tag:blogger.com,1999:blog-4325862559039854671.post7046353275018390018..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: உண்மையா...? பொய்யா...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56807371654754600982015-06-18T18:16:50.205+05:302015-06-18T18:16:50.205+05:30யார் சொல்வதை யார் தவறாக எடுத்துக் கொள்வது? ;-) தவற...யார் சொல்வதை யார் தவறாக எடுத்துக் கொள்வது? ;-) தவறு செய்தவன் நான். தாங்கள் எவ்வளவு அழகாகத் திருத்தங்கள் கூறி, இந்தத் தகவல் பற்றிய இற்றைச் செய்தியையும் கூறியிருக்கிறீர்கள்! அதற்கு நாங்கள் அல்லவோ தங்களுக்கு நன்றி கூற வேண்டும்? மிக்க நன்றி ஐயா! :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89735640298168496062015-06-08T06:59:09.227+05:302015-06-08T06:59:09.227+05:30அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015...அன்பு வலைப்பூ நண்பரே!<br />நல்வணக்கம்!<br />இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு<br />தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.<br /><br />முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்<br /><br />அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!<br />"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!<br />உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.<br />ஆம்!<br /> <br />கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.<br /><br />( http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form )<br /><br />சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.<br /><br />தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.<br /><br />மற்றும்!<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com<br /><br />TM +1yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25034260008643671792015-06-07T22:45:01.997+05:302015-06-07T22:45:01.997+05:30யாரையும் கணிப்பதென்பது வாழ்க்கையில் மிகவும் கடினம்...யாரையும் கணிப்பதென்பது வாழ்க்கையில் மிகவும் கடினம். நல்லவர் என்று நினைப்பவர் துரோகங்கள் செய்வதும் கெட்டவர் என்று நினைப்பவர் நாம் எதிர்பாராத சமயத்தில் உதவுவதும் வாழ்க்கையில் சர்வ சாதார்ணமாக நடக்கிற விஷயம். நீங்களே குறிப்பிட்டிருக்கிற பாடலின் படி ' பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே ' என்பது தான் சரி!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-78048420809616344262015-06-07T22:33:24.082+05:302015-06-07T22:33:24.082+05:30உள்ளம் என்பது ஆமை அதில் தூய்மையும் உண்டு தாய்மையும...உள்ளம் என்பது ஆமை அதில் தூய்மையும் உண்டு தாய்மையும் உண்டு தடியால் அடித்து கனியவைத்து தன்னை தாழ்மை செய்கிறது.. அருமையான பதிவு...Paavalar Valvai Suyenhttps://www.blogger.com/profile/02253137465260985153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37622646077256236542015-06-07T12:27:04.018+05:302015-06-07T12:27:04.018+05:30ஐயா வணக்கம்.
