🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



எண்ணத்தை மேம்படுத்தும் சில பாடல்கள்...

வணக்கம் நண்பர்களே.. முதலில் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள் பல இருந்தாலும் சிலவற்றைத் தொகுத்துள்ளேன்.. இந்தப் பதிவு பல அன்பர்களின் வேண்டுகோள்..!


ஆமாம் நண்பர்களே...! இந்தப் பாடல்களை இன்றைய நிலவரப்படி அதிகம் பார்க்கப்பட்ட பதிவான எண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது ? - இந்தப் பதிவு எழுதும் போது, மனதில் பாடல் வரிகள் தோன்றின. அவற்றை மிக்ஸ் செய்து வெளியிடலாம் என்று தோன்றிய போது தான் DD Mix (Dindigul Dhanabalan Mix) ஆரம்பமானது. இன்பமோ / துன்பமோ, வெற்றியோ / தோல்வியோ - நமக்கு வரும் போது நம் மனதில் சில பாடல் வரிகள் ஓடிக்கொண்டிருக்கும். அப்படி கீழே உள்ள பாடல்களில், எந்தப் பாடல் பிடித்துள்ளது என்பதை நீங்க தான் சொல்ல வேண்டும் ...!

இந்தப் பாடல்களை சில பேர் கேட்டு இருப்பீர்கள்.. சில நண்பர்கள், "கேட்கவில்லை, பிளேயர் தெரியவில்லை, Load ஆக நேரம் ஆகிறது, அதனால் பணத்தைப் பற்றி எழுதிய எண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது ? பதிவைப் போல் வரிகளாக எழுதுங்கள்" என்று சொன்னதால் இதோ உங்களுக்காக... (நீலக்கலரில்-அருமை வரிகள், சிவப்புக்கலரில்-என் கருத்துக்கள்)



01. படமும் / முதல் வரியும் : மன்னாதி மன்னன் / அச்சம் என்பது மடமையடா..

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்..? மாபெரும் வீரர், மானம் காப்போர், சரித்திரம் தனிலே நிற்கின்றார்..!

"துணிந்தவனுக்கு ஒரு நாள் சாவு ! கோழைக்குத் தினம் தினம் சாவு !"
02. படமும் / முதல் வரியும் : ஆட்டோகிராப் / ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..

உள்ளம் என்பது எப்போதும், உடைந்து போகக்கூடாது.. என்ன இந்த வாழ்க்கை என்ற, எண்ணம் தோன்றக்கூடாது.. எந்த மனிதன் நெஞ்சுக்குள், காயமில்லை சொல்லுங்கள்.. காலப் போக்கில் காயமெல்லாம், மறைந்து போகும் மாயங்கள்.. உளி தாங்கும் கற்கள் தானே, மண் மீது சிலையாகும்.. வலி தாங்கும் உள்ளம் தானே, நிலையான சுகம் காணும்.. யாருக்கில்லைப் போராட்டம்..? கண்ணில் என்ன நீரோட்டம்..? ஒரு கனவு கண்டால், அதை தினம் முயன்றால், ஒரு நாளில் நிஜமாகும்..! மனமே ஓ மனமே நீ மாறிவிடு.. மலையோ.. அது பனியோ.. நீ மோதிவிடு..!

"வாழ்க்கையே போர்க்களம்.. வாழ்ந்து தான் பார்க்கணும்.. போர்க்களம் மாறலாம்.. போர்கள் தான் மாறுமா..?"
03. படமும், முதல் வரியும் : தர்மம் தலை காக்கும்

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம், ஆனந்த பூந்தோப்பு.. வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை - இது நான்குமறை தீர்ப்பு..

"தர்மம் - தக்க சமயத்தில் உயிர் காக்கும்.. கூட இருந்தே குழி பறித்தாலும், கொடுத்தது காத்து நிற்கும் !"
04. படமும் / முதல் வரியும் : மறுபடியும் / நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்..

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்.. மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்.. இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்.. எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்.. விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு.. நகங்களை நாமும் நறுக்குவதுண்டு.. இதிலென்ன பாவம்.. எதற்கிந்த சோகம்.. கிளியே..

