🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஞாபகம் இருக்கா...? (SET 3) ISO - Part 6

வணக்கம் நண்பர்களே... ஆய்வை ஆரம்பிப்போமா...? அதற்கு முன் விருப்பமுள்ளவர்கள் SET என்று dindiguldhanabalan@yahoo.com-க்கு தகவல் அனுப்பவும்... அவர்களுக்கு pdf வடிவில் அனுப்பி வைக்கிறேன் --> நிறைவுப் பகுதியை முடித்த பின்... இனி...


முதல் பகுதி : என்னைப் பற்றி ஆய்வு (SET 1) ISO - Part 4
இரண்டாம் பகுதி : அந்'தரத்திலே'... (SET 2) ISO Part 5

(படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கிக் கணக்கிடலாம்...) ஒவ்வொரு கேள்விற்கும் ஆமாம் (YES) என்றால் +2 மதிப்பெண், இல்லை (NO) என்றால் -1 மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள்... இனி...

பகுதி மூன்று

சுய மதிப்பீடு ஆய்வு : தலைமைப் பண்பு

(SELF EVALUATION TEST : LEADERSHIP)

சுருக்கமாக SET என்று வைத்துக் கொள்வோமா...?

51) Do you have patience ? (பொறுமை)

52) Do you search for a third solution to a problem ? (மூன்றாவது தீர்வு)

53) Do you like to meet people often and discuss ? (அடிக்கடி)

54) Are you creating a positive image about you / your company ? (நல்ல எண்ணம்)

55) Do you support your subordinates when they come with some suggestions ? (சில பரிந்துரைகள்)

56 Can you change the priorities according to the situation ? (சூழ்நிலைக்கேற்ப)

57) Do you follow professional approach ? (திறமையான அணுகுமுறை)

58) Have you established yourself as a trustworthy person ? (உறுதி செய்யப்பெற்ற)

59) Do you discriminate ? (வேறுபடுத்தி உணர்பவர்)

60) Are you continuously developing information sources ? (மேம்படுத்துதல்)

61) Are you evaluate the facts before coming to a conclusion ? (முடிவு)

62) Do you appear personally on the spot whenever an important event occurs ? (முக்கிய நிகழ்வு)

63) Do you maintain a good conversation with others ? (நல்ல உரையாடல்)

64) Do you practice “open door policy” ? (திறந்த வெளிக் கொள்கை)

65) Are you punctual ? (காலந்தவறாமை)

66) Do you always have an agenda for action ? (நிகழ்ச்சித் திட்டம்)

67) Do you have small number of goals ? (இலக்குகள்)

68) Due you practice “value adding” concept ? (திறன் வளர்க்கும்)

69) Are you firm in your ideas / views with open-mind ? (உறுதி)

70) Are you encouraging training of subordinates periodically ? (மீண்டும் மீண்டும்)

71) Are you updating your professional knowledge ? (காலத்திற்கேற்றவாறு)

72) Are you considered as a role model for “sound character” ? (சிறப்புப் பண்பாளர்)

73) Are you taking notes and act accordingly ? (ஒத்திசைவாக)

74) Are you maintaining harmonial relations with others ? (இணக்கமான உறவுகள்)

75) Do you murmur to show your unhappiness ? (முணுமுணுத்தல்)

தோழர்களே... இது ஒரு சுய பரிசோதனை... உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைகளுக்கு (சில கேள்விகள் தவிர்த்து) அல்லது நண்பர்களுக்கு உதவலாம்... சரி...
15 கேள்விகள் 'YES' என்றால் (15)x(+2)=30 மதிப்பெண்கள். மீதம் 10 கேள்விகள் (10)x(-1)=-10 மதிப்பெண்கள். இந்தப் பகுதியில் மதிப்பெண்கள் = 30-10 = 20

நண்பர்களே... எனது ISO குரு இந்த நூறு கேள்விகளுக்கும் எவ்வாறு பதில் வாங்கினார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா...? ISO பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் போது, "அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில், இந்த நூறு கேள்விகளுக்கும் பதில் வேண்டும்... பொருந்தாத கேள்விகளுக்கு எந்த மதிப்பெண்ணும் இல்லை" என்று சொன்னார்... நானும் அரை மணி நேரத்திற்குள் எழுதிக் கொடுக்க, வாங்கி வைத்துக் கொண்டார்... பல நிறுவன வேலைகளில் சில மாதங்கள் கடந்து விட்டன...

