🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கண்டுபிடிங்க பார்க்கலாம்...!

வணக்கம்... எதிர்பார்த்ததை விட முந்தைய வலைப்பதிவருக்கான வாட்ஸ்-அப் திரட்டி...! பதிவில் தமிழ் வலைப்பதிவகம் குழுவில் அனைத்து நாடுகளிலிருந்தும் இணைந்த வலையுலக உறவுகளுக்கும் நன்றிகள்... இனி அதன் வளர்ச்சி நம் கைகளில்→வலைப்பதிவின் இணைப்பு மட்டுமே... இனி இனிமையான பாடல்களை மனதில் பாடுவோமா...?


I am awaiting your reply...!

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே... நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே... நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந்தாள்... நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. (படம் : மாலையிட்ட மங்கை / பாடல் வரிகள் : கவிஞர் கண்ணதாசன் / பாடியவர் : T.R. மஹாலிங்கம் / இசை : M.S. விஸ்வநாதன், T.K. ராமமூர்த்தி)
கண்ணாலே பேசி பேசி்க் கொல்லாதே... காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே... காதல் தெய்வீக ராணி...! போதை உண்டாகுதே-நீ... கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே... (படம் : அடுத்த வீட்டுப் பெண் / பாடல் வரிகள் : T.N.ராமய்யா தாஸ் / பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ் / இசை : ஆதிநாராயண ராவ்)
ஒரு பொன் மானை நான் காண தக திமி தோம்... ஒரு அம்மானை நான் பாட தக திமி தோம்... சலங்கை இட்டாள் ஒரு மாது, சங்கீதம் நீ பாடு2 அவள் விழிகளில் ஒரு பழரசம்... அதைக் காண்பதில் எந்தன் பரவசம்...! (படம் : மைதிலி என்னைக் காதலி / பாடல் வரிகள் & : இசை : டி.ராஜேந்தர் / பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்)
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் - நிலவில் குளிரில்லை... அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் - மலரில் ஒளியில்லை... அவள் இல்லாமல் நான் இல்லை... நான் இல்லாமல் அவள் இல்லை... (படம் : தெய்வத்தாய் / பாடல் வரிகள் : கவிஞர் வாலி / பாடியவர் : T.M.சௌந்திரராஜன் / இசை : M.S. விஸ்வநாதன்)
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே... போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே... தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே... (படம்: பூவா...? தலையா...? / பாடல் வரிகள் : கவிஞர் வாலி / பாடியவர் : T.M.சௌந்திரராஜன் / இசை : M.S. விஸ்வநாதன்)
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ...? நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ...? மாதுளையின் பூபோலே மலருகின்ற இதழோ...? மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ...? (படம் : உலகம் சுற்றும் வாலிபன் / பாடல் வரிகள் : கவிஞர் வாலி / பாடியவர் : T.M.சௌந்திரராஜன் / இசை : M.S. விஸ்வநாதன்)
ஆழியிலே பிறவாத அலைமகளோ...? ஆஆ...ஆஅ…ஆ… ஏழிசையைப் பயிலாத கலைமகளோ...? ஊழி நடம் புரியாத மலைமகளோ...? உலகத்தாய் பெற்றெடுத்த தலைமகளோ...? ஆ..ஆ..ஆ..ஆஆஆ… அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ...?2 நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ...?2 (படம்: பேசும் தெய்வம் / பாடல் வரிகள் : கவிஞர் வாலி / பாடியவர் : T.M.சௌந்திரராஜன் & P.சுசிலா / இசை : K.V. மஹாதேவன்)
ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்...2 இந்திர லோகத்துச் சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ...? மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ...? ரதி என்பேன் மதி என்பேன் கிளி என்பேன் நீ வா... உடல் என்பேன் உயிர் என்பேன் உறவென்பேன் நீ வா... (படம் : உயிருள்ளவரை உஷா / பாடல் வரிகள் & : இசை : டி.ராஜேந்தர் / பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி)
கண்படுமே பிறர் கண்படுமே - நீ வெளியே வரலாமா...?2 உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா...?2 புண்படுமே புண்படுமே - புன்னகை செய்யலாமா...? பூமியிலே தேவியைப் போல் ஊர்வலம் வரலாமா...? (படம் : காத்திருந்த கண்கள் / பாடல் வரிகள் : கவிஞர் கண்ணதாசன் / பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ் / இசை : M.S. விஸ்வநாதன், T.K. ராமமூர்த்தி)
மயக்கமென்ன... இந்த மௌனம் என்ன...? மணி மாளிகை தான் கண்ணே...2 தயக்கமென்ன... இந்த சலனமென்ன...? அன்பு காணிக்கை தான் கண்ணே... (படம் : வசந்த மாளிகை / பாடல் வரிகள் : கவிஞர் கண்ணதாசன் / பாடியவர் : T.M.சௌந்திரராஜன் & P.சுசிலா / இசை : M.S. விஸ்வநாதன்)


