🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



எது அறிவு...? (பகுதி 1)

ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி...! உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி2 நாளும் ஒவ்வொரு பாடம் கூறும், காலம் தரும் பயிற்சி - உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி2 சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா...© அரசிளங்குமரி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் G.ராமநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1961 ⟫


என்னம்மா, எல்லோரும் பல்லாங்குழி, நொண்டி, பாண்டி, தாயம், சோவி, சொட்டாங்கல், கண்ணாமூச்சி, சோடி வளையல், ஆடுபுலி, பாம்புக்கட்டம் - இப்படிப் பல விளையாட்டுகள் முடிந்ததா...? இத்தனையும் சொல்லிக் கொடுத்த அம்மா, இப்போ உன்னோட நண்பர்களுக்கெல்லாம் வேசம் போட்டுக்கிட்டு இருக்காங்க...! மாறு வேச போட்டியா...?

மாறு வேசம் தான்... ஆனா போட்டியெல்லாம் கிடையாது... இவங்க எல்லாம் பக்கத்து வீட்டு நண்பர்கள்... இவங்க என் பள்ளித் தோழிகள், தோழர்கள்... எங்க பள்ளி ஆண்டு விழாவில் அறிவு என்னும் தலைப்பில் பேசணும்; உங்க உதவி தேவை அப்பா... பாடெல்லாம் அப்புறம் பாடலாம்... சரியாப்பா...?

உதவியா...? ஐ... ஜாலி...! பலரும் மறந்து போன இந்த விளையாட்டுகளில், அடுத்த முறை என்னையும் சேர்த்துக் கொள்ளணும், சரியா...? அப்புறம் அறிவெனும் தலைப்பில் தானே...? ம்... (தெய்வப் புலவரே, உதவி செய்...! ஆனா, க்கும்... பாட்டில்லாமல் - சிரமம் தான்... முடிவில் பார்ப்போம்...)

ஒவ்வொருத்தருக்கும் எழுதிக் கொடுத்திட்டேன்... வாங்க குழந்தைகளே... மேடைப் பயம் போக இங்கே ஒரு முறை பேசுங்க...! முயற்சியும் பயிற்சியும் என்றும் வெற்றி தரும்... வாசகர்களுக்காக : ()←உள்ளே மனதின் சிந்தனை...
கருவினில் மலரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை... களங்கம் பிறந்தால், பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை... அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா... வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி - மக்களின் மனதில் நிற்பவர் யார்...? மாபெரும் வீரர் மானம் காப்போர் - சரித்திரம் தனிலே நிற்கின்றார்...! அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா... ஆறிலும் சாவு நூறிலும் சாவு, தாயகம் காப்பது கடமையடா... தாயகம் காப்பது கடமையடா...© மன்னாதி மன்னன் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1960 ⟫
ராணுவ வீரன் : அழிவு வராமல் காக்கும் கருவியும், இறுதிக்காலம் வரைக்கும் காப்பாற்றும் கருவி தான் அறிவு... எந்தப் பகைவனும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டை போல் செயல்படுவது தான் எங்கள் அறிவு...!

(எங்களுடைய இறுதிக்காலம் என்று சொல்லுங்க...! நாங்க எல்லோரும் சந்தோசமாக இருக்க, நீங்க இரவு, பகல், மழை, வெயில் என்று எதையுமே பாராமல், தினமும் நாட்டைக் காக்கும் உங்களுக்கு என் முதல் சல்யூட்...!)

421. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு... உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும் - அன்புக்குப் பாதை விடு2 கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு... கண்ணியம் தவறாதே - அதிலே திறமையைக் காட்டு...© விளக்கேற்றியவள் ஆலங்குடி சோமு T.R.பாப்பா T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫
விஞ்ஞானி : யார் என்ன சொன்னாலும் சரி, அதையெல்லாம் நாங்க நம்ப மாட்டோம்... அந்தப் பொருளின் உண்மைத் தன்மையை அறிவது தான் எங்கள் அறிவு...!

