🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கொம்பில்லா மனிதம்...

அனைவருக்கும் வணக்கம்... திருக்குறள் பற்றி விக்கிப்பீடியாவில் உள்ள சிலவற்றை இங்கே சொடுக்கிச் சென்று வாசிக்கலாம்...


கொம்பில்லா குறள்கள்

அறத்துப்பால்

10. இனியவைகூறல்: 100. இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
23. ஈகை: 224. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு
36. மெய்யுணர்தல்: 352. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு

பொருட்பால்

97. மானம்: 969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்
100. பண்புடைமை: 999. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்
102. நாணுடைமை: 1011. கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற
106. இரவு: 1051. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று
குறள்களின் குரல்

100. இனிய சொற்கள் இயல்பிலேயே அமைந்திருக்க, இனியவை அல்லாதவற்றைக் கூறிக் கொண்டு திரிதல், கனிகள் கையில் இருப்ப, சுவையில்லாத காய்களை விரும்பிக் கொண்டது போலவும் இருக்கிறார்கள்...!

224. தன்னால் முயன்று பொருளைக் கொடுக்கும்போது, வாங்குபவர்களின் முகத்தில் மலர்ச்சி தோன்றும் வரையில், துன்பம் அடையும் ஈகையாளர்கள் இருக்கிறார்கள்... இதுவல்லவோ இரக்கம் எனும் நிலையான புகழ் கொண்டவர்கள்...!

352. அது போலும் மனிதர்கள், "காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்..." என்று ஆடிப்பாடிக் களிக்கக்கூடிய குற்றமற்ற பார்வை எய்தியவர்களும் இருந்தார்கள்... 'எது பொய்? எது உண்மை?' என்று ஆய்ந்துணர்ந்து, பொருள் அல்லாதவற்றைப் பொருள் என்றுணர்ந்த அவர்களின் தூய்மையான தெளிவான உலகப் பார்வையால், உள்ளத்தில் மெய்யுணர்வு பெற்று, மேன்மையான இன்பம் அடைந்தவர்கள்...

969. அத்தகு மேன்மை பெற்றவர்கள். மயிர் நீங்கினால் உயிர்வாழ முடியாத கவரிமாவைப் போன்றவர்கள்; மானம், உயிர் இவற்றில் ஒன்றுதான் தங்கும் என்னும் நிலை வந்தால் உயிரைப் பலியாகக் கொடுத்து மானம் காப்பர் நற்பண்பு பின்பற்றுபவர்கள்...

999. அத்தகைய நற்பண்புகள் இல்லாதவர்கள், மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பும் இல்லாதவர்கள்; அவர்களுக்கு இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போன்றதே...

1011. இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே பொதுவாக அனைவருக்கும் வெட்கம் எனப்படுவதாகும்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கமாகும்...

1051. கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அவரிடம் அவை இருந்தும் இல்லையென்று சொல்லிவிட்டால், அவருக்குத் தான் பழியே தவிரக் கேட்டவருக்கு அல்ல...

அடுத்த பகுதி : கொம்பில்லா தலைமை

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. குறள்களின் விளக்கம் வழக்கம் போலவே அழகு ஜி.

    பதிலளிநீக்கு
  2. குறள்களின் குரல் அருமை.
    பகிர்ந்த குறள்கள் எல்லாம் மிக அருமை.

    "காக்கை குருவி எங்கள் ஜாதி -நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்"

    பாரதியின் நினைவு நாளில் அவரையும் நினைவு கூர்ந்து விட்டீர்கள்.

    மிக அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  3. சுவையான தகவல்களை சென்று படித்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சிறப்புக் குறட்பா தொகுத்து விளக்கி
    மறக்காமல் மீட்க உணர்ந்து
    (ஒரு விகற்பக் குறட்பா)

    அருமையான படைப்பு இது
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. கொம்பில்லா குறள்கள் சிறப்பு அதுபோல்
    வம்பில்லா மனிதமும் சிறப்பே.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல மிக அருமையான பதிவு. நிறைய விஷயங்களை அதுவும் தெரியாத விஷயங்களை பதிவில் குறிப்பிட்டிருந்தது சிறப்பாக உள்ளது. குறள்களும் அதன் விளக்கங்களும் மிகவும் நன்றாக உள்ளது.
    முதலில் கொடுத்திருந்த சுட்டியும், படித்தறிய பயனுள்ளது. அற்புதமான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. கொம்பில்லா மனிதனிடம் வம்பு இருக்காது என்று ஒரு பாடல் வரி.. நிணைவுக்கு வருகிறது... புத்தரும் அன்றே சொன்னார் ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் என்று.... எனது பார்வை --- இல்லாதவர்கள் ஆசைபட்டால் துன்பம் வந்து சேரும் . ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள்- பணக்காரர்கள் ஆசைபட்டால்.. பொன்-பெண் - பொருள் -பணம் எல்லாம் வந்து சேரும் என்பதுதான் நடப்பு நிலைமை..

    பதிலளிநீக்கு
  8. கொம்பு...நம் தமிழின் சிறப்புகளில் ஒன்று. திருக்குறளில் அலசி ஆய்ந்து பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு

  9. இங்கே சொடுக்கி உள்ளே சென்றேன் பிரமிப்பான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  10. வழமை போலவே சிறப்பான வகையில் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  11. கொம்பு
    தங்களின் ஆய்வுப் பார்வைப் போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு
  12. சுவாரசியமான தகவல்கள்தான். த வரிசையில் தா,தீ, தவிர இதர ஒரு சொல் வார்த்தைகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அறியாததை அறிந்தேன். கொம்பில்லா குறள்களை அறியவைத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.