கீழ்...

அனைவருக்கும் வணக்கம்... பிற மொழிகளால் மொழி பெயர்க்க முடியாத பல தமிழ்ச் சொற்களில், மக்களின் இயல்பைக் குறிப்பிடும் சொல் ஒன்று "சான்றாண்மை" மற்றொன்று "கயமை" என்பதாகும்... சான்றாண்மை என்பது உயர்ந்த தன்மையின் முடிவான எல்லையையும், கயமை என்பது இழிந்த தன்மையின் கடையான எல்லையையும் காட்டும்... இதனைத் தமிழ் மக்கள் கண்ட அளவிற்குப் பிற மக்கள் காணவில்லை என்பதோடு, தமிழ் கண்ட அளவிற்குப் பிற மொழிகளில் இல்லை என்பதால், இவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலை அவை இழந்து நிற்கின்றன... இது தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள பல தனிச் சிறப்புகளில் ஒன்று... முந்தைய கயமை பதிவில் கயவர்களை இரண்டே எழுத்தில் குறிப்பிடுகிறார் என்று முடித்திருந்தேன்... தொடர்கிறது...