(சாதி, மத, சாமி... முக்கியமாகப் பணம் / புகழ் கிடைக்க வேண்டி ஆராய்ச்சியெல்லாம் விட்டுட்டு, மனிதனுக்கு உதவுகிற மாதிரி ஆராய்ச்சி பண்ணுங்கப்பா...)

423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

கிளி போலப் பேசு, இளங்குயில் போலப் பாடு, மலர் போலச் சிரித்து, நீ குறள் போல வாழு... லாலாலலாலா லலலலாலலாலா... லாலாலலாலா லலலலாலலாலா... மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்... மெய்யான அன்பே தெய்வீகமாகும்... மெய்யான அன்பே தெய்வீகமாகும்... நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...© நம் நாடு வாலி M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1969 ⟫
ஆசிரியர் : நாங்க சொல்ல வேண்டியவற்றை எளிய முறையில், குழந்தைகளின் மனதிலிருந்து மறக்க முடியாதபடி சொல்லுவோம். அதே போல் அவர்களின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளையும் காண்பது தான் எங்கள் அறிவு...!

டியுசன் என்று தனிப் பயிற்சிக்கு வரும் குழந்தைகளிடம் மட்டுமல்லாமல், பள்ளிக்கூடத்தில் அனைத்து குழந்தைகளிடமும் இதே பணி தொடரும் சிற்சில (?) ஆசிரியர்களே... வாழ்க்கைப் பாடத்தையும் கற்பித்து குருவாக மாறுங்களேன்... நன்றி...)

424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் - இலக்கணம் படித்தவன் தொழிலாளி... உருக்கு போன்ற தன் கரத்தை நம்பி - ஓங்கி நிற்பவன் தொழிலாளி... ஆண்டவன் உலகத்தின் முதலாளி - அவனுக்கு நான் ஒரு தொழிலாளி... அன்னை உலகின் மடியின் மேலே - அனைவரும் எனது கூட்டாளி...© தொழிலாளி ஆலங்குடி சோமு K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1964 ⟫
உழைப்பாளி : உலகத்து உழைப்பால் உயர்ந்தவரை எல்லாம் நட்பாக்கி கொள்ளும் போது அதிகமாக சந்தோசப்படாம, அதில் ஏதேனும் நிறைகுறை இருந்தாலும், சமமாக எடுத்துக் கொள்வது தான் எங்கள் அறிவு...!

(உங்களின் வேர்வையில் தான் நாங்கள் வாழ்கிறோம்...)

425. உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு

சோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி... சுறுசுறுப்பில்லாம தூங்கிக்கிட்டு இருந்தா - துணியும் இருக்காது தம்பி... இத அடுத்தவன் சொன்னா கசக்கும், கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும், இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு - அத்தனையும் சொல்லிப் போடு... ஓடி ஓடி உழைக்கணும்... ஹோ ஹோ ஹோய்... வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி... பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் - சட்டம் ஆகணும் தம்பி... நல்ல சமத்துவம் வந்தாகணும் - அதிலே மகத்துவம் உண்டாகணும்... நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் - படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்... ஓடி ஓடி உழைக்கணும் - ஊருக்கெல்லாம் கொடுக்கணும், ஆடி பாடி நடக்கணும் - அன்பை நாளும் வளர்க்கணும்...© நல்ல நேரம் வாலி K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1972 ⟫
அரசியல்வாதி : தன்னலம் கருதாமல் உலகத்துப் பெரியோர்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ, அவர்களைப் பின்பற்றி நாங்களும் வாழ்வது தான் எங்கள் அறிவு...! அதுக்கு முன்னாடி பாரத நாட்டில் ஒவ்வொருவரும் 5 வருடம் ராணுவத்தில் பணி புரிந்தால் தான், அரசாங்க வேலை வழங்கப்படும்...!