இது உங்களின் தளமாக இருப்பதனாலும்,மதி...ஐயா வணக்கம்.<br /><br />இது உங்களின் தளமாக இருப்பதனாலும்,மதிப்பிற்குரிய ஞானப்பிரகாசன் ஐயாவை நான் நன்கு அறிந்திருப்பதாலும் அவரது பின்னூட்டம் சார்ந்து நான் அறிந்த சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.<br /><br />“ தக்கார் தகவிலார் என்ப தவரவர்<br />எச்சத்தாற் காணப் படும் “<br /><br />என்பதைத் திருத்தியவர் W H SCOTT என்னும் ஆங்கிலேயர்.<br /><br />இவர் தம் பெயரை சுகாதியர் எனத் தமிழ் வடிவில் மாற்றிக் கொண்டவர்.<br /><br />இந்தப் பாடலுக்கு அவர் செய்த திருத்தம்,<br /><br />தக்கார் தகவிலா ரென்ப தவரவர்<br />மக்களாற் காணப் படும்<br /><br />என்று இருந்ததாகவே ஞானப்பிரகாசன் ஐயாவைப் போல நானும் நினைத்திருந்தேன். அப்படியே என் பின்னூட்டத்தில் எங்கோ பதிந்தும் இருக்கிறேன்.<br /><br />அந்தப் பிரதிகள் அனைத்தையும் பாண்டித்துரை தேவர் அவர்கள் விலைக்கு வாங்கி எரித்துவிட்டதால் இது பற்றிய உண்மை அறியப்படாமல் போயிற்று.<br /><br />சமீபத்தில் தமிழாய்வாளர் பொ. வேல்சாமி அவர்கள், அதன் எஞ்சிய பிரதியொன்றின் ஒளிநகலை வெளியிட்டார்.<br />அதில்,<br /><br />தக்கார் தகவிலா ரென்ப தவரவர்<br /><br />பக்கத்தாற் காணப் படும் <br /> <br />என்றே இருக்கிறது. எனவே பக்கத்தால் என்றே ஸ்காட் மாற்றியுள்ளார். மக்களால் அன்று என்பது துலங்கிற்று.<br /><br />அடுத்து,<br /><br />அவர் தன் திருத்தப் பிரதியைக் கல்விக் கூடங்களுக்குப் பாடமாக வைக்க விரும்புகிறார்.<br /><br />அவரது திருத்தத்தையும் வானளாவப் புகழ்ந்த தமிழறிஞர் கூட்டமொன்று, நீங்கள் போய்த் தியாகராஜ செட்டியாரைப் பார்த்து ஒரு மதிப்புரை வாங்கி வாருங்கள்.<br /><br />அப்படி அவர் கொடுத்தாரென்றால், அதைக் கொண்டு எளிதில் கல்வி நிறுவனங்களுக்குப் பாடமாக வைத்துவிடலாம் என்று கூறுகின்றது.<br /><br />தியாக ராஜ செட்டியார் திருச்சியில் வசிக்கிறார்.<br /><br />ஸ்காட், வண்டி கட்டிக் கொண்டு தியாகராஜ செட்டியாரைப் பார்க்க வருகிறார்.<br /><br />மிகுந்த ஆடம்பரத்துடன், அவரிடம் தான் திருக்குறளில் செய்த திருத்தங்களைக் கூறத் தொடங்குகிறார்.<br /><br />இந்தக் குறளுக்குச் செய்த மாற்றத்தைக் கூறத் தொடங்கியதுமே வெகுண்டெழுந்த தியாகராஜ செட்டியார் எச்சம் என்ற சொல்லின் பொருளாழம் அவர் திருத்தத்தில் இல்லாமையை விளக்கி “நீர் வள்ளுவரை விடப் பெரிய அறிவாளியோ..? இதுபோன்று உம் மனம் போன போக்கில் எதும் செய்யாமல் இருப்பதே நீர் தமிழுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவை! போம் ஐயா வெளியே என்று சொல்லித் துரத்தி விடுகிறார்.<br /><br />ஸ்காட்டின் பெயரைச் சொல்லாமல் தியாகராஜ செட்டியாரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வை உ.வே.சா. பதிவு செய்து வைத்திருக்கிறார்.<br /><br />அவர் ஸ்காட்தான் என்பது இது போன்ற திருத்தத்தைச் செய்த ஒரே ஆங்கிலேயர் அவர்தான் என்பதாலும் , தியாகராஜ செடடியாரின் காலத்தவர் என்பதாலும் பாண்டித் துரைத் தேவர் வாங்கி அழித்த பிரதிகள் இவருடையன என்பதாலும் தெரியவந்தது.<br /><br />(மதிப்பிற்குரிய ஞானப்பிரகாசன் ஐயா அவர்கள் நினைவில் இருந்து கூறுவதைச் சற்று மாற்றிக் காண வேண்டும். தெ.பொ. மீ அவர்களின் ஆசிரியர் தியாகராஜ செட்டியார் அல்லர்.<br />உ.வே.சா வின் ஆசிரியராக இருந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவர் இவர். பெயர் பொருத்தம் இக்குழப்பத்திற்குக் காரணமாய் இருக்கலாம்.)<br /><br />முதல் குறளிலேயே ஸ்காட் தன் கைவரிசையைக் காட்டி விட்டார் என்பதுதான் இதன் உச்சகட்டம்.<br /><br />அவர் குறள் இப்படித் தொடங்குகிறது.<br /><br />அகர முதல எழுத்தெல்லாம் ஆதி<br />னகர முதற்றே உலகு :))<br /><br />இருவரும் என் பின்னூட்டங்களைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதால் இந்த அதிகப்படி உரிமை<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-81989294779673797352015-06-07T07:31:46.195+05:302015-06-07T07:31:46.195+05:30மாறிவிட்டர்கள்...
