இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அடுத்து என்ன...?

படம்
அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா...? அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா...? கொடுமை கண்டும் கண்ணை மூடி கிடப்பவன் மனிதனா...? கோபம் கொண்டு நியாயம் கேட்டுக் கொதிப்பவன் மனிதனா...? மனிதன் மனிதன்... எவன் தான் மனிதன்...? வாழும் போதும் செத்துச் செத்து பிழைப்பவன் மனிதனா...? வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா...? பிறருக்காகக் கண்ணீரும்... பிறருக்காகச் செந்நீரும்... சிந்தும் மனிதன் எவனோ - அவனே மனிதன் மனிதன் மனிதன்... ⟪ © மனிதன் ✍ வைரமுத்து ♫ சந்திரபோஸ் 🎤 மலேசியா வாசுதேவன் @ 1987 ⟫ மனசாட்சி... எந்தச் சூழ்நிலையிலும் எவன் ஒருவன் தன் மனத்தை இதமாக வைத்துக் கொள்கிறானோ அவன் தாண்டா மனிதன் ! பிறகு தான் மற்றவை...

அடப்போங்கப்பா...! நீங்களும் உங்க பதிவும்...!

படம்
செல்லம்... அண்ணன்களையும் கூப்பிடு... இதோ 100 ரூபாய் நோட்டு... யாருக்குப் பிடிக்கும்...? எல்லோருக்கும் கை தூக்கிட்டீங்க... ம்... இப்போ ரூபாய் நோட்டை நல்லா மடிச்சி கசக்கிட்டேன்... இப்போ பிடிக்குமா...? மறுபடியும் கை தூக்கிட்டீங்க... சரி இப்போ ரூபாய் நோட்டை நல்லா மிதிச்சி அழுக்காக்கிட்டேன்...! இப்போ பிடிக்குமா...? என்னப்பா... கை தூக்குற பயிற்சியா சொல்லிக் கொடுக்குறீங்க...? நோட்டைக் கசக்கினாலும், மிதிச்சி அழுக்கானாலும் அதோட மதிப்பு குறையுமா...? அது சுக்குநூறாகி கிழிச்சாத் தான் குறையும்... முதல்லே காலை கழுவிட்டு வாங்க...

சூழ்ச்சியில் மாட்டிக்கிட்டேன்...!

படம்
நான் வளர்த்த பூங்குருவி வேறிடம் தேடி - செல்ல நினைத்தவுடன் அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி... நிழற்படமாய் ஓடுது என் நினைவுகள் கோடி... அந்த நினைவுகளால் வாழுகிறேன் காவியம் பாடி...! (படம் : மோகனப் புன்னகை) போன வாரம் நண்பரோட மகளின் கல்யாணத்திற்குப் போயிருந்தப்போ, நண்பர் இந்தப் பாடல் பாடுவதாக மனசிலே தோணிச்சி...! அன்பை உரைத்திட வாயில்லாத அழகுச் சிலை இவள்... கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்... உன் வசத்தில் இந்த ஊமைக்குயில்... இவள் இன்பதுன்பம் என்றும் உந்தன் கையில்... காவல் நின்று காத்திடுக கண் போலவே... பொன் போலவே... (படம் : நீதிபதி) எதிர்ப்பாட்டு நான் பாடலே... வாசிக்கிற + பெண்ணை பெற்ற பெற்றோர்கள் எல்லோரும் பாடியிருப்பாங்க...!