என்ன ஒரே காதல் பாட்டா இருக்குன்னு நினைக்கிறீர்களா....? தொடர்ச்சியா ஓரிரு தொழினுட்ப பதிவுகள் எழுதியாச்சி... நம்ம தள ஸ்பெஷல் பதிவு எழுத வேண்டாமா...? ஆனால் காரணம் நானில்லை... நம்ம வள்ளுவர் தான்...! ♬

குறளின் ஒரு அதிகாரத்தை "குறளின் குரலாக" ஒரு பதிவு எழுத நினைக்கையில், மேலே உள்ள பத்து பாடல்களும் மனதில் வந்து போனது... குறள் விளக்கமும், குறளுக்கேற்ப திரைப்படப் பாடல் வரிகளின் காணொலியும் (mp3) இணைத்து வரும் பதிவு விரைவில்... வாசிக்க, கேட்க, ரசிக்க தயாராக இருங்கள்...! அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி...⍰

திருக்குறளில் எந்த அதிகாரம்...? குறளுக்கேற்ப சில வரிகளை மட்டும் கொடுத்து விட்டால், நீங்கள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவீர்கள் என்பதால், ஒவ்வொரு பாடலின் முதல் வரிகள் சில மட்டும் இங்குக் கொடுத்துள்ளேன்... ஒரே ஒரு பாடல் மூலம் கண்டுபிடித்தால் கூட அதன் அதிகாரம் தெரிந்து விடும்... அப்படி எந்தப் பாடல் வரிகள் ♫ மூலம் கண்டுபிடித்தீர்கள் என்பதையும் கருத்துரையில் சொல்ல வேண்டும்... கண்டுபிடித்தவர்கள் மற்ற பாடல் வரிகளையும் ↘ ↙ குறளையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்... வேறு சரியான பாடல் குறளோடு மேலும் ஒத்துப் போனால், அதையும் தெரிவிக்கவும்... இது தான் முக்கியம்...! பாருங்க மேலுள்ள படத்தில் நம்ம ஐயன் பதிலுக்காகக் காத்திருக்கிறார்...!
நண்பர்களே...! கண்டுபிடிங்க பார்க்கலாம்...!! நன்றி...!!!

பிற்சேர்க்கை : சரியாகக் கணித்துள்ளவர்களின் எண்ணிக்கை : 05

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சரியான போட்டி வைத்துள்ளீர்கள். சிந்தித்து எழுதுமளவு நேரமில்லையே. பொறுத்துக்கொள்ளுங்கள். அதுசரி, திருவள்ளுவர் ஆங்கிலத்தில் ஏன் மறுமொழிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - ப்ளக்ஸ் பேனர் ஞாபகம் வந்தது...!!! (வள்ளுவர் கணினியை பயன்படுத்துவதும், பில்கேட்ஸ் திருக்குறளை படிப்பது போலவும்...)

      நீக்கு
  2. ஆகா இப்படியெல்லாம் கூட போட்டி வைக்க இயலுமா
    மகிழ்ந்தேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  3. நான் விடை யளித்து விட்டால் மற்றவர்கள் ஏமாந்து விடுவார்களே என்ற தயக்கம் எழுகிறதே! - இராய செல்லப்பா நியுஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.இராய செல்லப்பா அவர்களின் நிவையே எனக்கும்... ஜி

      நீக்கு
  4. க்ளூ: "கண்,விழி, கண்டேன், பார்த்தேன்..."
    113. காதற்சிறப்பு உரைத்தல் மற்றும் 118. கண் விதுப்பழிதல் அதிகாரத்தில் "கண்" தொடர்பான குறள்கள் உள்ளன...அதுவா?
    #நம்ம தல ஸ்பெஷல்

    பதிலளிநீக்கு
  5. ஆகா.. அருமை..

    கவின்மிகும் காதல் காலமெல்லாம் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  6. இன்பத்துப்பால் களவியலில்......இரு அதிகாரங்கள் நலம்புனைந்துரைத்தல், குறிப்பறிதல் மற்றும் தகையணங்குறுத்தலும் கலந்து கட்டி வருவது போல் தோன்றினாலும்....தகையணங்குறுத்தலில் குறிப்பாகக் கடைசிப் பாடல் முதல் பாடல், இரண்டாம் பாடல் என்று பொருந்தி வருவதால், தகையணங்குறுத்தல் என்று சொல்ல நினைத்தாலும் இந்த மூன்றுமே கலந்துகட்டி வருவது போல் உள்ளது டிடி...என் சிற்றறிவு