"உலகத்தில் திருடர்கள் சரிபாதி.. ஊமைகள் குருடர்கள் அதில் பாதி.. கலகத்தில் பிறப்பது தான் நீதி-மனம் கலங்காதே மதி மயங்காதே..என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே.. தன்னாலே வெளிவரும் தயங்காதே.. ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.." (படம் : பணத் தோட்டம்)
05. படமும், முதல் வரியும் : மனித மனம் ஒரு குரங்கு

அடித்தாலும் அணைத்தாலும், வழிக்கு வராது.. அப்படியே விட்டு விட்டால், முடிவும் இராது.. நயத்தாலும் பயத்தாலும், அடங்கி விடாது.. நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது..

"அலை பாயும் மனதை எப்படிங்க அடக்குவது ..?"
06. படமும், முதல் வரியும் : கவலை இல்லாத மனிதன்

போவதைக் கண்டு கலங்காமல், வருவதைக் கண்டு மயங்காமல், மெய் தளராமல், கை நடுங்காமல், உண்மையும் பொய்யையும் உணர்ந்தவனே.. உலகத்தை அறிந்தவன், துணிந்தவன் அவனே - கவலை இல்லாத மனிதன்..!

"நேற்று என்பதும் கையில் இல்லை.. நாளை என்பதும் பையில் இல்லை.. இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு.. தோழா.." (படம் : உன்னாலே.. உன்னாலே..)
07. படமும் / முதல் வரியும் : படித்தால் மட்டும் போதுமா / நல்லவன்.. எனக்கு நானே நல்லவன்.. சொல்லிலும் செயலிலும் நல்லவன்..!

சிட்டு போல வானில் துள்ளிச் செல்ல வேண்டும்.. மண்ணில் கீரிப்பிள்ளைபோலே ஊர்ந்து செல்ல வேண்டும்.. தொல்லை என்ற பாம்பைக் கவ்விக் கொள்ள வேண்டும். தூய உள்ளம் வேண்டும்.. என்றும் சேவை செய்ய வேண்டும்..

"படத்தின் பெயரும், பாட்டின் முதல் வரியே போதுமே.."
08. படமும் / முதல் வரியும் : நாடோடி / கடவுள் செய்த பாவம்

நடப்பது யாவும் விதிப்படி என்றால், வேதனை எப்படித் தீரும்..? உடைப்பதை உடைத்து, வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும்..

"அப்படி சொல்லுங்க...! இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ, என்ன குணமோ..? இந்த மனிதன் கொண்ட கோலம்.."
09. படமும் / முதல் வரியும் : சாந்தி / வாழ்ந்து பார்க்க வேண்டும்.. அறிவில் மனிதனாக வேண்டும்.. வாசல் தேடி உலகம்.. உன்னை வாழ்த்திப் பாட வேண்டும்..!

நாடு காக்க வேண்டும்.. முடிந்தால் நன்மை செய்ய வேண்டும்.. கேடு செய்யும் மனதைக் கண்டால், கிள்ளி வீச வேண்டும்.. தமிழும் வாழ வேண்டும்.. மனிதன் தரமும் வாழ வேண்டும்.. அமைதி என்றும் வேண்டும்.. ஆசை அளவு காண வேண்டும்..

"ஆசை - அது தான் எந்த அளவு என்று தெரியலை.."
10. படமும் / முதல் வரியும் : அழகிய தமிழ் மகன் / முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா.. உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா..

நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே.. நீ இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே.. இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்.. அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே.. நீ அதை நீ மறக்காதே.. நேற்று நடந்த காயத்தை எண்ணி.. நியாயத்தை விடலாமா..? நியாயம் காயம் அவனே அறிவான்.. அவனிடம் அதனை விட்டுச் செல்.. ஹே தோழா.. முன்னால் வாடா.. உன்னால் முடியும்.. தல தளபதி தளபதி நீ தான் நீ தான்.. அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே.. அழகிய தமிழ் மகன் நீ தானே..!