பிழையாகிவிட்டதே...
மாறிவிட்டர்கள்... <br />பிழையாகிவிட்டதே... <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51504670128930094202015-06-07T06:49:12.349+05:302015-06-07T06:49:12.349+05:30திரு. இ.பு. ஞானப்பிரகாசன் ஐயா அவர்களுக்கு : விளக்க...திரு. இ.பு. ஞானப்பிரகாசன் ஐயா அவர்களுக்கு : விளக்கங்களுக்கும் திருத்தங்களுக்கும் மிக்க நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69354437329016882482015-06-06T11:18:45.590+05:302015-06-06T11:18:45.590+05:30இந்த உண்மை அறியாமல்தானே வாழ்க்கையில் பல அவசரமுடிவு...இந்த உண்மை அறியாமல்தானே வாழ்க்கையில் பல அவசரமுடிவுகளை எடுத்துவிட்டு பிறகு வருந்துகிறோம்... மிக அவசியமான பதிவு. நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16669020011685466852015-06-05T16:54:21.789+05:302015-06-05T16:54:21.789+05:30திருத்தம் இரண்டு.
'விடற்கடை' என ஒரு சொல்ல...திருத்தம் இரண்டு.<br /><br />'விடற்கடை' என ஒரு சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அது 'விரற்கடை' என்பதே சரி. கை விரல்கள் குட்டிக் குட்டி மூட்டுகளால் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன அல்லவா? அப்படி விரலின் கடைசிப் பகுதியில் அமைந்துள்ள பிரிவைத்தான் 'விரற்கடை' என்கிறோம். விரல் + கடை = விரற்கடை.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32527841939510089522015-06-05T16:35:44.271+05:302015-06-05T16:35:44.271+05:30தூங்கும் மனிதனைப் பார்த்து ஒவ்வொருவரும் அவரவர் குண...தூங்கும் மனிதனைப் பார்த்து ஒவ்வொருவரும் அவரவர் குணத்துக்கு ஏற்ப நினைத்துக் கொண்டு போகும் அந்தக் கதை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் என் தாத்தா கூறியதாக நினைவு. சுவையான சிந்திக்கத் தூண்டும் அந்தக் கதையை இத்தனை காலம் கழித்து மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி!<br /><br />ஆனால், இரு சிறு திருத்தங்கள் கூற விழைகிறேன் ஐயா!<br /><br />"தக்கார் தகவிலர் என்பது அவரவர்<br />எச்சத்தாற் காணப் படும்" என்கிற குறளில் 'எச்சம்' என்பது அவர்களின் பிள்ளைகளைக் குறிப்பதாகக் கூறியிருந்தீர்கள். நீங்கள் மட்டுமில்லை, பலரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், ஒருவர் இறந்த பிறகும் அவர் பெயரும் நினைவும் இந்த உலகில் எச்சமாக நீடித்திருக்கின்றன அல்லவா? அவற்றின் தன்மையைத்தான் 'எச்சம்' எனும் சொல்லால் குறிக்கிறார் வள்ளுவர். அதாவது, ஒருவர் இறந்த பிறகு அவரைப் பற்றி நமக்கு நல்ல நினைவுகள் எஞ்சியிருக்கின்றனவா கெட்ட நினைவுகள் மிஞ்சியிருக்கின்றனவா என்பதைப் பொறுத்தே அவர் நல்லவரா கெட்டவரா, தகுதியானரவா தகுதியற்றவரா என்பனவற்றைத் தீர்மானிக்க முடியும் என்பதுதான் அதன் பொருள். இதற்குச் சான்றாக ஒரு கதையே உண்டு.<br /><br />வரலாற்றில் பெரும் புகழ் பெற்ற தமிழ் அறிஞர் ஒருவர். (அவர் பெயர் எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை. ஆனால், தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் ஆசிரியர் என்பதாய் நினைவு). அவரிடம் தமிழ் கற்க வந்தாராம் ஆங்கிலேயர் ஒருவர். தமிழறிஞரும் மிகவும் சிரத்தையுடனும் ஆர்வத்துடனும் அவருக்குத் தமிழ் கற்பிக்க, தமிழில் எழுதப் படிக்கக் கூடத் தெரியாமல் வந்தவர் ஒரு கட்டத்தில் திருக்குறள் போன்ற பழந்தமிழ் நூல்களையே ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டார்!