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வாட்சப் குழுவில் இணைய என்ன முறை, என்னையும் சேர்த்துக்கொள்ளவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்சப் இப்ப மடிக்கணினில் வருகிறது, குழுவில் எப்படி இணைவது

      நீக்கு
    2. நாகராஜ் சென்னை, குழுவில் இணைந்ததுக்கும், இணைப்புக்கு உதவிய திண்டுக்கல் தனபால் அவர்களுக்கும் மிக்க நன்றி, என்னுடைய பதிவு

      நீக்கு
  8. இன்பத்துப் பாலை மறுபடியும் படிக்க வைத்து விட்டீர்கள் தனபாலன் , இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லையே

    பதிலளிநீக்கு
  9. அழகான பேட்டி. பங்கு கொள்கிறோம். மகிழ்ச்சி. நன்றி

    பதிலளிநீக்கு
  10. அருமை வலைச் சித்தரே. வலைப்பதிவர்கள் திருக்குறளை மறுவாசிப்பு செய்யவைத்த போட்டி. திருக்குறளின் இன்பத்துப்பாலை அனைவரும் பருகி மகிழட்டும். திரையிசைப்பாடல்களின் மையப்பொருள்“காதலியின் முக நலன்” பற்றி இருப்பதால் “நலம் புனைந்துரைத்தல்” என்னும் அதிகாரக் குறள்களோடு ஒத்திசைந்துள்ளது.
    “அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை” --மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்.

    “கண்படுமே பிறர் கண்படுமே“ - பலர் காணத் தோன்றல் மதி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா... உங்களின் கருத்துக்கு நன்றி... கீழ் உள்ள இணைப்பை சொடுக்கி வாசிக்கவும்... நன்றி...

      நிலவே... மலரே...

      நீக்கு
  11. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா பதிவரெல்லாம் டிடி போல் பதிவிட முடியுமா

    பதிலளிநீக்கு
  12. மூன்றாம்பாலில்மூழ்கிவிட்டிர்

    பதிலளிநீக்கு
  13. வேலைப்பளு காரணமாக சில காலம் வலைப்பூ பக்கம் வர இயலவில்லை! வருந்துகிறேன்! நல்ல சுவாரஸ்யமான போட்டி! இணையத்திலே ஓரளவு தேடி விடை அளிக்க முயன்றுள்ளேன்! திருக்குறள்- இன்பத்துப்பால்- தகையணங்குறுத்தல் நான் பார்த்தவரை இந்த குறள்களுக்கும் பாடல்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக தோன்றுகிறது! விடை சரியா? நண்பரே! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. உங்கள் முதல் பாடல்! குறள் விளக்கம்! பால்: காமத்துப்பால். இயல்: களவியல். அதிகாரம்: தகையணங்குறுத்தல்.

    குறள் 1081:

    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

    மணக்குடவர் உரை:
    இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ?

    பரிமேலழகர் உரை:
    (தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது.) கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் - இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர்கொல் - அன்றி ஒருமானுட மாதரோ; என் நெஞ்சு மாலும் - இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. (ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற் சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். 'கனங்குழை': ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினார்.).

    மு. வரதராசன் உரை:
    தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

    மு. கருணாநிதி உரை:
    எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.

    சாலமன் பாப்பையா உரை:
    அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.

    Translation:
    Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,
    Is she a maid of human kind? All wildered is my mind!.

    Explanation:
    Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed.

    பதிலளிநீக்கு
  15. திருக்குறளை இதுநாள் வரை நூதனமாகக் கையாண்ட தாங்கள் எங்களையும் அவ்வின்பத்தில் மூழ்கச் செய்ய இப்பதிவில் உத்வேகம் தந்து இருப்பது மிகச் சிறப்பு! தெரிந்ததில் தெளிய மறுவாசிப்பு அவசியமே. நன்றி!

    கண்டுபிடித்து வைத்துக் கொண்டால் சரியா என ஒத்து பார்த்துக் கொள்ளலாம் வரும் பதிவில்.

    பதிலளிநீக்கு
  16. பாடல்களை பார்த்தால்எல்லாமே முப்பாலில் மூன்றாம்பாலைச் சேர்ந்தவையாக இருக்கின்றன ,ஆராய்ந்தால் மூட் அவுட் ஆகிவிடும் என்பதால் போட்டியில் இருந்து போகிறேன் அப்பால் :)

    பதிலளிநீக்கு
  17. பத்துப் பாடல்களும்
    முத்தான பாடல்கள் தான்
    வள்ளவர் குறளை வைத்தே
    எய்து விட்டீர் - அழகான
    கேள்விக் கணையை!
    அடுத்த பதிவு
    சுவையாக அமையப் போகிறது...