"நல்லா கவனீங்க நண்பர்களே : 'தல'' யும் நீங்க தான், 'தளபதி' யும் நீங்க தான்.."
11. படமும் / முதல் வரியும் : ஆண்டவன் கட்டளை / ஆறு மனமே ஆறு..

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால், உலகம் உன்னிடம் மயங்கும்-நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.. உண்மை என்பது அன்பாகும்.. பெரும் பணிவு என்பது பண்பாகும்.. இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்..

"கொஞ்சம் உயர்ந்திட்டாலே 'நமக்கு எல்லாம் தெரியும்' என்கிற நினைப்பு வந்துடுதே.. என்ன காரணம்..? என்ன செய்வது..? அடுத்த பாடல் :"
12. படமும் / முதல் வரியும் : சுமை தாங்கி / மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

மனம் இருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்.. வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்.. துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்.. குணம்.. குணம்-அது கோவிலாகலாம்..

"வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்.. வாழை போலத் தன்னை தந்து தியாகியாகலாம்.. உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்.."
13. படமும், முதல் வரியும் : பணம் பந்தியிலே

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறையப் பேர்கள் உண்டு-அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு, ஒதுங்குவார்கள் கண்டு.. மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு, மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு-நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு..

"இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே-பிழைக்கும் மனிதனில்லே.."
14. படமும் / முதல் வரியும் : படிக்காதவன் / ஒரு கூட்டுக் கிளியாக.. ஒரு தோப்புக் குயிலாகப் பாடு.. பண்பாடு.. இரை தேடப் பறந்தாலும், திசை மாறித் திரிந்தாலும் கூடு.. ஒரு கூடு..

செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்.. உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்.. நேர்மை அது மாறாமல், தர்மம் அதை மீறாமல், நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்.. சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்.. சத்தியம் உங்களைக் காத்திருக்கும்.. தாய் தந்த அன்புக்கும், நான் தந்த பண்புக்கும் பூமாலை காத்திருக்கும்..

"தோப்பா..? தனிக் குடித்தனம் போய் கஷ்டப்பட்டால் தான் கூட்டுக்குடும்பத்தின் அருமை தெரியும்...!"
15. படமும் / முதல் வரியும் : சுமை தாங்கி / மயக்கமா..? கலக்கமா..?

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.. வாசல் தோறும் வேதனை இருக்கும்.. வந்த துன்பம் எது வந்தாலும்.. வாடி நின்றால் ஓடுவதில்லை.. வாடி நின்றால் ஓடுவதில்லை.. எதையும் தாங்கும் இதயம் இருந்தால்.. இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்..

"நாட்டுக்குள்ளே பாதி பேர்.. இல்லை... இல்லை.. முக்காவாசி பேர் வேற மயக்கத்திலே இருக்காங்க.. அதுவும் கலக்கம்(ல்) இல்லாம...! இதற்கு விடிவு : அடுத்த பாடல்கள்.."
16. படமும் / முதல் வரியும் : ஊமை விழிகள் / தோல்வி நிலையென நினைத்தால்...

விடியலுக்கில்லை தூரம் – விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்...? உன் நெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்...? யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் - பாதை மாறலாமா...? ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் - கொள்கை சாகலாமா...?உரிமை இழந்தோம், உடமையும் இழந்தோம் - உணர்வை இழக்கலாமா...? உணர்வைக் கொடுத்து, உயிராய் வளர்த்த - கனவை மறக்கலாமா...? தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன் வாழ்வை நினைக்கலாமா...? வாழ்வை சுமையென நினைத்து – தாயின் கனவை மிதிக்கலாமா...?

