🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அஅ... இஇ... [2]

வணக்கம் நண்பர்களே... சேகரித்து வைப்பதற்குத் தேவையின்றி எதுவுமில்லை... இறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை... நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே - அது ஒரு பொற்காலம்...! அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்... அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்... அது ஒரு அழகிய நிலா காலம் - கனவினில் தினம் தினம் உலாப் போகும்2 நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே - அது ஒரு பொற்காலம்...!© பாண்டவர் பூமி சினேகன் பரத்வாஜ் பரத்வாஜ் @ 2001 ⟫



முந்தைய பதிவை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்... மீண்டும் ஒரு முறை விளக்கம் :

பலரைச் சந்தித்த எனது அனுபவத்தில், திறமை மிக்கவராக, சிறப்பானவராக, நேர்மையான ஆளுமைத் திறன் மிக்கவராக, இன்னும் பலவாறு எதிலும் பலே கில்லாடியாக அசத்தி வியக்க வைக்கிறார்களே, அவர்கள் இளமைக் காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்...? என்று யோசித்ததில்...

ஒரு அதிகாரம் இருமுறை குறளில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும்... அது குறிப்பறிதல் - பொருட்பால் அமைச்சியலில் 71வது & இன்பத்துப்பால் களவியலில் 110வது... இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்... + மனதிற்கு இனிய பாட்டுக் கேட்கும் போதெல்லாம், பல இனிய நினைவுகள் நம் மனதில் வந்து போகும் - ஆறுதலாக, மகிழ்ச்சியாக, மருந்தாக, பெருமையாக, பெருமிதமாக, உற்சாகமாக... - இப்படிப் பல... ரசிப்போமா...?

அன்றைக்கு அப்படி...! (அ அ) இன்றைக்கு இப்படி...! (இ இ)

அ அ : என்னதான் காதலை மறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் பேசினாலும், அவள் மனதில் உள்ள கோபமில்லாத அன்பு ஒரு நாள் வெளியே தெரிந்து விடும்...! இந்த மானிடர் காதலெல்லாம் - ஒரு மரணத்தில் மாறிவிடும்...! அந்த மலர்களின் வாசமெல்லாம் - ஒரு மாலைக்குள் வாடிவிடும்...! நம் காதலின் தீபம் மட்டும் - எந்த நாளிலும் கூட வரும்...! ஓராயிரம் பார்வையிலே - உன் பார்வையை நானறிவேன்...! உன் காலடி ஓசையிலே - உன் காதலை நானறிவேன்...!© வல்லவனுக்கு வல்லவன் கண்ணதாசன் வேதா T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫
1096 உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்

இ இ : தன்னருகே இருக்கும் உருவத்தைத் தன்னிடத்தே காட்டும் பளிங்கைப் போல, ஒருவரின் மனதில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும்..!

706 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

அ அ : கோபமில்லாமல் பேசும் பேச்சும், எதிரிகள் போலப் பார்வையுடனும் நடித்துக் கொண்டிருந்தாலும், அவையெல்லாம் உள்ளத்தில் அன்பு இருக்கும் அடையாளங்கள் என்று அறிய வேண்டும்... நிலையில்லாமல் ஓடுவதும் - நினைவில்லாமல் பாடுவதும், பகைவர்போலே பேசுவதும் - பருவம் செய்யும் கதையல்லவா...?2 பனி இல்லாத மார்கழியா...? படை இல்லாத மன்னவரா...? இனிப்பில்லாத முக்கனியா...? இசையில்லாத முத்தமிழா...?© ஆனந்த ஜோதி கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1963 ⟫
1097 செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு

இ இ : மனம் முழுக்க பரவசமான மகிழ்ச்சியாக இருந்தாலும், கோபத்துடன் வெறுப்பாக இருந்தாலும், அதைத் தெரிவிக்கும் முகத்தை விட வேறு அறிவால் மிக்கது வேறு ஏதும் உண்டா...?

