மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ...? வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ...? இவள் ஆவாரம் பூ தானோ...? நடை தேர் தானோ...? சலங்கைகள் தரும் இசைத் தேன் தானோ... ? மின்னல் ஒளியெனக் கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ...? 2 ) அங்கம் ஒரு தங்கக் குடம் அழகினில்... மங்கை ஒரு கங்கை நதி உலகினில்... துள்ளும் இதழ் தேன் தான்... அள்ளும் கரம் நான் தான்... மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள்... சுகமே... வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்... கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே... ⟪ © கிழக்கே போகும் ரயில் ✍ முத்துலிங்கம் ♫ இளையராஜா ☊ P,ஜெயச்சந்திரன் @ 1978 ⟫