இதே SET மறுபடியும்... முன்பைவிட சிறிது மாறி உள்ளோம் என்று மட்டும் அறிவேன்... அதை விட "சில கேள்விகளுக்கு முன்பு என்ன பதில் எழுதி இருந்தோம் ?" என்கிற குழப்பத்தினால் எழுத 1 மணி நேரம்...! ஹிஹி... இதையும் வாங்கி வைத்துக் கொண்டார்... இதை மறந்து போன நிலையில், மறுபடியும் ஒரு நாள் "ஞாபகம் இருக்கா...?" என்று இதே SET... இப்போது தனி அறையில் இல்லாமல், அவருக்கு முன் உட்கார்ந்து பதில் எழுத வேண்டும்..!

நண்பர்களே... SET-PART 1 & 2-ல் எடுத்த மதிப்பெண்களையும் இதில் சேர்த்துக் கொண்டு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... முடிவாக "மூன்று முறை ஆய்வு செய்தீர்களே, என்ன மதிப்பெண்கள்?" என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது... மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடுவது என்றே சொல்லவில்லை... { (+/-) வெறும் டிக் செய்வது மட்டுமே } மூன்றாவதாக எழுதியதையும் அவர் வாங்கிக் கொள்ளவில்லை...(?) முடிவில் முடிவு...!

ISO பற்றி அறிய : அட...! அவ்வளவு தானா...! ISO - PART 1 சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ஆய்வா.. புதிதாக இருக்கிறது... ம்ம் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. மிக சிறப்பான பகிர்வு பிடிஎஃப் க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்

    பதிலளிநீக்கு
  3. அருமையாய் சுய பரிசேதனை செய்துகொள்ள சிறப்பான பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
  4. இளைஞர்களுக்கு உதவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. சுய பரிசோதனை செய்துகொள்ள மிகச்சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. இந்த சுயப்பரிசோதனையில் மனசாட்சிக்கு ஏற்ப பதில் சொல்ல வேண்டும்.
    அப்போதுதான் நம்மைப் பற்றி நமக்கே ஒரு விழிப்புணர்வு வரும்.

    நாங்களும் இந்த மாதிரி பரிசோதனைக் கேள்விகள் கேட்பதுண்டு. 'எங்களுக்கு சரியான பதில் வேண்டாம். உங்களின் பதில் வேண்டும்' என்று சொல்லுவோம்.

    மிக நல்ல கேள்விகள்!

    பதிலளிநீக்கு
  7. யோசித்து பதில் வரவழைக்கும் கேள்விகள். அருமை.

    பதிலளிநீக்கு
  8. சுய பரிசோதனைக் கேள்விகள் அனைத்துமே அருமை. ஒவ்வொருத்தரும் தன்னைத் தானே இம்மாதிரிப் பரிசோதித்தால் தவறுகளைத் திருத்திக் கொள்ள இயலும்.

    பதிலளிநீக்கு

  9. நான் முதல் பகுதிக்கு அளித்த பதிலையே மீண்டும் சொல்கிறேன். மேலும் இம்மாதிரி சுய பரிசோதனைகள் சரியான முடிவுகளைத் தருவதில்லை என்பதும் என் கருத்து. தங்களிடம் இருக்கும் குறைகளை ஒப்புக்கொள்ளும் மனோபாவம் இருக்குமா என்பதே கேள்வி. ISO யில் சொலதைச் செய். செய்வதைச் சொல் என்பார்களே. சரிதானே. வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம். எப்படி உங்களால் அநேகமாக எல்லோருடைய பதிவுகளையும் படித்துக் கருத்துஇட முடிகிறது.? என்னால் முடிவதில்லையே.