தன்னலம் கருதாதவர்கள் ஓரிருவரா...? பெரியார், காமராசர், இன்னும் பலர்... ஒரு நிமிசம்... இரண்டு வரிகள் தானே எழுதிக் கொடுத்தேன்... அரசியல்வாதி வேசம் போட்டதற்கே இப்படியா...? நல்ல சட்டம் போட்ட தம்பிக்கு வாழ்த்துக்கள்...
426. எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு

பாடல்கள் இல்லாமல் எப்படி...? ஒவ்வொரு குறளுக்கு முன்னுள்ள இதயத்தை சொடுக்கவும்... சிந்தனைக்கேற்ப + சிறிது குறளுக்கேற்ப பாடல் வரிகள் உள்ளதா...? இன்னும் என்னென்ன வேசங்களில் வந்து அசத்துவார்கள் என்பதை அடுத்த வருடம் தொடர்கிறேன்...! நன்றி நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வணக்கம்
    அண்ணா

    காலம் உணர்ந்து பதிவாக மலர்ந்த விதம் நன்று... ஒவ்வொரு குட்டி குட்டி தலைப்பில் சொல்லிய கருத்துகள் உண்மைதான் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    மறைந்த மக்கள் திலகத்தை மீண்டும் உயிர் கொடுத்துள்ளீர்கள் பா வரிகள் மூலம்
    வாழ்த்துக்கள் த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அறியவேண்டிய அறிவுப் பாடம்!..

    அருமையான குறள்களும் அதற்கேற்ப இனிமையும்
    பொருள் நிறைந்ததுமான திரைப்படப் பாடல் வரிகளும்
    மிகச் சிறப்பு! நல்ல பதிவும் பகிர்வும்!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  3. வழக்கம்போலவே ரசிக்கும்படியான பாடல் உதாரணங்களுடன் எழுதி இருக்கிறீர்கள். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான பாடல் தொகுப்பு . மாணவ , மாணவிகள் பேசியது அருமை.
    தன்னலம் கருதாமல் வாழ்ந்த முன்னோர்களை பின் பற்றுவது தான் அறிவு.
    உண்மை அழகாய் சொன்னீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஆளும் வளரணும்
    அறிவும் வளரணும்
    என்று தொகுத்தளித்த
    அத்தனையும்
    நல்ல எண்ணங்கள்
    பாடல், திருக்குறள் என
    தங்கள் பதிவுகள் வெளிப்படுத்தும் செய்திகள்
    பயன் தருவன என்பேன்!

    பதிலளிநீக்கு
  6. வழக்கம் போல பாட்டுக்குப் பாட்டுடன் கூடிய பதிவு. சிறப்பாக இருந்தது.
    த.ம.6

    பதிலளிநீக்கு
  7. அறிவு என்ற தலைப்பில் அருமையாக விளக்கியுள்ளீர்கள். ஒவ்வொரு தொழில் புரிவோரும் தங்கள் சொல்லியபடி வேலை செய்தால் கண்டிப்பாக நம் நாடு முன்னேறும் (நான் குறிப்பாக சொல்ல வந்தது அரசியல்வாதியைத்தான்). குறளும், பாடலும் விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. மிக மிக அருமையான ஒரு பதிவு டிடி! அருமை அருமை என்று சொல்லுவதற்கு மீறி வேறு வார்த்தைகள் எங்களுக்குத் தெரியவில்லை டிடி. அரசியல்வாதியைக் கூட நேர்மறை எண்ணத்துடன் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. ஆனால் நடைமுறையில் அப்படி இலலையே என்பதும் வேதனிக்குரியது....

    எப்போதும் போல் திருக்குறள் + பாடல்கள்...சொல்லப்பட்டக் கருத்து மிகவும் உயர்வான கருத்து.....பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் டிடி ரசித்தோம்..

    பதிலளிநீக்கு
  9. அருமையான குறள்கள்
    அருமையான திரைப்படப் பாடல்கள்
    அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  10. உச்சி சாஞ்சதும் வர்றேன் நண்பா....

    ஆனால் தமிழ் மணம் 10

    பதிலளிநீக்கு
  11. பாலூட்டும் அன்னை.. சோம்பேறியாக இருந்துவிட்டாத்தான்...போன்ற அருமையான தலைவர் பாடல்களைப்போட்டு சிறந்ததொரு கட்டுரையும் அளித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான குறட்பாக்களுடன் - இனிய விளக்கங்கள்!..
    அர்த்தமுள்ள திரைப்பாடல்கள்!.. இனிய காலைப் பொழுது!..
    வாழ்க நலம்!.