<br /><br />ஒருமுறை அவர் என்ன செய்தாராம் தெரியுமா? திருக்குறளில் சில குறட்பாக்களில் இயைபு தவறாக இருப்பதாகக் கருதித் திருத்த முற்பட்டாராம். அதில் மேற்படி குறளும் ஒன்று.<br /><br />"தக்கார் தகவிலர் என்பது அவரவர்<br />எச்சத்தாற் காணப் படும்" என்பதை 'மக்களாற் காணப் படும்' எனத் திருத்தினால் எதுகை சரியாக அமைகிறதே என்றெண்ணி, அது போலவே திருத்தித் தன் ஆசிரியரான மேற்படி தமிழறிஞரின் பார்வைக்குக் கொண்டு சென்றாராம். அதைப் பார்த்துத் தமிழறிஞருக்கு வந்ததே சீற்றம்!<br /><br />"ஆனானப்பட்ட திருவள்ளுவருக்கு எதுகை - மோனை தெரியாதா? 'எச்சம்' என்பதை 'மக்கள்' என இவன் தவறாகப் புரிந்து கொண்டு வள்ளுவர் தவறு செய்து விட்டார் என்று கருதுவதா? திருக்குறளில் கை வைத்த அந்த அதிகப்பிரசங்கியின் முகத்தில் கூட நான் இனி விழிக்க விரும்பவில்லை" என்று கூறி விட்டாராம் அறிஞர்.<br /><br />ஆக, இங்கு எச்சம் என்பதற்கு மக்கள் என்பது பொருள் இல்லை என்பது இதன் மூலம் நமக்குத் தெளிவாகிறது.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18374828010841661592015-06-05T00:37:40.369+05:302015-06-05T00:37:40.369+05:30அப்பழுக்கற்ற மனித நேயத்துடன் நோக்கினால் எல்லாமே கா...அப்பழுக்கற்ற மனித நேயத்துடன் நோக்கினால் எல்லாமே காட்சி பிழைகளும் பார்வை மயஙக்கங்களும்தான் என்பது புரியும் ! ... எங்கும் நிறைந்திருக்கும் ஆன்மா ஒன்றுதான் !<br />அருமையான பதிவு வலைசித்தர் அவர்களே...<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16939188083448064262015-06-04T19:13:46.599+05:302015-06-04T19:13:46.599+05:30கதையோடு கூடிய அருமையான பதிவு.கதையோடு கூடிய அருமையான பதிவு.Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17724675238996787732015-06-04T10:03:54.745+05:302015-06-04T10:03:54.745+05:30ஜோதிஜி திருப்பூர் சொன்ன கருத்துக்களையே நானும் வழிம...ஜோதிஜி திருப்பூர் சொன்ன கருத்துக்களையே நானும் வழிமொழிகிறேன்..<br />நன்றி..indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52739306289128183642015-06-04T08:09:51.937+05:302015-06-04T08:09:51.937+05:30காட்சி ஒன்று கருத்துகள் பலவிதம் .அருமை வழக்கம்போல்...காட்சி ஒன்று கருத்துகள் பலவிதம் .அருமை வழக்கம்போல் டிடி முத்திரைடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87644374011420302752015-06-04T07:34:57.604+05:302015-06-04T07:34:57.604+05:30எதையும் சொல்பவர்கள் சொன்னால் கேட்க சுவை கூட. பதிவு...எதையும் சொல்பவர்கள் சொன்னால் கேட்க சுவை கூட. பதிவுகளைத் தொகுத்து புத்தகம் ஆக்கி விடலாமே சகோ... இன்னும் பலருக்கும் பயனாகும்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68414070731190651982015-06-04T04:34:51.333+05:302015-06-04T04:34:51.333+05:30பார்வைகள் பல விதம் நீதிக்கதை அருமை!