🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



வலைப்பதிவருக்கான புலனங்கள் (WhatsApp)

வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே... திரு.முத்துநிலவன் அய்யா அவர்களும், திரு.மீரா செல்வகுமார் அவர்களும் நன்றி... "தமிழ் வலைப்பதிவகம்" (தொடங்கியது : 25/12/2016) மற்றும் "முயற்சி + பயிற்சி = வெற்றி" (தொடங்கியது : 11/10/2019) எனும் இரண்டு குழுமத்தை, வலைப்பதிவருக்கான புலனங்களை (WhatsApp) ஆரம்பித்து உள்ளோம்... அதைப்பற்றிய சில விளக்கங்கள் :-

இணையத் தமிழ்ப்பயிற்சி - புதுக்கோட்டை - 18/12/2016

இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 18.10.2019

இரு குழுமத்திலும் பொதுவான சில கட்டுப்பாடுகள் / கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியவை

(1) காலை / மாலை / இரவு வணக்கங்கள்
(2) படங்கள் (மீம்ஸ் உட்பட)
(3) காணொளி / காணொலி
(4) அதிர்ச்சி / ஆபூர்வ / ஆன்மிக தகவல்கள்
(5) மற்றும் இணைந்திருக்கும் குழுமத்திற்குத் தேவையற்ற உரையாடல்கள்

(1) தமிழ் வலைப்பதிவகம்

(1.1) இது வலைப்பதிவருக்கான ஒரு திரட்டி...! எப்படி என்றால் :-

02) தங்கள் வலைப்பதிவின் இணைப்பு மட்டுமே கொடுக்க வேண்டும்...

03) புதிதாக இணைபவர்களும், தினமும் பதிவு எழுதுபவர்களும் (அல்லது என்னைப்போல் அவ்வப்போது), பதிவின் இணைப்பை (URL) சிறு விளக்கத்துடன் கொடுப்பதோடு, அதன் கீழ் உங்கள் பெயர் மற்றும் ஊர் விவரங்களைக் கொடுத்தால், அவரவர் அலைபேசியில் தங்களின் கைப்பேசி எண்ணைப் பதிவு செய்து கொள்ள வசதியாக இருக்கும்... நட்பிற்கு எல்லை ஏது...? நன்றி... இணைப்பைப் பற்றி :-

[Example : https://dindiguldhanabalan.blogspot.com → இது தவறு
https://dindiguldhanabalan.blogspot.com/2016/12/Bloggers-WhatsApp-Thiratti.html ← இது சரி

04) உங்கள் தளம் அல்லாமல், உங்களின் விருப்பமான நண்பரின் சமீபத்திய பதிவின் இணைப்பையும் இணைக்கலாம்...

05) நாம் செய்ய வேண்டியது, புதியவர்களின் தளத்திற்குச் சென்று Followers-ஆக இணைந்து தொடர்வது, அவர்களுக்கு ஒரு ஊக்கம்... நம் கருத்துரை மேலும் அவர்களுக்குத் தரும் மிகப் பெரிய ஊக்கம்...! நன்றி...

(2) முயற்சி + பயிற்சி = வெற்றி

2.1.) முழுக்க முழுக்க கணினி சம்பந்தப்பட்ட சந்தேகங்களை / பிரச்சனைகளை, (Blogspot, Website, WhatsApp, YouTube, Instagram, Wikipedia, etc.,) இங்குக் கேட்கலாம்...

2.2.) உங்களின் கேள்விகளுக்குத் தகுந்த பதிலளிக்கப் பல வல்லுநர்கள் இந்த குழுமத்தில் உள்ளார்கள்...

2.3.) உங்களால் முடியாத மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில், அந்தந்த வல்லுநருக்குத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளவும்...

2.4.) உங்களின் சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளை எவ்வாறு முடித்தீர்கள் என்பதை, இங்கு அல்லது உங்களின் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டால், இந்தக் குழுமத்தில் உள்ள அனைவரும் பயன்பெறுவார்கள்...

2.5.) அதே போல், நீங்கள் அறிந்து தெரிந்து புரிந்த, பல கணினி நுட்பங்களையும் இங்குத் தாராளமாகத் தெரிவிக்கலாம்...

இணைந்து கொள்ள → dindiguldhanabalan@yahoo.com ← மின்னஞ்சல் அனுப்பவும்...