707 முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்

அ அ : நான் பார்க்கும் போது அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்... அதனால் ஏற்படும் அசையும் மெல்லிய இயல்பு உடையவளுக்கு அழகான நன்மைக் குறிப்பும் உண்டு...! தென்றலைப் போல நடப்பவள், என்னைத் தழுவ காத்துக் கிடப்பவள்... செந்தமிழ் நாட்டுத் திருமகள், எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்...! சிந்தையில் தாவும் பூங்கிளி, அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி...! அஞ்சுகம் போல இருப்பவள், கொட்டும் அருவி போலச் சிரிப்பவள்...! மெல்லிய தாமரை காலெடுத்து, நடையைப் பழகும் பூந்தேரு...! மெட்டியைக் காலில் நான் மாட்ட, மயங்கும் பூங்கொடி...! பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ...! சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ...! கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ..! சிரிப்பு மல்லிகைப்பூ...! சிறுகைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ... அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ... மைவிழி ஜாடைகள் முல்லைப்பூ... மணக்கும் சந்தனப்பூ...© உழவன் வாலி A.R.ரகுமான் S.P.பாலசுப்ரமணியம் @ 1993 ⟫
1098 அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

இ இ : முகத் தோற்றத்தால் ஒருவருக்கு நேர்ந்ததை உணர்பவரைத் துணையாக அடைந்தால், எதுவும் பேசாமல் அவர் முன் நின்றாலே போதும்...!

708 முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்

அ அ : நீ யாரோ, நான் யாரோ என்று பொது இடத்தில் அந்நியரைப் போல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும், மனதில் காதல் இருப்பது காதலர்களின் குணம்...! தாய் தடுத்தால் கேட்பதில்லை - ஒரே ஒரு பாட்டு... பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை - ஓரே ஒரு பாட்டு... பாய் விரித்துப் படுக்கும் போதும் - ஓரே ஒரு பாட்டு...!2 பாதியிலே விழிக்கச் சொல்லும் - ஒரே ஒரு பாட்டு...! உறவு பார்த்து வருவதில்லை, உருவம் கண்டு பிறப்பதில்லை, நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு...! நம் இருவருக்கும் தெரிந்தது தான் காதலென்னும் பாட்டு...!© தாய் சொல்லைத் தட்டாதே கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1961 ⟫
1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

இ இ : மற்றவர்களின் பார்வை மாறுவதை வைத்தே அவர்களின் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்களுக்கு, அவர்களின் கண்கள் சொல்வது நட்பா அல்லது பகையா என்பதை மிகச் சரியாகக் கணித்து விடுவார்கள்...!

709 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்

அ அ : நமது கண்கள் தான் அன்போடு பலவற்றைப் பேசிக் கொண்டிருக்கிறதே... வாய்ச்சொற்கள் தேவையும் இல்லை... பயனும் இல்லை... முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்... வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்...? முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் - பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்2 ம்ம்ம்ம்... மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்... நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்...© கொடிமலர் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் P..B.ஸ்ரீனிவாஸ் @ 1966 ⟫
1100 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

இ இ : நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக் கொள்ளும் ஜெகஜாலக் கில்லாடிகள், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆராய்ந்து பார்த்தால், அது கண்ணே அன்றி வேறு இல்லை !

710 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற

© தென்றலே என்னைத் தொடு வாலி இளையராஜா S.P.பாலசுப்ரமணியம் @ 1985 ⟫ நூறு வண்ணங்களில் சிரிக்கும், பனி தூங்கும் புஷ்பங்களே... ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களே... வானவெளியில், வலம் வரும் பறவை... நானும் அதுபோல் எனக்கென்ன கவலை...? காற்று என்பக்கம் வீசும் போது, காலம் என் பெயரைப் பேசும் போது... வாழ்வு எனது வாசல் வருது... நேரம் இனிதாக யாவும் சுகமாக - கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே... இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே... உதயமானதே புதிய கோலமே... விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே... நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே...! அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே...

தங்களின் கருத்து என்ன...? நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. இவ்வளவு பாடல் வரிகளை எப்படித்தான் நினைவில் வைத்திருக்கிறீர்களோ ! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் திண்டுக்கல் தனபாலன் சார்.. அவரது திறமையே மகத்தானது.