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானம் அளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போலச் சுவாசிப்போம்..! இலட்சம் கனவு கண்ணோடு, இலட்சியங்கள் நெஞ்சோடு, உன்னை வெல்ல யாரும் இல்லை.. உறுதியோடு போராடு..! மனிதா! உன் மனதைக் கீறி, விதைப் போடு மரமாகும்.. அவமானம் படு தோல்வி, எல்லாமே உரமாகும்..! தோல்வியின்றி வரலாறா..? துக்கம் என்ன என் தோழா..? ஒரு முடிவிருந்தால்.. அதில் தெளிவிருந்தால்.. அந்த வானம் வசமாகும்..!
17. படமும் / முதல் வரியும் : நீலமலைத் திருடன் / சத்தியமே லட்சியமாய் கொள்ளடா.. செல்லடா..

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே- உன்னை இடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே.. அத்தனையும் தாண்டி காலை முன்வையடா.. அத்தனையும் தாண்டி காலை முன்வையடா-நீ அஞ்சாமல் கடமையிலே கண்வையடா..

"வேட்டையாடு விளையாடு.. விருப்பம் போல உறவாடு.. வீரமாக நடையைப் போடு-நீ வெற்றி எனும் கடலில் ஆடு.." (படம் : அரச கட்டளை)
18. படமும் / முதல் வரியும் : நிச்சயத் தாம்பூலம் / ஆண்டவன் படைச்சான்..

நடந்ததை எண்ணிக் கவலைப்பட்டால்.. அவன் மடையன்.. ஆஹா.. நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன்.. போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்.. அவன் இவனே.. இவன் அவனே.. அட.. இன்றுமில்லை, நாளையில்லை, இரவில்லை, பகலில்லை.. இளமையும்.. முதுமையும் முடிவுமில்லை.. ஓஹோஹோ..

"ஆண்டவன் படைச்சான்.. எங்கிட்டே கொடுத்தான்.. அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்-என்னை மட்டுமல்ல.. உங்களையும் தான்.. அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்"
19. படமும் / முதல் வரியும் : எதிர்நீச்சல் / வெற்றி வேண்டுமா..?

வெற்றி வேண்டுமா..? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்.. சர்தான் போடா தலைவிதி என்பது.. வெறுங்கூச்சல்.. எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது.. கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது..?

"கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது"
20. படமும், முதல் வரியும் : உன்னால் முடியும் தம்பி

உன்னால் முடியும் தம்பி தம்பி-அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி.. தோளை உயர்த்து.. தூங்கி விழும் நாட்டை எழுப்பு-உன் தோளை உயர்த்து.. தூங்கி விழும் நாட்டை எழுப்பு.. எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்..

"நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்.. நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்.. தூங்காதே தம்பி தூங்காதே.."
21. படமும் / முதல் வரியும் : சிந்து பைரவி / மனதில் உறுதி வேண்டும்..

மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்.. நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்படவேண்டும்.. கனவு மெய்ப்படவேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்.. தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்.. கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும், பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்.. மண் பயனுற வேண்டும், வானமிங்கு தென்பட வேண்டும்.. உண்மை நின்றிட வேண்டும்.. ஓம் ஓம் ஓம் ஓம்...


குறிப்பு : இந்தப் பதிவு உருவாக்கக் காரணமும், இங்கு கேட்பொலியில் பாடிய அனைத்து பாடல்களையும் இணைத்து வெளியிட்ட கேட்பொலியை கேட்கவும் இங்கே சொடுக்கவும்... நன்றி...
மனிதர்களின் எண்ணத்தைச் சிதறடித்ததால் தான் இந்தப் பாடல்கள் வந்ததோ...? கேட்க : இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன், இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அருமையான பாடல்களை வெகு அழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. காலத்தால் அழியாத பாடல்களை அழகிய முறையில் தொகுத்துள்ளீர்.. இப்பாடல்கள் தங்களுக்கு மட்டும் அல்ல உலகத்தமிழர்களால் மறக்கமுடியாதது...

    பதிலளிநீக்கு
  3. சொல்லனால் நம்ப மாட்டீர்கள்....

    இன்றளவும் என்னுடைய ரிங் டோனாக ஒவ்வொறு பூக்கள் பாடலும்.. மனதில் உறுதி வேண்டும் பாடலும் இருந்து வருகிறது...