    பதிலளிநீக்கு
  13. அறிவு குறித்த குறள்களை எடுத்தாண்டதோடு, அதற்கு ஏற்புடைய பல விளக்கங்களும் அளித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  14. வழக்கம் போலவே பாடல்களுடன் கருத்துள்ள பகிர்வாக அமைத்த விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  15. திருக்குறளும் பொருத்தமான விளக்கங்களும் அருமை சகோ. :)

    பதிலளிநீக்கு
  16. 'கத்தியைத் தீட்டாதே..."

    அடாடா.. திரைப்படப் பாடலையும் திருக்குறளையும் இணைப்பது இரு வேறு தலைமுறைகளையும் திரும்பவைக்கும் செயல்.

    God Bless You.

    பதிலளிநீக்கு

  17. வழக்கம்போல் தங்கள் பாணியில் திருக்குறளோடு திரைப்பட பாடல்களையும் இணைத்து அருமையான பதிவை தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. வருட இறுதிப் பதிவு அறிவு பூர்வமாக
    அமைந்தது. நன்று..நன்று டிடி.
    இனிய வாழ்த்தும்.
    இனிய கிறிஸதுமஸ் புத்தாண்டு வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள அய்யா,

    பட்டுக்கோட்டையின் பாட்டு வரியில் தொடங்கி அய்யனின் வழியில் நின்று ‘எது அறிவு’ என்பது பற்றி பாப்பாவிற்கு உணர்த்தியதன் மூலம பாருக்கு அழகாகச் சொன்னீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. திருக்குறள் விளக்கமும் பொருத்தமான திரைப்படப் பாடல்களும் மிக மிக அருமையாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  21. நல்ல எண்ணங்களை பகிர்ந்த விதம் வெகு அருமை. வழக்கம்போல் குரலையும் குறளையும் வெகு அழகாகக் கையாண்டுள்ளீர்கள் பாராட்டுக்கள் டிடி

    பதிலளிநீக்கு
  22. ஆஹா!! பள்ளி பிள்ளைகளுக்கு பயனுள்ள பதிவா இருக்கே! சூப்பர் அண்ணா!

    பதிலளிநீக்கு
  23. திருக்குறள் பாடமும் பாடலும் சுவாரசியம்.
    தொழில்நுட்ப மாயாஜாலம் அருமை
    திருக்குறளுக்கு பொருத்தமான தலைப்பு சிறப்பு

    பதிலளிநீக்கு
  24. அறிவுக்கு வேலை தரும் பட்டுக் கோட்டையாரின்
    தத்துவப் பாடலும்
    வாய்மை வேந்தர் வள்ளூவரின் குறட்ப்பாக்களூம்
    அருமை நண்பரே!
    இனிமை!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  25. வலைப் பூ நண்பருக்கு,
    வணக்கம்!
    அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்துக்கள்
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  26. குறள் சொல்லும் நெறிமுறைகளைப் பின் பற்றி வாழ்ந்தால் நலம் என்பதை அழகாய் விளக்கியுள்ளீர்கள் தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  27. நண்பரே பதிவு சுருக்கமாயினும் நறுக்கென்று இருந்தது தங்களது பாணியில் வாழ்த்துகள்.
    அடுத்த பதிவு அடுத்த வருடமா ? ஏன் ?

    ஓஹோ அடுத்த வாரம் தானோ....
    நன்றி

    பதிலளிநீக்கு
  28. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி என்பதெல்லாம் அந்த காலம் ,வருமானத்தை எல்லாம் டாஸ்மாக்கில் விடுவதால் ..இலக்கணம் படைத்தவன் என்பதை விட இலக்கணம் மறந்தவன் தொழிலாளி என்றே எனக்கு பாடத் தோன்றுகிறது :)
    த ம 17

    பதிலளிநீக்கு
  29. ஓடி ஓடி உழைக்கணும் குரலுக்கு ஏற்ற பாடல் . அருமையான சிந்தனைப்பகிர்வு.