நம் கணினியிலேயே புலனத்தை (WhatsApp)-யை கொண்டு வந்து விட்டால்...? கண்ணிற்கும் விரலுக்கும் பாதிப்பு குறைவு தானே...? (!) இது பல பேருக்கும் தெரிந்தது தான்... என்றாலும் புதியவர்களுக்காக... விளக்கமாக நம்ம மதுரை வல்லுநர் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் ஒரு பதிவு எழுதி உள்ளார்... இணைப்பு இதோ :
WhatsApp-ஐ கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம் இனி...

"முகநூல் புலனம் - இதெல்லாம் அதிகம் பார்ப்பதில்லை...! வலைப்பக்கத்திற்கான திரட்டி வேண்டும்..." என்று சொல்பவருக்கு, எனது முந்தைய பதிவான நமக்கான திரட்டி எது...? (வாசிக்காதவர்கள் செல்லலாம்) அதற்கு முன் இந்த பதிவைப் பற்றி...

தங்களின் கருத்து என்ன...?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ஓயாமல் தொண்டாற்றும் இனிய நண்பரே! எனது அலைபேசி என் திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. இப்போது நியு ஜெர்சியில் இருக்கிறேன். ஓராண்டாக வலைத்தளத்தில் எழுதாமல் இருந்தேன். இனி புத்தாண்டு தினமான ஜனவரி 1 முதல் எனது 'செல்லப்பா தமிழ் டயரி' மீண்டும் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். - இராய செல்லப்பா.

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி. ஆனால் எத்தனை பேர் நாம் தரும் இணைப்பைத் தொட்டு நம் பக்கம் வருகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்!!!

    பதிலளிநீக்கு
  3. தமிழ்மணம் திரட்டியை பார்க்காத/பார்க்கமுடியாத வர்கள் நாளும் தங்கள் கைப்பேசியில் புதிய பதிவு பற்றிய அறிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு முயற்சி. குழுவிற்கான கட்டுப்பாடுகளை அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் நல்லது. என்னையும் இணைத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. ஆஹா..அருமை டி டி...
    இந்த குழு மேலும் வளரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது

    பதிலளிநீக்கு
  6. உங்களின் உழைப்பிற்கும்,ஆர்வத்திற்கும், பணியாற்றலுக்கும் ஈடு நீங்கள் மட்டுமே. ஓர் அருமையான முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள், குழுவாக. பாராட்டுகள். உங்கள் தளத்திற்கு இந்த பதிவைப் படிக்கும் முன்பாக என் இரு வலைப்பூ பதிவுகளை இணைத்துவிட்டேன். தங்கள் முயற்சி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வலைத்தள தேனீ அவர்களே!! உழைத்து உழைத்து தெவிட்டாத தேனை அள்ளித் தரும் வலைச்சித்தரே!!!

    புதுக்கோட்டைச் சிங்கங்களுடன் இணைந்து அருமையான ஒரு குழு தொடங்கி பதிவர் எல்லோரையும் இணைக்க எடுக்கப்பட்டுள்ள இப்பணி மிகவும் வரவேற்கப்படும் ஒன்று!!! இக்குழு மேலும் வளர வேண்டும் என்ற வாழ்த்துகளுடன் கலக்குங்கள் டிடி மற்றும் நிர்வாகக் குழுவினரே!!!

    தயவாய் எல்லோரும் குழுவின் விதிமுறைகளை உள்வாங்கி தேவையற்ற செய்திகளைப் பகிராமல் இருக்கவும்!

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள பகிர்வு அண்ணா. இந்த முயற்சி வலைத்தள எழுத்தாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். என் வாழ்த்துகளும் நன்றியும். குழுவில் விதிகளைப் பின்பற்றி பரிமாற்றம் நடந்தால் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான முயற்சி. குழுவில் என்னையும் இணைத்து கொண்டதற்கு நன்றி. பொதுவாக வாட்சாப் செயலியை அதிகமாக நான் பார்ப்பதில்லை. இனி கணினியில் இணைத்துக்கொண்டு பார்க்க முடிவு செய்துள்ளேன். நன்றி!
    த ம 7

    பதிலளிநீக்கு
  10. ஐயா வணக்கம்.
    நல்ல முயற்சி என்னுடைய வலைப்பூவையும் வாட்சப்பில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொலைப்பேசி எண் 9443458550
    வலைப்பூ karumalai2015.blogspot.in

    பதிலளிநீக்கு
  11. நான் நினைத்துக் கொண்டே இருந்தேன் ,நீங்கள் சாதித்து விட்டீர்கள் ,வாழ்த்துகள் !
    என் பதிவையும் இணைத்து விட்டேன் !
    ஒரு வேண்டுகோள் ...வலைப் பூவில் இந்த வாட்ஸ் அப் பட்டையை இணைக்க முடியுமா ?முடிந்தால் ,அதற்கான வழிமுறையை கூறுங்கள் dd ஜி :)

    பதிலளிநீக்கு
  12. நல்ல முயற்சி வாழ்த்துகள் தோழா.+971504269537.

