வணக்கம் நண்பர்களே... "எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?" -ன்னு நம்ம ஐயன் எங்காவது கேள்வி கேட்டுள்ளாரா...? என்பதை அறிய, இதன் முந்தைய பதிவை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்கி வாசித்து வந்தால் தான், அதற்கு நம்ம ஐயன் சொன்ன தீர்வை இந்த அதிகாரத்தின் முடிவில் உள்ள குறளில் அறிய முடியும்... ⟪ © பாலும் பழமும் ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி ☊ T.M.சௌந்தரராஜன் @ 1961 ⟫ இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை இல்லை என்றால் அவன் விடுவானா...? உறவைச் சொல்லி அழுவதனாலே - உயிரை மீண்டும் தருவானா...? கூக்குரலாலே கிடைக்காது - இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது... போனால் போகட்டும் போடா 2 இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா...? போனால் போகட்டும் போடா... || இன்றைய நாட்டு நிலையில் சிலர் பாடும் பாடல் இதுவாக இருக்குமோ...? அதற்காக இப்பதிவில் உள்ள குறள் விளக்கமும், குறள்களுக்கேற்ப திரைப்படப் பாடல் வரிகளும் "அவர்களுக்காக" என்று வாசிக்க வேண்டாம்... கறுப்புப்பணம் மட்டுமல்ல... அளவிற்கு அதிகமாகப் பொன், பொருள் வைத்திருப்பவர்களுக்காக அன்றே நம்ம ஐயன் எ