கு ஒருதடவை மருத்துவ பரிசோதனை போல் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். நன்றாக சொன்னீர்கள்.


    தினம் தினம் சுயபரிசோதனை வேண்டும்.

    இரவு தூங்க போகும் போது ஒரு தடவை இன்று எப்படி நடந்து கொண்டோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்பார்கள் மகரிஷி.

    உள்மனதில் (மனசாட்சி) தவறு என்பதை செய்யாமல் இருந்தாலேபோதும் என்று நன்றாக சொன்னீர்கள்.
    அடுத்தவர்களை நேசிக்க கற்றுக் கொண்டாலே போதும் என்பதை உங்களை எனக்கு பிடிக்கிறது என்று மலைமேல் ஏறி அழகாய் சொல்லசொல்லி விட்டீர்கள்.
    உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.
    பதிவு அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. சுய பரிசோதனை நிச்சயம் தேவை! நான் கூட இப்படி கேட்டுக்கொள்வேன். அருமையான விஷயங்களை பகிர்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  28. தன்னை உணர்வதே வாழ்வின் முக்கிய அம்சம்..நல்லதொரு பதிவுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு

  29. எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  30. நல்ல பதிவு நண்பரே, சுயபரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம், நீங்கள் சொல்வது போல் அது தொடர்ந்து செயல்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
  31. நல்ல சுய பரிசோதனை வழிகாட்டி ...அருமையான கட்டுரை...

    பதிலளிநீக்கு
  32. சுய பரிசோதனை ஆய்வு நன்று நமக்கு !
    தொடருங்கள் அன்பரே

    பதிலளிநீக்கு
  33. சுய பரிசோதனையை எல்லோரும் தொடங்க வேண்டும் smartய் என சொல்லியமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  34. சுயபரிசோதனை மிகவும் அவசியமாகிப்போகிறது.

    பதிலளிநீக்கு
  35. பயனுள்ள பதிவு. வாழ்வின் வெல்லத் துடிக்கின்ற இளம் உள்ளங்களுக்க இச் சுயபரிசோதனை பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

    பதிலளிநீக்கு
  36. சிந்திக்க வைத்த அருமையான பதிவு.

    எனக்கும் உங்களை மிகவும் பிடிக்கும் தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  37. படித்து கொண்டே இருக்கிறேன் மனதிற்கு தேவையான பயிற்சி இதில் நாமதான் உண்மையா இருக்கனும் சார் இது கம்பி மேல நடக்கிற மாதிரிதோணுது நம்மை காப்பாற்றி கொள்ள நாமதான் நமக்கு உதவ முடியும் முதலில் சுயத்தை அறிய சொல்லி கொடுக்க பட்டுள்ள இந்த விஷயங்கள் பல பேரால் சொல்லி கொடுக்க பட்டவைதான் என்றாலும் எப்போதும் புதிதாய் தோன்றும் அது சொல்லி கொடுக்கிறவங்களோடமனநிலமையும் திறமையை பொறுத்தது அதில் நீங்க எக்ஸ்பர்டா இருக்கீங்க நான் முடிவு சொல்ல முடியாது ஏன்னா நான் இன்னும் இரண்டு மூன்று முறையாவது படித்து புரிந்து கொண்டுதான் சொல்ல முடியும் படித்தேன் படிக்கிறேன் படிப்பேன் அப்படி பட்ட பதிவுகள் இவைகள் மீண்டும் வருகிறேன்உங்கள் தலைப்பே போதும் இருந்தும் நன்றி நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  38. மிகவும் அவசியம் சுயபரிசோதனை எனக்கும் உங்களைப்பிடிக்கும் சார்!

    பதிலளிநீக்கு

  39. வணக்கம்!