      நீக்கு
  2. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் மாற்றங்கள் என்ற பாடல் எப்போது கேட்டாலும் மனதை வருடம் பாடல்.
    அதிகம் அறியப் படாத குறிப்பறிதல் அதிகாரத்தை உங்கள் பாணியில் விளக்கியது சூப்பர். அ அ இ இ புதுமை

    பதிலளிநீக்கு
  3. அழகழகான சினிமாப்பாடல் வரிகளையும் அதற்கேற்ற திருக்குறள் வரிகளையும் இணைத்துச்சொல்லியுள்ளது மிகச் சிறப்பாக படிக்க சுவாரஸ்யமாக உள்ளன. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு பாடல் வரியையும் உட்கிரகித்து வாழ்க்கைக்குத் தேவையானவைகளை எடுத்துக் கூறுவதில் நீங்களே வல்லவர். பதிவு படிக்க படிக்க இனிமை.

    நண்பர்கள் தின கொண்டாட்டம் மற்றும் வாழ்த்து அட்டைகளைப் பெறுவதற்கான ஒரு பயனுள்ள வலைத்தளம்:
    Happy Friendship Day 2014 Pics

    பதிலளிநீக்கு
  5. திரு பக்கிரிசாமி சொல்வதைப் போல எல்லாத்தையும் எப்படித் தான் நினைவில் வைச்சுத் தேர்ந்தெடுக்கிறீங்களோ! ஆச்சரியம் தான். இந்த விஷயத்தில் எனக்கு அவ்வளவு திறமை இல்லை. :)

    பதிலளிநீக்கு
  6. அய்யா. ஒவ்வொரு குறளையும் ஒரு பதிவாய் வெளியிடும் அளவுக்குச் சொல்லலாம். அத்தனையையும் ஒரே பதிவில் இட்டிருக்கிறீர். பசி கொண்டவன் பந்தியில் அமர்ந்தது போல் மனம் அலைபாய்கிறதே தவிர ஒன்றவில்லை.

    திரும்பத் திரும்ப வந்து படித்து எடுத்துக் கொள்ள மனதை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.

    அருமையான பதிவு மட்டுமல்ல ஒரு புதிய பார்வையும் கூட.

    பதிலளிநீக்கு
  7. குறள் படிக்கும்போது இணையான பாடல்களோ, பாடல்கள் கேட்கும்போது இணையான குறள்களோ நினைவுக்கு வருவது உங்கள் திறமை DD..

    பதிலளிநீக்கு
  8. திருக்குறளையும், திரைப்படப் பாடல்களையும் இப்படியும் இணைத்துக் கொடுக்கமுடியும் என்பதை திரும்பவும் நிரூபித்துவிட்டீர்கள்! இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. படித்தவுடனே ஒரு சந்தோசம் கூடிய பொறாமை. இவாறாக எழுத நம்மால் எழுத முடியவில்லையே. சரி, தம்பி உடையான் படைக்கஞ்சான் என்று... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. திருக்குறளையும் திரைப்பாடல்களையும் இவ்வளவு அழகாக இனைக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும் டிடி.

    பதிலளிநீக்கு
  11. திருக்குறளும் திரையிசைப் பாடல்களும் என்னும் நூல் எழுதி வெளியிடலாம். வாழ்த்துக்கள் டிடி.

    பதிலளிநீக்கு
  12. குறள்கள் - குரல்கள் (பாடல்கள்) செம்ம காம்பினேஷேன் தல..

    பதிலளிநீக்கு
  13. பொற்காலப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  14. #ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களேன் #
    திருக்குறள் முழுவதையும் பாடல்கள் மூலம் படம்பிடித்துக் காட்ட வாழ்த்துக்கள் !
    த ம 8

    பதிலளிநீக்கு
  15. ஒரு புத்தகமாய் வெளியிடுங்கள் ஐயா! அருமையான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  16. திருக்குறளுக்குப் பொருத்தமான பாடல்களை எங்கிருந்துதான் தேடிக் கண்டுப்பிடிக்கிறீங்கண்ணா!?

    பதிலளிநீக்கு
  17. இவ்வளவு பாடல்களையும் மனப்பாடம் செய்தது ஆச்சர்யமாக இருக்கிறது முதலில் அதற்க்கு ஒரு சபாஸ் அருமை.

    பதிலளிநீக்கு
  18. பதிவுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் மிக அருமை. இந்த பதிவில் முதல் இடம் பிடிப்பது "மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்" என்ற பாடல் . பாட்டிலே பலகோடி நெஞ்சங்களை மீண்டும் இறுக்கமாக பிடித்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  19. இரண்டு அதிகாரங்களைத் தேர்ந்தெடுத்து ஒப்புமைப்படுத்தி அசத்திட்டீங்க.