    பதிலளிநீக்கு
  13. மிக்க பயன் தரும் முயற்சி. நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  14. வரவேற்கிறேன்
    094 0766807075
    என்ற
    எனது இலக்கத்தை
    வாட்ஸ்அப் குழுவிற்கு
    இணைக்கப் பாவிக்கவும்.

    பதிலளிநீக்கு
  15. வளர்க! எண்ணங்கள் வளர
    பிரதிபலிக்க.
    திரளுவோம்.
    தமிழ் வளர நமது சிந்தனைகள்
    நாட்டல் நாட்டின் நலத்திற்கும்
    நாடா வளம் பெறும் நாடு முன்னேற்றவும்.

    பதிலளிநீக்கு
  16. என்னிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை. இதைப் படிக்கும்போது புரிந்தது போலும் புரியாதது போலும் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  17. நல்ல முன்னெடுப்பு. சொல்லப்பட்டிருக்கும் விதி முறைகளை நம்மவர்கள் பின்பற்றினால் நிச்சயம் வலைப்பக்கம் சார்ந்த உரையாடலுக்கான நல்ல களமாக மாற்ற முடியும். தவிர, வலைப்பக்க பதிவுகளையும் பகிர்வுக்கான தளமாக்கிக் கொள்ளவும் முடியும். இனியேனும் நண்பர்கள் கவனம் கொண்டால் நல்லது.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள் நண்பரே.கிளை பரப்பி புகழ் பரப்பட்டும்.

    பதிலளிநீக்கு
  19. நானும் மீரா.செல்வக்குமாரும் பேசித் தொடங்கினோம். அதாவது நாங்கள் கோடு போட்டோம், வலைச்சித்தரே நீங்கள் ரோடு போட்டு விட்டீர்கள். பயணிகளாகிய பதிவர்கள் பயன்படுத்தித் கொண்டால் -அதாவது காண்செவிக் குழுவில் பார்க்கும் ஒவ்வொரு பதிவரும் ஒருமுறை அந்த இணைப்பைச் சொடுக்கும் பழக்கத்தை மேற்கொண்டால்- பதிவர் பயனடைவர் என்பது உறுதி.

    பதிலளிநீக்கு
  20. நல்லதொரு முயற்சி அண்ணா...
    நானும் இணைந்து கொண்டேன்...
    வலைச்சித்தர் என்றால் சும்மாவா...
    இனி நாம் அனைவரும் இணைந்து கலக்கலாம்...
    நன்றி.

    பதிலளிநீக்கு
  21. கொங்குத்தென்றலின் வாழ்த்துக்கள்!
    மரியாதைக்குரிய ஐயா,
    வணக்கம்.தங்களது இணைய தமிழ்ப்பணிக்கு கொங்குத்தென்றல் வலைப்பதிவு சார்பாகவும்,ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாகவும்,நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.விரைவில் நானும் இணைந்துகொள்கிறேன்.என அன்பன்,பரமேஸ்வரன்,அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் சமூக ஆர்வலர்,சத்தியமங்கலம்- ஈரோடு மாவட்டம்.http://konguthendral.blogspot.com , paramesdriver@gmail.com , 9585600733

    பதிலளிநீக்கு
  22. அதை, இதை எதை காரணம் சொன்னாலும் ஒரு பதிவின் தன்மை உணர்ந்து படித்து கருத்திட்டு ஊக்கப்படுத்த வேண்டும் எனும் உணர்வுகள் அரிதாகி கேலி, அரட்டை கிண்டல் என அர்த்தமே இல்லாமல் எழுதும் பல பதிவுகளுக்கு வரும் கருத்துரைகள் காணும் போது எத்தனை விதங்களில் முயன்றாலும் மொய்க்கு மொய் எழுதுவது போல் கருத்திட்டால் மட்டும் கருத்திடும் கலாச்சாரத்திலிருந்து நாம் வெளி வராத வரை ஒரே குட்டைக்குள் தான் சுற்றிக்கொண்டிருப்போம்.

    போனிலிருந்து குருப்புக்கள் உருவாகுவதும் கருத்திடுவதும் அவசர அவசியத்தேவைகளுக்கானதாய் இருக்க வேண்டும். என்னை இந்த வாட்ச்சப் குழுமத்தில் இனைத்த பின் கவனிக்காத சில நேரங்களில் 100 கணக்கில் மெசேஜ் வந்து சேர்வதை காணும் போது எந்த லிங்கையும் கிளிக் செய்து படிக்க தோன்றவும் இல்லை.

