வணக்கம் நண்பர்களே... (1) படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்பதற்காக, தெரிந்த அல்லது சொந்த தொழிலைத் தைரியமாகச் செய்பவர்களுக்கு... (2) அறிவை தந்த தந்தையின் பாரத்தையும், அன்பே அனைத்தும் எனும் தாயின் மனதையும், தன் பொறுப்புகளையும் எந்தச் சூழ்நிலையிலும் மாறாது உணர்ந்தவர்களுக்கு... (3) எப்பேர்ப்பட்ட வலிகள் இருந்தாலும், தொடர்ந்தாலும்... நல்ல எண்ணங்கள், பண்புகள், குணங்கள், மற்ற அனைத்தும் தளராத, அயராத உழைப்பின் மூலம் மட்டுமே என்று அறிந்து தெரிந்து புரிந்தவர்களுக்கு - இன்று மட்டுமல்ல... என்றும் நமக்குத் தொழிலாளர் தினம் தான்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...