    பதிலளிநீக்கு
  20. குறளொடு கூடும் குறிப்பான பாடல்!
    உறவினைக் காட்டும் உணர்வு!

    மிக மிக அருமையான தொகுப்பு சகோதரரே!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. ராஜி அக்காவை வழிமொழிகிறேன் :-)

    பதிலளிநீக்கு
  22. பாட்டும்,குறலும்..பலே...பலே...! தங்களால் மட்டுமே முடியும்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. பாடல் வரிகளை நினைவு கூர்ந்து குரலுடன் இணைத்து ஆஆஹா அபாரம்.

    பதிலளிநீக்கு
  24. ஓராயிரம் பார்வையிலே! – இன்னும் அந்த அசோகன் என் மனதில் நிழலாடுகிறார்!
    Tha.ma.12.

    பதிலளிநீக்கு
  25. திருக்குறளுடன் பற்பல இனிமையான - திரைப் பாடல்களையும் இணைத்து வழங்கிய இனிய பதிவு.. தித்திக்கின்றது!..
    மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  26. எதை எழுத .
    அருமை டி.டி
    தங்கமான பதிவு
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  27. குறளுக்கேற்ற பாடல் வரிகளை பொருத்தமாக தேடிக்கொடுக்கும் உங்கள் பொறுமை அசாத்தியமானது! சிறப்பான விளக்கம்! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  28. குறள்களைப் படிப்பது என்பது என்னைப் பொறுத்தவரப் பள்ளிக்கூடக்காலங்களோடு ஓய்ந்தது. கற்றதைக் கற்றபின் நிற்க என்று சொல்வது போல் நினைவில் நிற்க வைக்கிறீர்கள் உங்கள் திரைப்பாடல்களின் வழியே தனபாலன். பாடல்கள் அருமையானவையாக இருப்பதால் குறள்களும் மனதில் நிற்கும். குறள்கள் கருத்துள்ளவையாக இருப்பதால் பாடல்களும் மறக்க முடியாமல் போகும்.மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  29. திருக்குறளும் , திரை இசையும் இப்படி தலைகீழ் பாடமாக இருப்பதே பெரு வியப்பு அண்ணா! சூப்பர்!!

    பதிலளிநீக்கு
  30. திருக்குறளை உருகிக் கற்க
    இருக்கிற திரைப் பாவோடு
    பொருத்திப் புகட்டும் - தங்கள்
    பதிவுகளை விரும்புகிறேன்!

    பதிலளிநீக்கு
  31. திரைப்படப்பாடல்களோடு கூடிய உங்கள் பதிவு வெகு அருமை. அதுவும் இந்த வரிகள், '' இந்த மானிடர் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்'' வெகு அருமை.

    பதிலளிநீக்கு
  32. பாட்டும் நானே பாவமும் நானே என்பதை பாடலும் நானே என உங்களுக்காக மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.... குறளும் பாடலும் மிக அருமையான இணைப்புக்கள்...வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  33. அருமையான சினிமா பாடல்கள் . உள்ளத்தில் அன்பு இருக்கும் அடையாளங்களை காட்டும் பாடல் பகிர்வு அருமை.
    வாழ்த்துக்கள்.

    திருக்குறள் அதற்கு ஏற்ற சினிமா பாடல், என்று திருக்குறள் படிக்கும் போது திண்டுக்கல் தனபாலன் நினைவும் பாடல் பகிர்வும் நினைவுக்கு வராமல் இருக்காது. நேரம் இனிதாக போகும் எல்லோருக்கும் இந்த பாடல் பகிர்வால்.
    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  34. கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே... இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே... உதயமானதே புதிய கோலமே... விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே.//

    அந்த இசையும் பாடலும் மிகவும் மனதை இளமையாக்கும் அம்சம் கொண்டது !