    பதிலளிநீக்கு


  23. உங்கள் முயற்சிகள் பாராட்டத்தக்கவை எனினும் நட்பின் அடிப்படையில் நாம் இங்கே பகிர்ந்து கொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் மிஸ்யூஸ் செய்யப்படாது என்பது என்ன நிச்சயம்?

    இணைய நட்பு,வலைப்பூ நட்பூக்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகமானோராய் இல்லை தானே?

    இப்படித்தான் இங்கே சர்ச் ஒன்றில் இருக்கும் அனைத்து அங்கத்துவர்களையும் இணைத்து தகவல் பரிமாற்றம் செய்ய என ஒரு வாட்சப் குழு தொடங்கினார்கள். சர்ச்சில் நடக்கும் ஜெபக்கூட்டம், ஸ்டடிஸ் செய்திகள் என பகிர்ந்தார்கள். என்னையும் இணைத்தார்கள்.ஒரு மாதம் வரை எந்த பிரச்சனையும் இல்லை. அப்புறம் தீடிரென ஆள் மாறி ஆள் மன்னிப்பு கேட்டார்கள். யாரோஒரு போதகர் வீட்டில் அவர் பிள்ளை பார்க்கக்கூடாத, பகிரக்கூடாத எதையோ தவறுதலாக பகிர்ந்து விட்டதாம்.பார்க்க கூடாதது, பகிரக்கூடாததை அவர் வீட்டு பிள்ளை பார்க்க எப்படி அனுமதித்தார் என்பது இன்று வரை எனக்கு தெரியாது எனினும் இப்போதெல்லாம் அவசியம் எனினும் வாட்சப் குரும் தொடங்கி பகிர்ந்துக்கலாம் என நான் சொன்னால் ஐய்ய்யோ வேண்டாம் என ஓடி ஒளிகின்றார்கள்.

    என் போன் என் சொந்த பாவனைக்கானது மட்டும் இல்லை. அது கம்பெனி பாவனைக்கானது, என் வேலையாட்கள், கணவர், பிள்ளைகள் அனைவரும் பயன் படுத்துவது. போன் வந்தால் யார் இருக்கின்றார்களோ அவர்கள் போனை எடுத்து ஆன்சர் செய்ய வேண்டும் என்பது எங்கள் வழக்கம், ஆர்டர்கள் விடயமாக எப்போதும் போன் வரலாம். இவ்வகையில் நாம் அசந்திருக்கும் நேரம் வேறேதும் தகவல்கள் தவறாக பகிரப்பட்டால் சம்பந்தப்பட்ட பதிவரை தவறாக புரிந்துகொள்ளும் வாய்ப்பும் உருவாகலாம் அல்லவா?

    இதற்கு என்ன வழிமுறை வைத்திருக்கின்றீர்கள்?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமிகு நிஷா அவர்களுக்கு : இணைப்பைத் தவிர மற்றவைகளை பகிர்ந்து கொண்ட இருவருக்கு, அவர்களின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு மூன்று தடவைக்கும் மேல் எச்சரிக்கை தந்தேன்... நான் மட்டுமல்ல இந்த தளத்தின் மற்றுமொரு நிர்வாகி திரு. செல்வகுமார் ஐயா அவர்களும் எச்சரிக்கை தந்தார்... வேறு வழியேயில்லை என்று நீக்கியும் விட்டோம்... நீங்கள் சொன்னது போல் இந்த குழுமத்தில் அவ்வாறு ஏற்படாது... நல்லதையே நினைத்து ஆரம்பிக்கப்பட்ட குழுமம் இது... நல்லதே நடக்கும்...

      புதிய ஊருக்கு செல்லும் எனது வலைப்பதிவு நண்பர், அந்த ஊரில் உள்ள வலைப்பதிவர் நண்பரின் கைபேசி எண்ணை என்னிடம் கேட்பார்... அவரிடம் தொடர்பு கொண்டு பேசி விட்டு, அவரின் சம்மதத்துடன் கைபேசி எண்ணை கொடுத்திருக்கிறேன்... நட்பு விரிவடைந்துள்ளது... நன்றி...