    பதிலளிநீக்கு
  10. அருமை! தன்னைத்தான் நேசித்தல் என்பதுபோல சுய பரிசோதனை...
    நல்ல விஷயம். இதைவைத்து ஆராய்ந்தாலே எங்கு நாம் நிற்கிறோம் எவ்வகையில் திருத்தம் மேற்கொள்ளவேண்டுமென தெரிந்துவிடும்.

    நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. குறித்து வைத்துக் கொண்டேன், நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  12. முற்றிலும் மாறுபட்ட சுய பரிசோதனை முறை.

    பிறகு பரிசோதிப்பேன்.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  13. 57, 58 வது கேள்விகளுக்கு நமக்கு நாமே பதிலளிப்பது சாத்தியமா?

    ஓரிரு கேள்விகளுக்கு ஆமாம் இல்லை இரண்டு பதில்களுமே சொல்ல முடியவில்லை.

    எனக்கு 25 மதிப்பெண்கள் வந்தன. முணுமுணுக்கும் பழக்கத்துக்கு ஆமாம் என்றால் எப்படி +2 மதிப்பெண்?

    பதிலளிநீக்கு
  14. இது ஒரு வித்தயாசமான பதிவாக உள்ளது.
    நான் பிறகு வந்து பொறுமையாக சிந்தித்துப் பார்த்து படிக்கிறேன் தனபாலன் ஐயா.

    பதிலளிநீக்கு
  15. சுயபரிசோதனை கேள்விகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது தனபாலன்.

    ஒவ்வொருவருக்கு சுய பரிசோதனை அவசியம் தான். எங்கள் மன்றத்தில் அகத்தாய்வு என்போம். நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. நம்மைப்பற்றி நமக்கு தானே தெரியும்.
    நல்லவைகளை மேம்படுத்தி அல்லாதவைகளை களைந்தால் மனிதன் மாமனிதன் ஆகிவிடுவான். அதற்குதான் முயற்சிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  16. சுயமதிப்பீடு என்பது நிச்சயம் தேவையானதொன்று அப்போதுதான் அவர்களின் ப்ளஸ்,மைனஸ் எதுவென்று தெரியும்.வித்தியாசமான, நல்லதொரு பதிவு.நன்றி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. வாழ்வில் முன்னேற்த் துடிப்பவர்களுக்க சுயபரிசோதனை அவசியம், சிறந்ததொரு பகிர்வு, மிகவும் உபயோகமான பதிவு நன்றி

    பதிலளிநீக்கு
  18. என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டியவை

    சிந்தனை தரும் பதிவு !

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  19. நல்ல பதிவு ஐயா,கவலைப்படும் போது முணுமுணுப்பது அருகிலுள்ளோரை எரிச்சல் படுத்துமே அதற்கு பிளஸ் புள்ளி கொடுத்தது தான் இடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் DD உங்களின் அருமையான பதிவு இது. ஒவ்வொரு மனிதனுக்கும் சுய மதிப்பீடு அவசியம் என்பதை உணர்த்தியுள்ளீர்கள்.

    எமது பனிப்பூக்கள் (http://www.panippookkal.com/ithazh/)வலை இதழுக்கும் அடிக்கடி நல்ல கருத்துகளை எழுதி ஊக்கம் தருகிறீர்கள்

    நன்றி.
    -தியா-

    பதிலளிநீக்கு
  21. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்பது போல தன்னை அறிய உதவும் பயனுள்ள கேள்விகள்.இவற்றிற்கான பதிலை சொல்லி தன மதிப்பேடு செய்த்கொள்ள முயல்வேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. பயனுள்ள பதிவு.
    தன் பலம்/பலவீனங்களை அறிந்தவர்கள் பொதுவாக அதிக வெற்றிகளை அடைகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  23. நண்பரே நான் உங்கள் பழைய பதிவு இந்த பதிவு குறைந்தது மூன்று முறை அமைதியாக படித்துவிட்டு வருகிறேன் பதில் சொல்ல

    பதிலளிநீக்கு
  24. அருமையான பகிர்வு...