    பதிலளிநீக்கு
  35. வணக்கம்
    அண்ணா

    பதிவை படித்த போதே ஒரு மகிழ்ச்சி பிறந்தது பாடலும் குறளும் சேர்ந்த கலவை பிரமிக்க வைத்தது . பகிர்வுக்கு நன்றி அண்ணா.
    த.ம 18வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  36. எப்பொழுதும் போல் குறளும் பாடல்களும் பொருத்தமாய் மிக அருமை...ராஜி சொல்வது போல கண்டிப்பாகப் புத்தகமாக்கித் தாருங்கள். த.ம.+1

    பதிலளிநீக்கு
  37. ஒவ்வொன்றுக்கும் அருமையான விளக்கம்...
    அழகான பாடல் வரிகள்...
    அருமை சார்...

    பதிலளிநீக்கு
  38. திருக்குறளை இவ்வளவு எளிமையாக எவரது மனதிலும் பதிய வைக்க உங்களை போல யாராலும் முடியாது..... அதுவும் திருக்குறள் 1099 விளக்கம் மிகவும் அருமை, நிறைய பேர் இன்று அப்படிதானே நடந்து கொள்கின்றனர் !! மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு !


    த.ம. +1

    பதிலளிநீக்கு
  39. திருக்குறள் பொருளுடன் அதுவும் பாடலுன் மிக அருமை

    பதிலளிநீக்கு
  40. திருக்குறளுடன் பாடல்களும் என அழகான தொகுப்பு. ஆச்சரியமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  41. அழகு, அருமை, அற்புதம்....!!

    வாழ்த்துக்கள் தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  42. எத்தனை பாடல்கள்! ஒவ்வொன்றுக்கும் பொருத்தமாக ஒரு குறள்.
    அருமை தனபாலன்.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் சகோதரரே,

    கருத்துப் பொதிந்த, மனதை விட்டகலாத, காதுக்கு இனிமையான, பழையகால பாடல்களுடன், எக்காலத்திற்கும் பொருந்தும் இரு வரி திருக்குறள் ஒப்பீடு! மிகவும் ரசிக்கும்படி அமைத்திருந்தது சிறப்பாக இருந்தது. பதிவு இரண்டையும் ரசித்துப் படித்தேன். பாடல்களும், திருக்குறளும் போல, தங்களுக்கு நிகர் தாங்கள்தான்.

    வாழ்த்துக்களுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  44. இவ்வளவு பாடல்களையும் நினைவில் வைத்திருந்து அவற்றிலிருந்து மிகச்சரியானதை சரியான குறளுக்கு விளக்கமாய் அமைத்து... ஆச்சரியம் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  45. வியந்து வாசித்து ரசித்து மலைத்தேன். அற்புதம். பாராட்டுக்கும் அப்பாற்பட்ட இம்முயற்சிக்கு நன்றி தெரிவிப்பதே தகும் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  46. வள்ளுவன் வார்த்தைக்கு வளம் சேர்ப்பது போல் அமைந்தது தங்களின் இப்பதிவு. சிறப்பான குறள்களையும் அதற்க்கமைந்த பாடல்களையும் இணைத்து சிந்திக்கச் செய்துள்ளீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  47. குறளும் பாடல்களும் இணையும் விதம் அற்புதம் தனபாலன் சகோ.

    கண்ணோடு கண் இணை நோக்கி என்ற குறளும் அர்த்தமும் சூப்பர். :)

    பதிலளிநீக்கு
  48. மிக ஆழ்ந்த குறள் வாசிப்பு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  49. திண்டுக்கல் தனபாலன் , வாழ்க வளமுடன். நீங்கள் நலமா?
    தங்கை வீட்டில் எல்லோரும் நலமா?
    இழப்பின் வருத்தம் அதிகம் தான் .
    காலம் தான் மனத்துயரை மற்றும்.
    அன்புடன்
    கோமதிஅரசு

    பதிலளிநீக்கு
  50. எனக்கு மிகத் தாமதமாக ஶ்ரீராம் கூறித்தான் செய்தியே தெரியும். ஊரிலும் இல்லை. உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. காலம் தான் உங்கள் மனப்புண்ணை ஆற்ற வேண்டும். இறைவனைப் பிரார்த்திக்கிறோம். உங்களோடு சேர்ந்து நாங்களும் உங்கள் துய்ரைப் பகிர்ந்து கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  51. பதிவை வடிவமைத்த விதம் அட்டகாசம் சார் ... மதுரையில் கலக்குவோம் சார் ...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.