    பதிலளிநீக்கு
  18. அருமை. வித்தியாசமான போட்டி. பின்னூட்டம் கொடுத்து விட்டால் விடைகள் வரும்போது மெயில் பாக்ஸுக்கு வந்துவிடும் பாருங்கள்!

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  19. சிறப்பான பதிவு. இவ்வாறு எழுத வேறு யாரால் முடியும்?

    பதிலளிநீக்கு
  20. நலம்புனைந்துரைத்தல் என்று நவிலலும் சரியோ?

    பதிலளிநீக்கு
  21. சிறப்பு.
    வாழ்த்துகள்:.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  22. திருவிளையாடல் தருமி சொன்னது நிணைவுக்கு வருகிறது. சித்தரே..

    பதிலளிநீக்கு
  23. நீண்ட இடைவேளையின் பின்னர் கால் எடுத்து வைக்கிறேன் , எதுவும் புரியவில்லை எனக்கு, ஆனா நலமாக இருக்கிறீங்கள் என்பது மட்டும் புரிகிறது... திருக்குறளுக்கும் எனக்கும் வெகுதூரமாச்சே.... படங்களை எழுதி எடுத்துள்ளேன் பார்க்கப் போகிறேன்... வசந்த மாளிகை, உயிருள்ளவரை உசா மட்டும் பார்த்தாயிற்று.

    பதிலளிநீக்கு
  24. அட! தனபாலனா கொக்கா? நாங்களும் போட்டி வைப்போமில்லன்னு கெளம்பிருக்கீக... ஆனா நமக்கு பதில் தான் தெரியலை. ஆனால் பாடல்கள் அத்தனையும் அருமை.

    பதிலளிநீக்கு
  25. ஆழியிலே பிறவாத அலைமகளோ பாடல் தகையணங்குறுத்தல் என்று சொல்ல, ஒரு பெண்ணை பார்த்தேன் மலரைப் பார்த்தேன் நலம்புனைந்துரைத்தல் என்று சொல்ல, குழம்பிப்போயிருக்கிறேன் ... என்று நான் இட்ட கருத்துரையைக் காணாமல் செம கோவத்தில் இருக்கேன் அண்ணா ..ஆமாம்..ஹாஹா ... உங்கள் மேல் இல்லை..அன்றைக்கு நான் தட்டச்சு செய்யும்பொழுது அவசரமாகக் கணினியைப் பிடுங்கிச் சென்றவர் மீது!!!! கோபம் தணிக்க மீண்டும் அடுத்த பதிவிற்குப் போகிறேன் . ஹாஹா

    பதிலளிநீக்கு
  26. 'ஆழியிலே பிறவாத அலைமகளோ' வரிகளை வைத்து -தகையணங்குறுத்தல் அதிகாரம் என்று நினைக்கிறேன்.

    "அணங்குகொல் ஆய்மகள் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும்என் நெஞ்சு"

    பதிலளிநீக்கு
  27. தாங்கள் தந்துள்ள பாடல்களுக்கான குறட்பாக்கள் திருக்குறளில் ‘தகையணங்குறுத்தல்’ அல்லது ‘குறிப்பறிதல்’ அதிகாரத்தில் உள்ளன என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் திருக்குறளில் ‘தகையணங்குறுத்தல்’ அதிகாரத்திற்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. இன்பத்துப் பாலின் இரண்டு அதிகாரங்களில் கிடைத்தவை இவை. வலைச் சித்தர் வழி மொழிவாரா ?

    தகை அணங்கு உறுத்தல்
    ----------------------------------------------
    கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே - கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்
    நிற்குமோ ஆவி நிலைக்குமோ - கூற்றமோ கண்ணோ
    சேரன் வில்லை புருவத்தில் கண்டேன் - கொடும் புருவம் கோடா மறைப்பின்
    பாணம்தான் உன் கண்களோ - பெண்தகையால் பேரமர்க் கட்டு

    நலம் புனைந்து உரைத்தல்
    -----------------------------------------
    முகத்தை தாமரையாய் நினைத்த வண்டு - மலர் காணின் மையாத்தி நெஞ்சே
    இடையில் இடையே கிடையாது - நுசுப்பிற்கு நல்ல படா அ பறை
    மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ - அறியா பதியின் கலங்கிய மீன்
    மெல்ல மெல்ல அடி எடுத்து - அடிக்கு நெருஞ்சிப் பழம்
    பூவாடை வரும் மேனியிலே - முறுவல் வெறி நாற்றம்
    ஊரார் கண்ணுக்குத் தரலாமா - பலர் காணத் தோன்றல் மதி

    -------------------------------------------------

    பதிலளிநீக்கு
  30. பாடல்கள் அருமை.
    போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.