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    பதிலளிநீக்கு
  5. அருமையான பாடல்களின் தொகுப்பு நன்றி

    பதிலளிநீக்கு
  6. அருமையான கருத்துள்ள பாடல்களின் தொகுப்பு சகோ...படிக்கும் அனைவருக்கும் எண்ணத்தில் நம்பிக்கையும்,தெளிவும் உண்டாகும்..

    பதிலளிநீக்கு
  7. அண்ணா உங்கள் ஒவ்வொரு பதிவுக்காகவும் ரொம்பவும் மெனக்கெடுகிறீர்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா..

    பதிலளிநீக்கு
  8. காலத்தால் அழியாத பாடல்கள்
    மனிதன் சறுக்கும்போது ஊன்றுகொலாகும் உற்சாக பாடல்கள்

    மனதில் உறுதிவேண்டும்
    எனக்கான மட்டுமல்ல எல்லா மனிதர்களுக்குமான பாரதியின்
    உரத்த வரிகள்

    நீங்கள் சொல்லப்பட்ட எல்லா பாடல்களுமே
    எல்லாரும் அவசியம் கேட்க வேண்டிய பாடல்கள் சார்

    நல்ல பதிவு சார்

    பதிலளிநீக்கு
  9. அருமையான தொகுப்பு.நீல வண்ணத்திற்கு இணையாக சிகப்பு வண்ணமும் இருக்கிறது என்பது உண்மை.பாடல்களை இணைக்காவிட்டாலும் பதிவைப் படிக்கும்போதே பாடல்கள் கேட்பது போன்ற உணர்வு.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. ஆஹா......தேன்மழை பொழியுதே......அருமை அருமை நண்பரே, எக்காலமும் அழியாத அமுதம்....!

    பதிலளிநீக்கு
  11. காலத்தால அழிக்க முடியாதப் பாடல்களை அதன் கருத்துக்களோடு தொகுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி......நண்பரே....

    பதிலளிநீக்கு
  12. சில வேளைகளில் சில பாடல்கள் பிடித்டுப்போகும்,மனதுக்கு பிடித்த சில அருகாமையான விஷயங்கள் போல சில பாடல்களும் நம்மை நெகிழச்செய்து விடுகிறதுண்டு.சில பாடல்கள் மனதிற்கு மருந்தாகிப்போகிறதுண்டு.சில பாடல்கள் மந்திற்கு தைரியம் ஊட்டுவதுண்டு.அந்த வகையில் தாங்கள் தொகுத்திருக்கும் பாடல்கள் மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. தத்துவ வரிகள் ,சிறப்பான தொகுப்பு ,வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  14. அருமையான பாடல்களின் தொகுப்பு. மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. மிக அருமையான பாடல்களின் தொகுப்பு. உங்களின் கருத்துக்களும் சிந்திக்க வைத்தது! ஒன்று கவனித்தீர்களா? எல்லாமே ஓரளவுக்கு பழைய பாடல்களாகத்தான் உள்ளது. புதிய படப்பாடல்கள் வெறும் கேலிக்கூத்தாக மாறிவருகின்றனவோ? பயனுள்ள பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  16. அருமையான பாடல்களை தெரிவு செய்து பகிர்ந்தமைக்கு நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  17. அருமையான பாடல்கள்தான் சில பாடல்கள் கேட்டுள்ளேன்

    இப்போது எங்கு தேடியாவது கேட்டு விடுகிறேனே அங்கிள்........

    பதிலளிநீக்கு
  18. ஆட்டோகிராப் பாடலான ஒவ்வொரு பூக்களுமே உண்மையிலேயே அருமையான பாடல். எனக்கும் பிடித்த பாடல். வாழ்க்கையே போர்க்களம்தான்.

    பதிலளிநீக்கு
  19. இந்த முறையும் நல்லாத்தான் இருக்கு பாஸ். சில சமயம் எனக்கும் இணைய இணைப்பு தொல்லை கொடுப்பதுண்டு. இது நல்ல தீர்வுதான்.