    பதிலளிநீக்கு
  30. அன்பின் தனபாலன்

    அருமையான பதிவு

    குறள்களைத் தேர்நெதெடுத்து - அவற்றிக்கான அருமையான திரைப் படல் பாடல்களையும்த்நது பதிவாக்கியது நன்று

    பாராட்டுகள்
    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  31. குறளைப் போலவே நச்சென்று, நறுக்கென்று மனதில் பதியும்வகையில் உள்ளன தங்களது பதிவு. அவ்வப்போது தங்கள் நடையில் சில மாற்றம் காணப்பட்டாலும் வாசகர்களைத் தாங்கள் ஈர்க்கும் பாங்கு அருமை.

    பதிலளிநீக்கு
  32. திருக்குறளை வைத்து விளக்க தங்களை மிஞ்சமுடியாது என்று நினைக்கிறேன். அனைத்து விளக்கங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  33. ஆகா... “திருக்குறள் செல்வர்” எனும் பட்டம் உமக்குத்தான் பொருந்தும் வலைச்சித்தர் இப்படிக் “குறள் சித்தர்“ ஆனது மகிழ்ச்சி.
    குழந்தைகளுக்கேற்ற கருத்து, பெரியவர்களுக்கும் பயன்படும் பொருள்விளக்கம்... கலக்குறேள் போங்கோ... நல்லா இருங்க (தம.21)

    பதிலளிநீக்கு
  34. எல்லாம் தத்துவ பாடல்கள் அருமை ! ஆசிரியர் நாங்க படிக்கும் போதே பாடத்தில் சில மட்டுமே முழுவதும் டுயுசன் சென்றால் மட்டுமே . குறியீடுகளை சற்று பெரியதாக இருந்தால் நன்றாக இருக்கும் .

    பதிலளிநீக்கு
  35. வழக்கம் போல குறளுக்கு விளக்கமும் சிறப்பான எம்,ஜி,ஆர் பாடல்களும் தந்து அசத்திவிட்டீர்கள்! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  36. அருமையான குறள்கள்...
    அழகான பொருத்தமான பாடல்கள்...
    கலக்கல் பகிர்வு அண்ணா...
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
  37. குறளும் அதற்கான பொருளும், ஏற்ற பாடல்களும் என சிறப்பான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  38. பொருத்தமான குறள்களை இஅனைத்துக் கருத்துச் சொன்ன விதம் அருமை

    பதிலளிநீக்கு
  39. தஞ்சாவூர் கதம்பம் போல் அழகான
    பதிவு மேலும் வழக்கம்போல் தொழில்
    நுட்ப்பங்களோடு!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
    வாழ்த்துக்கள்
    அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
    link is here click now!

    பதிலளிநீக்கு
  41. குறள்,சினிமா பாடல்கள் அனைத்தையும் இணைத்த பதிவு அருமை...நன்றி

    பதிலளிநீக்கு
  42. குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்!
    திகழ்க நலமுடன்

    தோழமையுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  43. நல்லதொரு தொகுப்பு. அதற்கேற்ற பாடல்கள் கூடுதல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  44. என்னது இருபத்தி மூன்றா?
    அம்மாடியோ

    பதிலளிநீக்கு
  45. தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

    பதிலளிநீக்கு
  46. தங்கள் வலைக்கு முதல் முறையாக வருகிறேன். தங்களின் பதிவுகள் நன்றாக உள்ளது. இனி தொடர்கிறேன்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் சகோதரரே!

    வழக்கம் போல் சிறப்பான பதிவையே தந்திருக்கிறீர்கள்! பகிர்ந்தமைக்கு நன்றி!