    தன்முயற்சி கட்டுரை! வாழ்வு தழைத்திடவே
    பொன்குழைத்துத் தந்தீா் பொலிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  40. "நம் மனதை ஒரு நாள் சுய பரிசோதனை செய்வோமா... வாங்க..." என்று அழைத்து மூளைக்கு வேலை கொடுத்து நல்வழிகாட்டும் தங்கள் பதிவுகளை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  41. நீண்ட பட்டியல்!
    தன்னாய்வு செய்யாதவர்கள் தலைமையேற்றால் அவர்களுக்கே துன்பம் தான்.
    at least தன்னுடைய பலவீனங்களையாவது அறிந்து கொள்ள உதவும்.

    பதிலளிநீக்கு
  42. சுயபரிசோதனை மிக அவசியம் என்பதை உணர்த்தும் அற்புதமான பதிவு! "உன்னையறிந்தால் நீ உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம்"! எனும் வரிகள் நினைவுக்கு வந்தன! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  43. சுயபரிசோதனை மிகவும் அவசியமானதொன்று. இந்தக் கேள்விகள் மிகவும் பிடித்திருந்தது. வெளியில் சொல்லாவிட்டாலும், நமது தகுதி எது, இன்னும் எவ்வளவு நாம் முன்னேர வேண்டும் என்பதை மனது அறிந்துவிடும். சிந்திக்க வைக்கும் பதிவு.
    ஒருதரமல்ல, பலமுறை படித்து உண்மையாக நம்மை மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.
    அருமையான பதிவு. சிந்திக்க வைக்கிரது. அதுவே மிக்க விசேஷமானது. நன்றி .

    பதிலளிநீக்கு
  44. ’சுய மனப் பரிசோதனை’...

    முற்றிலும் புதிய சிந்தனை.

    மனதைச் சீர்திருத்திக் கொள்ள உதவும் அருமையான பதிவு.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  45. நிறைய சொல்லியிருக்கிறீங்க... ஆனா எனக்கு சரியா புரியுதில்ல.. மீண்டும் மீண்டும் படிக்கிறேன்ன்ன்....

    பதிலளிநீக்கு
  46. மற்றவர்களின் குணங்களை ஆராயும் முன்னர்...
    நாம் யார்.. எந்த நிலையில் இருக்கிறோம்
    என்று உள்ளூர சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
    என்கிற வகையில் உங்களது அனைத்து பதிவுகளுமே
    வாழ்வியல் சாசனங்கள்...

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் தோழரே. நல்ல அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  48. சுய பரிசோதனையில் பொய்யில்லாமல் இருந்தால் வெற்றியே. இதை அடிக்கடி செய்ய வேண்டும். தன்பாலன்
    எனக்குஎப்பொழுதோ படித்த எஃபெக்டிவ் கம்யூனிகேஷன் நினைவுக்கு வந்தது.
    மிக மிக நன்றி அருமை நண்பரே. உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  49. சுய பரிசோதனை மிகவும் அவசியமானது.நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  50. சுய பரிசோதனை ஆய்வு நன்று
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  51. அருமையான இடுகை தனபாலன்.
    தகவல்களைத் தேடி... அழகாகத் தொகுத்து... பொறுமை அதிகம் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  52. மிக அரிய பதிவு; மிகவும் பயன் தருவது.

    மீண்டும் மீண்டும் பாராட்டத் தோன்றுகிறது.

    மீண்டும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  53. நிதானமாய்ச் செய்ய வேண்டியது, அவசியமானதும் கூட.

    பதிலளிநீக்கு
  54. தமிழ்மணத்தில் என் பதிவை எவ்வாறு புதுபிப்பது என கூறுங்களேன் தோழரே.

    தமிழ்மணப் பதிவுப்பட்டை கிடைத்தாலும்.. அதில் கிளிக் செய்யும்போது Error வருது.

    எனது வலைபதிவு jeshwatamiltamil.blogspot.in
    இதில் (.com ) இல்லாமல் (.in) என்று இருப்பதாலா?
    ___________________________________

    எனக்கு தெரியவில்லை. எனவே இதை இரவின் புன்னகை வலைபதிவரிடம் கேட்டிருந்தேன்.. அவர் தங்களிடம் கேட்டால் பதில் கிடைக்கும் என கூறினார்.

    கொஞ்சம் விளக்கம் தர முடியுமா சார்?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.