    எனக்கும் pdf வேண்டும்.... மின்னஞ்சல் அனுப்புகிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  25. சுயபரிசோதனை நல்ல விடயம் தானே தனபாலன் சார். நன்றி மிகவும் பயன் உள்ள விடயத்தை பகிர்ந்ததுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு


  26. தங்கள் பதிவும் பணியும் பாராட்டுக்குரியது!

    பதிலளிநீக்கு
  27. சுய முன்னேற்றம் பற்றிய பகிர்வுக்கு!

    மிக்க நன்றி!

    மற்ற பகிர்வுகளையும் -இன்ஷா அல்லா
    (இறைவன் நாடினால்..)
    படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.
    நேரம் இன்மையால்தான் பெரும்பாலான வலையுக சொந்தங்களின் பகிர்வுகளை படிக்க முடிவதில்லை.

    முயற்சிக்கிறேன் சகோதரரே....

    நீங்கள் எனக்கு தரும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி!

    அதற்கு மறுமொழிகூட கொடுக்க முடியாத நிலை.

    தொடர்கிறேன்....
    p

    பதிலளிநீக்கு
  28. நல்ல விடயம்
    பலருக்கும் தம்மைப் பற்றி யோசிக்க வைக்கும்.
    பிராசையுடன் விரிவாக இழுதியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  29. நல்ல பதிவுதான், ஆனா எனக்கு தலை சுத்துது வாசிக்க....

    பதிலளிநீக்கு
  30. சுய பரிசோதனை செய்துகொள்ள மிகச்சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்.
    Vetha.Elangathilakam

    பதிலளிநீக்கு
  31. @ஸ்ரீராம். அவர்களுக்கும் @S.டினேஷ்சாந்த் அவர்களுக்கும், 1) அவ்வாறு செய்யவில்லை என்றால் என்னவாகும்...? 2) மதிப்பெண்களை மறந்து ஆய்வு செய்தால்... 3) அதைப்பற்றி தான் அடுத்த நிறைவு பகுதியில் விளக்கமாக காணலாம்...

    பதிலளிநீக்கு

  32. வணக்கம்!

    தன்னிலை ஆய்ந்து தகைமை உணா்ந்திட
    நன்னிலை நல்கும் பதிவு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  33. மிகச்சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  34. உங்களுக்கான பரிசு ஒன்று எனது வலைப்பூவில் இருக்கிறது வந்து பெற்றுக்கொள்ளவும்...http://www.en-iniyaillam.com/2013/03/passion-on-plate.html

    பதிலளிநீக்கு
  35. http://www.en-iniyaillam.com/2013/03/passion-on-plate.html

    மேற்படிப் போட்டியில் கலந்து கொள்ளாமலேயே, பரிசுக்குத் தேர்வாகியுள்ள தங்களுக்கு என் அன்பான மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  36. மீண்டும் மீண்டும் பாராட்டத் தூண்டும் பதிவு.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  37. http://www.sinthikkavum.net/2013/03/blog-post_5904.html

    இந்திய தேசிய கட்டமைப்பில் தமிழ் இனத்திற்கு இடமில்லை!

    பதிலளிநீக்கு
  38. மூன்று செட்களையும் செய்துவிட்டேன். ஆவலோடு அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  39. இது எனக்குப் புதுசு?
    இருந்தாலும் உங்கள் பழைய பதிவுகளைப் படித்து விட்டு வந்து இந்த டெஸ்ட்ஐ எடுத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  40. நிறைவுப் பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  41. கருத்துரைப் பகுதியில் உள்ள குறளும் விளக்கமும் பொருத்தமானதாக உள்ளது.

    சுய பரிசோதனை செய்துகொள்ள பயன்படும் பதிவு. ஒவ்வொரு மனிதனும் தன்னை சுய பரிசோதனை உட்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவனுடைய உண்மையான நிலை அவனுக்குத் தெரியவரும்.

    பகிர்வுக்கு நன்றி தனபாலன் அவர்களே..!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.