    தலைப்பிற்கேற்றபடி,திருகுறளின் வரிகளுக்கு ஒத்துப்போவது போல், கருத்து மிகுந்த பாடல்களை மேற்கோள் காட்டி தங்கள் பாணியில், ஒவ்வொருவருக்கும் தொகுத்து சொன்ன விதம் மிகவும் அருமை! வரும் வருடத்தில், இதன் அடுத்தப் பதிவையும் காண ஆவலாக இருக்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இனிய இப்புத்தாண்டில் அனைத்து வளங்களும் பெற இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  48. அண்ணாவுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  49. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  50. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  51. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
  52. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா

    பதிலளிநீக்கு
  53. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  54. ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதாண்டா வளர்ச்சி..என்ற வரிகளை படித்தவுடனே எனக்கு பக்கென்றாகவிட்டது. ஏனென்றால் ரெண்டுமே என்னிடம் இல்லையே வலை சித்தரே.. ஆளு வளராவிட்டாலும் அறிவாவது வளர ஒரு வழி சொல்லங்கள் வலை சித்தரே...........

    பதிலளிநீக்கு
  55. வணக்கம்!

    பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
    தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  56. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  57. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  58. வணக்கம் !

    இனிக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரா
    பிறந்திருக்கும் இப் புத்தாண்டு மனதில் மகிழ்ச்சியை விதைக்கட்டும் .

    பதிலளிநீக்கு
  59. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு

  60. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    நன்றி !

    பதிலளிநீக்கு
  61. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  62. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  63. நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.....


    பதிலளிநீக்கு
  64. லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக வருவிங்கன்னு தான் தெரியுமே...!!!!!

    பதிலளிநீக்கு
  65. ஒவ்வொரு பதிவிலும் புதிய உத்திகள். புதிய செய்திகள். உங்களால்தான் முடியும். நன்றி.

    பதிலளிநீக்கு
  66. வணக்கம் சகோதரரே!

    என் வலைத்தளம் வந்து கருத்திட்டுப் பாராட்டி என் எழுத்துக்களுக்கு மென் மேலும் உரமாக, ஊக்கமளிப்பதற்கு என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரரே..!

    தங்களுக்கும், என் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  67. தனியுடமை கொடுமைகள் தீர.. தொண்டு செய்தால் கொடுமைகள் தீருமா,,,,?? சித்தரே...

    பதிலளிநீக்கு
  68. தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

    ஒவ்வொரு பதிவிலும் புதிய புதிய உத்திகள்!

    பதிலளிநீக்கு
  69. பொங்கலுக்கு பொங்கல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.....

    பதிலளிநீக்கு
  70. இன்றைக்கு இல்லை நாளைக்குத்தான் பொங்கல் என்கிறீர்கள்...நல்லது..

    பதிலளிநீக்கு
  71. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  72. எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  73. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  74. வணக்கம் சகோதரரே!

    தங்களுக்கும், தங்கள் உற்றார், உறவினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்….

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  75. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  76. நன்றி அண்ணே ! தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் , உறவினர்கள்ள , நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் ணா

    பதிலளிநீக்கு
  77. இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள்சகோ.

    பதிலளிநீக்கு
  78. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  79. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல் வாழ்த்துகள் அண்ணா ..

    பதிலளிநீக்கு
  80. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள்!

    பதிலளிநீக்கு
  81. இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  82. தாமதம் ஆனாலும் இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள் டிடி!

    பதிலளிநீக்கு
  83. அழகான கருத்துகள், அதற்கேற்ற தலைப்புகள்... அருமை !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  84. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "வலை - வழி - கைகுலுக்கல் - 1"

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துகளுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    http://youtu.be/KBsMu1m2xaE

    (எனது இன்றைய பதிவு
    ("கவி ஒளி" அருட்பெருஞ்சோதி வள்ளலார் / "தென்னகத்து தென்றல்" கண்டு இன்புற்று
    படித்தது கருத்திட வேண்டுகிறேன் வேண்டுகிறேன். நன்றி!)

    பதிலளிநீக்கு
  85. ஆடலுடன் பாடலைக்கேட்டு ரஸிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ......

    அதுபோல இனிமையான பலவிஷயங்களின் கோர்வைதான் தங்களின் பதிவுகள்.

    பின்னூட்டங்களின் எண்ணிக்கையை இரண்டு இலக்கத்திலிருந்து மூன்று இலக்கமாக்கிய பெருமை என்னைச் சேருமோ ? :) வாழ்க !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.