    பதிலளிநீக்கு
  20. நல்ல கருத்து செறிவுப்பாடல்கள்§ வாழ்த்துக்கள்§

    பதிலளிநீக்கு
  21. நல்லதொரு இரசனை...வாழ்த்துக்கள் சொந்தமே

    பதிலளிநீக்கு
  22. அருமையான பாடற் தொகுப்பு சகோதரா. காலத்தாலும் மறக்காத பாடல்கள். நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  23. சில நல்ல பாடல்களின் படப பெயர் தெரியாது. அவற்றை இன்று தெரிந்து கொண்டேன். தேர்ந்தெடுத்த பாடல் வரிகளும் தங்கள் கருத்தும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  24. இத்துணை காலையில் இத்தனை அழகான பதிவைப் படிப்தற்கு உற்சாகமாய் உள்ளது...

    சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று கோட்டை விட்டார் இது எனக்கு மிகவும் பிடித்த உற்சாகமூட்டும் வரிகள்

    நீலக் நிற வரிகளை விட சிவப்பு நிற வரிகள் அதிகமாய் ரசிக்கும் படி உள்ளது

    பதிலளிநீக்கு
  25. மனதை மயக்கும் பாடல் வரிகள் அருமையான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  26. நல்ல தொகுப்பு தனபாலன், அந்தக்கால பாடல்களின் கவிதை வரிகள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

    பிரிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. அருமையான பாடல்களின் தொகுப்பு

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  28. திண்டுக்கல் தன்பாலன் அன்பரே! பாடல் மற்றும் வரிகளின் தேர்வு மிக நன்றாக இருக்கிறது. சில வரிகள் நல்ல அறிவுரையாக தோன்றுகிறது. தங்களின் இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.....

    "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எது வந்தாலும், வாடி நின்றால் ஓடுவதில்லை. வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால்... இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்..."

    நல்ல தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வரிகள்!

    சிறப்புற வாழ்த்துக்கள்! அன்பரே!

    பதிலளிநீக்கு
  29. கருப்பு..நீளம்..சிவப்பு...மூன்றுமே அழகு...-:)

    பதிலளிநீக்கு
  30. கருப்பு..நீலம்... சிவப்பு...மூன்றுமே அழகு...-:)

    பதிலளிநீக்கு
  31. எண்ணங்களையும் சிந்தனையையும் மேம்படுத்தும் பாடல்களைத் தொகுத்திருக்கிறீர்கள்..

    இசையின் பொருளும் நோக்கமும் என்ன என்று சிந்தனை செய்த பின்பே இசைக் கோர்வைகள் முதலில் வகுக்குப் பட்டன.

    இதனால்தான் மனதையும் சிந்தனையையும் ஒருமுகப் படுத்தவே அல்லது அமைதியைத் தரவோ வேண்டிய இசைக் கோர்வைகள் மட்டுமே பரவலாக இசைக்கப் பட்டன.

    அதீத துக்கம் அதீத கோபம் போன்றவை இசைக் கோர்வைகள் வழி சொல்லப்பட்டதை விட இயல்பு மொழியில் ஒப்பாரிப் பாடல்கள் போலப் பாடப்பட்டன.அவற்றிற்கு இசைக் கோர்வைகள் இல்லாதிருப்பினும் அவையும் ஒரு லயத்திற்குள் அடங்கின.

    இன்றைய துடிக்கும் இசை மனதை அமைதிப்படுத்துவதை விட சலனப்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்துகிறது..நிறையப் பேர்களுக்கு அதுதான் பிடிக்கிறது. :))

    நல்ல பாடல்களின் தொகுப்பு.

    கடைசிப் பாடலின் கர்த்தாவான பாரதியைப் பற்றியும் சிறிது சொல்லியிருக்கலாம். :))

    பதிலளிநீக்கு
  32. அருமையான தொகுப்பு.வாழ்த்துக்கள்... நன்றி.

    பதிலளிநீக்கு
  33. தொகுப்புக்கு நன்றி பாஸ்...........