      நீக்கு
    2. உங்கள் நிதானமான விளக்கத்துக்கு நன்றி தனபாலன் ஐயா.எனக்கும் சட்டென ஒரு புது குழு ஆரம்பித்திருப்பதாக கண்டதும், அதை ஆரம்பித்தது செல்வகுமார் அவர்கள் எனவும் என்னை இணைத்ததும் அவ்ரே எனவும் காட்டியதும் ஆஹா இன்னொரு குருப்பா? நன்றி சார் என தான் பதிலிட்டேன். என்னை இணைத்த பின் வந்த பதிவில் விதிமுறை இணைக்கப்படவில்லை.அதன் பின் நீங்கள் விதிமுறையை படிக்க சொன்னீர்கள். எங்கே விதிமுறை என கேட்டபின் காப்பி செய்து இட்டீர்கள் அதன் பின் தான் ப்ரோபைலில் விதிமுறையை இட்டீர்கள் எனினும் சட்டென ஒரு குழுவில் நம்மை இணைத்ததை பார்த்ததும், அதை இணைத்தவர் நமக்கு அறிமுகமானோர் என தெரிந்த பின் ப்ரோபைலில் போய் விதிமுறை எல்லாம் படிக்க தோன்றவில்லை. அப்படித்தானே எல்லோருக்கும் இருக்கும்.

      தொலைபேசி இலக்கங்களை நட்பின் அடிப்படையில் பரிமாறுதலை தவறென நான் சொல்லவில்லை ஐயா. அது அறிமுகமான் சிலருக்கிடையிலான தொடர்பாடலுக்குரியது தானே?

      குழு என வரும் போது அப்படி இல்லை என்பது என் புரிதல். அறிந்தோர், அறியாதோர் என அனைவரும் இருப்பர்.

      அடுத்தது வாட்சப்புக்கு என தனிப்பட்ட ஒரு இலக்கம் பொது தேவைக்கு ஒன்று, சொந்த தேவைக்கு இன்னொன்று என வைத்திருப்போருக்கு இதில் பிரச்சனை இல்லை. ஒரே இலக்கத்தினை அனைத்துக்கும் பயன் படுத்தும் போதுதான்??????

      இவ்வாய்ப்பை எல்லோரும் எப்படி பயன் படுத்துவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

      அனைவரும் சரியாக புரிந்துணர்வோடு பயன் படுத்தி பயன் பெற்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும் ஐயா.

      நீக்கு
    3. அய்யா இப்போது Google உடன் இணைந்துள்ளேன்
      காணும் பதிவுகளுக்கு தோன்றியதை பதி விடுகிறேன்

      நீக்கு
  24. நல்லதொரு முயற்சி தற்போது எழுதாவிடினும்... படிப்பதற்காக இணைந்து கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  25. நல்ல தகவல்.கூடிய முயற்சி.இப்போதே இணைகிறேன்.கொஞ்சம் தடுமாற்றந்தான்..இருப்பினும் தங்கள் ஊக்கத்தால் பதிவிடுகிறேன்.நன்றி

    பதிலளிநீக்கு
  26. நல்ல முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. எனவேதான் நானும் இந்த குழுவில் இணைந்துள்ளேன். ஆனாலும் தொழில் நுட்ப ரீதியாக இது எந்த அளவில் வெற்றி என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    தங்கள் முயற்சிகள் வியக்க வைக்கின்றன.தங்களது உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

    தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  28. அருமை . புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. அருமையான முயற்சி..
    ஸ்மார்ட் போன், சமூக தளங்களின் பாதிப்புகளால் பின் தங்கியிருக்கும் வலைப்பூக்களை அனைவருக்கும் கொண்டு செல்லும் இம்முயற்சி வெற்றி பெறட்டும்.

    பதிலளிநீக்கு
  30. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

    எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
    http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  31. நானும் இணைகிறேன் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள்.. அனைவருக்கும்ஹாப்பி நியூ இயர்..

    பதிலளிநீக்கு
  32. சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள். நானும் ஜோதியில் இணைந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  33. நல்ல முயற:சி
    வாழ்த்துகள்:.
    நன்றிகள்
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  34. உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்! வாட்சப்பில் இணைந்து விட்டேன். நம்முடைய வலைப்பூ பதிவுகளை மட்டும்தான் இதில் பகிர்ந்து கொள்ள வேண்டுமா? அதாவது நாம் ஒரு பதிவு எழுதியவுடன் அதன் URL குறிப்பிட்டால் போதுமா?

    பதிலளிநீக்கு
  35. தங்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  36. என்னுடைய தொலைபேசி +97455374692 . தயவு செய்து என்னையும் இணைத்துக்கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  37. வாழ்த்துக்கள் நல்ல முயற்சி
    https://news.ibctamil.com/

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.