பார்வைகள் பல விதம் நீதிக்கதை அருமை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25834003947526408292015-06-04T00:01:09.166+05:302015-06-04T00:01:09.166+05:30அருமையான தத்துவம்! எதுவுமே நமது கண்ணோட்டத்தில், ப...அருமையான தத்துவம்! எதுவுமே நமது கண்ணோட்டத்தில், பார்வையில், சிந்தனையில்தான் உள்ளது! அருமை டிடி குட்டிக்கதையுடன்....ரசித்தோம் எப்போதும் போல்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87688897993905223702015-06-03T22:22:07.088+05:302015-06-03T22:22:07.088+05:30TRUE FALSE - கான்சப்ட் படம் சூப்பர். வழக்கம்போல் க...TRUE FALSE - கான்சப்ட் படம் சூப்பர். வழக்கம்போல் கதையும், கருத்தும் அருமை...தரமான பதிவுகள் வரிசையில் சேர்க்கலாம் !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-54220271187019592712015-06-03T18:00:22.634+05:302015-06-03T18:00:22.634+05:30அருமை நண்பரே வாழ்வியல் தத்தவம்.
மிகவும் பொருத்தமா...அருமை நண்பரே வாழ்வியல் தத்தவம்.<br /> மிகவும் பொருத்தமான நீதிக்கதைகள்.<br />அழகான பாடல்களும், குறளும்.<br />எல்லோரும் எல்லோருடைய பார்வையிலும் நல்லவர் ஆகி விட முடியாது 80 உண்மையே....<br /><br />வேலூர் விழா சிறக்க வாழ்த்துகள்.<br />தமிழ் மணம் 91<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35023270250245433262015-06-03T17:31:43.069+05:302015-06-03T17:31:43.069+05:30கதையும், கருத்தும், படமும், பாடலும் அருமை...அருமை....கதையும், கருத்தும், படமும், பாடலும் அருமை...அருமை..<br /><br />உண்மையாலுமே அருமையான பதிவு..<br /><br />God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61747876710302496692015-06-03T16:20:47.318+05:302015-06-03T16:20:47.318+05:30குறளின் குரல் அருமை !குறளின் குரல் அருமை !ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57656583254792216932015-06-03T15:31:47.643+05:302015-06-03T15:31:47.643+05:30நாம் காணும் கண்களைப் பொறுத்து பார்வையும். உண்மை. ந...நாம் காணும் கண்களைப் பொறுத்து பார்வையும். உண்மை. நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு. கதையும் அருமை. அந்த படம் சூப்பர்.நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-172907624285228522015-06-03T14:13:57.449+05:302015-06-03T14:13:57.449+05:30துரியோதனன் உலகில் அனைவரும் தீயவர் என்றான்;தருமன் அ...துரியோதனன் உலகில் அனைவரும் தீயவர் என்றான்;தருமன் அனைவரும் நல்லவர் என்றான்<br />வேறென்ன?<br />அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18787546853230159212015-06-03T13:42:58.084+05:302015-06-03T13:42:58.084+05:30வணக்கம்
அண்ணா.
நல்ல கருத்தை சொல்லி அருமையான நீதி...வணக்கம்<br />அண்ணா.<br /><br /> நல்ல கருத்தை சொல்லி அருமையான நீதிகதை சொல்லி எல்லோரையும் கட்டி போட்டீர்கள் அண்ணா.... பகிர்வுக்கு நன்றி த.ம 15<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87772226972467693532015-06-03T12:55:02.035+05:302015-06-03T12:55:02.035+05:30என் சிந்தனையை தூண்டி விட்டீர்! கடந்த காலத்தில் ந...என் சிந்தனையை தூண்டி விட்டீர்! கடந்த காலத்தில் நான் பழகிய மனிதர்களை எண்ணிப் பார்க்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com