    பதிலளிநீக்கு
  34. எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்களின் தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  35. இன்றையத் தேவைக்கு நல்ல தலைப்பில் எண்ணத்தை மேம்படுத்துதல் என்ற இப்பதிவு பலரது எண்ணத்தை நல்லவையாக மாற்றியிருக்கும் என நம்புகின்றேன்.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. பாராட்டுக்கள்,

    உங்கள் அன்பான வேண்டுகோள் என்னை தூண்டியது அதனால் நன்மை விளைந்தது ,இப்பொழுது தளம் திறக்க நேரம் ஆகாது. வந்து பார்த்து கருத்து கொடுங்கள்
    நன்றி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் நண்பரே...அருமையான தொகுப்பு.ஆட்டோகிராப் பாடலையும் குறிப்பிட்டது அருமை.அதில் எனக்கு பிடித்தமான வரி
    "மனிதா! உன் மனதைக் கீறி
    விதை போடு மரமாகும்
    அவமானம் படு தோல்வி
    எல்லாமே உரமாகும்!"

    எனக்கு அவமானம் தோல்வி ஏற்படும்போது ஆறுதல் தரும் வரிகள்..

    பதிலளிநீக்கு
  38. மனதில் உறுதி வேண்டும்...இந்தப் பாடல் வரிகள்தான் என் பிளாக் டைட்டில்....இதுவும் எனக்கு பிடித்த வரிகள்..நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  39. அனைத்துமே சிறந்த பாடல் வரிகள், நல்ல அருமையான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  40. அனைத்தும் மிக சிறந்த பாடல்கள். அருமையான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  41. அருமையான பாடல்வரிகள் சகோ நல்ல பகிர்வு எண்ணங்களை மேம்படுத்த............

    பதிலளிநீக்கு
  42. அருமையான பாடல்கள்....கண்டிப்பாய் இது எண்ணங்களை மேம்படுத்துவது தான்...இரண்டாவது,பதினாறாவது இரண்டும் ஆட்டோகிராப் சொல்லி உள்ளீர்கள்...தமிழ்மணம்13...

    பதிலளிநீக்கு
  43. இக்கால இளைஞர்கள் அவசியம் கேட்க வேண்டிய காலத்தால் அழியா பல தத்து கருத்துகளை உள்ளடக்கிய பாடல்களை ரிவைண்ட் செய்துள்ளீர்கள். அதற்கு தங்களின் ஓரிரு வரி பாடல்களே பதிலாக அருமை.

    பதிலளிநீக்கு
  44. அருமை அருமை..பொறுமையாக வாசிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  45. ஆகா.. அருமையான தொகுப்பு!!

    உங்கள் தொகுப்பு என்னை வியக்க வைக்கிறது!!

    பதிலளிநீக்கு
  46. எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
  47. நல்ல பாடல்கள் தொகுத்தீர்கள்...
    நல்ல எண்ணங்கள் வெளிப்பட...
    நல்ல எண்ணங்களை வெளிப்படுத்தும்
    நல்ல பாடல்கள் இவை தான்!

    பதிலளிநீக்கு
  48. அறிவன் கருத்து அற்புதம்.

    பழைய பல பதிவுகளை இன்று படித்தேன்.

    பதிலளிநீக்கு
  49. நன்று.பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    பதிலளிநீக்கு
  50. அருமையாகச் சிந்தித்திருக்கிறீர்கள் பொருத்தமான பாடல்களைத் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள் நன்றி .

    பதிலளிநீக்கு
  51. அன்பின் தன பாலன் - வலைச்சரம் மூலமாக வந்தேன் - அருமையான சிந்தனையில் தோன்றிய பதிவு - அருமை அருமை - ஊதா நிறப் பாடல்களூம் அதற்குச் சற்றே மாற்றுக் குறையாத சிவப்புக் கருத்துகளூம் அருமை - பாடல்கள் காதிலே ஒலித்துக் கொண்டே இருக்கின்றன - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  52. பாடற்தொகுப்பு வெகு அருமை தனபாலன். உங்கள் கருத்துகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  53. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com


    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    பதிலளிநீக்கு
  54. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  55. அருமையான பாடல் தொகுப்பு...
    வாழ்த்துக்கள் அண்ணா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.