🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கீதை vs கணிதம்

வணக்கம் நண்பர்களே!... எதுவரை வாழ்க்கை ↑→) அழைக்கிறதோ... அது வரை நாமும் சென்றுவிடுவோம்... விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம்... ஓஓஒஓஒ... பரவசம் இந்த பரவசம்... என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே... கடவுள் தந்த அழகிய வாழ்வு... உலகம் முழுதும் அவனது வீடு... கண்கள் மூடியே வாழ்த்து பாடு...


© மாயாவி பழனி பாரதி தேவி ஸ்ரீ பிரசாத் கல்பனா, S.P.B.சரண் @ 2005 ⟫

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை vs
MATH Medical Tips for Healthy Life

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை அறிய ஒவ்வொரு எண்ணிற்கு பக்கத்தில் சுட்டியைக் கொண்டு செல்லுங்கள்... () செய்வது போல...! கைப்பேசியில் பதிவை வாசிப்பவர்கள், கைப்பேசியைத் திரும்பியபின், எண்களின் மேல் ஒவ்வொன்றாகச் சொடுக்கவும்... சின்ன ஒப்பிடுதல்... ஓரளவு சரியாக இருக்கிறதா...?

01. Be COINCIDENT with elders advise

01. வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுங்கள்


02. MULTIPLY your joy; DIVIDE your sorrows

02. வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள்


03. Have a BROAD mind; Be an UNIQUE person

03. வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்து விடுங்கள்


04. ENCLOSE your activities within a limited AREA

04. வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்


05. ADD your good friends; SUBTRACT your enemies

05. வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சந்தியுங்கள்


06. EXPAND your knowledge; FACTORISE your abilities

06. வாழ்க்கை ஒரு பாடம் அதனைப் படியுங்கள்


07. Think LOGICALLY; Be a STRAIGHT forward person

07. வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்


08. CONSTRUCT your goal; RAISE your reasoning power

08. வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்


09. MINIMIZE your criticism; MAXIMIZE your motivation

09. வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்


10. Always think POSITIVE; Let your patience be GREATER

10.வாழ்க்கை ஒரு வினோதம் அதனைக் கண்டறியுங்கள்


11. PROVE your talents; Let god be at the CENTER of your life

11. வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்


12. Try to SOLVE any PROBLEM whatever you face in your life

12. வாழ்க்கை ஒரு குழப்பம் அதற்கு விடை காணுங்கள்


13. EXPRESS your feelings; START and DO every work with prayer

13. வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்


14. Be COPLANER with your neighbours; DIRECT others in right path

14. வாழ்க்கை ஒரு துயரம் அதனைத் தாங்கிக் கொள்ளுங்கள்


15. DIFFERENTIATE yourself from others by doing some good deeds

15. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்


16. Be a BALANCED person in all situations; Be an INTEGRATED personality

16. வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள்


17. EXTEND your generosity to INFINITY; DO some good things DIFFERENTLY

17. வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்


18. Be COLLINEAR with your family members; Have a smiling CURVE in your face always

18. வாழ்க்கை ஒரு சோகம் அதனைக் கடந்து வாருங்கள்

(படம் : அயன்) எட்டி தொடும் வயது இது; ஒரு வெட்டுக் கத்தி போல் இருக்கும்... அதிசயம் என்னவென்றால், அதன் இரு பக்கம் கூர் இருக்கும்... கனவுக்குச் செயல் கொடுத்தால், அந்த சூரியனில் செடி முளைக்கும்... புலன்களை அடக்கி வைத்தால், தினம் புது புது சுகம் கிடைக்கும்... காலில் குத்தும் ஆணி, உன் ஏணி என்று காமி... பல இன்பம் அள்ளி சேர்த்து, ஒரு மூட்டை கட்டி வா நீ வா நீ... என்ன கொண்டு வந்தோம்...? நாம் என்ன கொண்டு போவோம்...? /// அட...! இந்த நொடி போதும், வா வேற என்ன வேண்டும்...? வேண்டும் - நண்பர்களே...? நன்றி... வாழ்த்துகள்...
முந்தைய பதிவான சூடா ஒரு காஃபி இங்கே சென்று குடிக்கலாம்...! நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. காப்பி சூடா பதமா இருக்குய்யா...! ரசித்தேன்...!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான சிந்தனைகள்....அனிமேஷன் அருமை!

    பதிலளிநீக்கு
  3. அட, தலைப்பே பதிவிற்கான ஆர்வத்தை தூண்டுகிறது.. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  4. அழகான அர்த்தமுள்ள வாழ்க்கை பாடம். 18 வழிகளையும் தடம் புரளாமல் பின்பற்றினால் அனைவருக்கும் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கைதான். அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு


  5. பொறியாளர் அல்லவா? கீதை சொல்லும் வாழ்க்கைத் தத்துவத்தை கணித குறியீட்டின் மூலம் அருமையாக விளக்கிவிட்டீர்கள். சுட்டியை எண்ணுக்கு அருகில் செல்லும்போது, வரும் வாழ்க்கை பற்றிய கருத்துகளுக்கான அசைவூட்டம் அசர வைத்தது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கை என்ன? அதனை எப்படி ஏற்று நடப்பது - அருமையிலும் அருமை

    பதிலளிநீக்கு
  7. அழகா வார்த்தைகளை சேர்த்து கீதையை கணிதமாக்கி கொடுத்திருக்கிறீர்கள்.நல்லா இருக்கு...கடைப்பிடிச்சா இன்னும் நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. கீதை 18 அத்தியாயங்கள் கொண்டது. நீங்கள் அதேபோல கீதையிலிருந்து 18 அறிவுரைகளை எடுத்துத் தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். அதேபோல கணிதத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு வாக்கியங்களை அமைத்ததும் அருமை!
    ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு வாக்கியங்கள் கீதையிலிருந்து. ரொம்ப சிறப்பாக இருக்கிறது.

    எழுதுவதில் மட்டுமல்ல; animation செய்வதிலும் மன்னன் என்று நிரூபித்துவிட்டீர்கள்!
    வாழ்த்துகள், பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  9. மிகமிக அருமையான பதிவு சார் . நல்லஅர்த்தமுள்ள வாழ்க்கைப் பாடத்தினை அழகாக்கி தந்தமைக்கு நன்றிகள்.சரியான ஒப்பிடுதல். உங்க பதிவுகளில் கணனித் தொழில் நுட்பம் அசரவைக்கிறது. நன்றாக செய்திருக்கிறீங்க. பாராட்டுக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  10. 18 அத்தியாயங்களையும் அப்படியே 18 நெறிமுறைகளாய் தந்திருக்கும் விதம் மனங்கவர்கின்றது. தொகுப்பும் வடிவமைப்பும் அருமை. வாழ்க.. வளர்க!..

    பதிலளிநீக்கு
  11. பகவத்கீதை கருத்துகளை வித்தியாசமாக ரசிக்கும்படி கொடுத்ததோடு, அயன் படப் எழுச்சி மிக்க பாடல் வரிகளைக் குறிப்பிட்டமை ரசிக்கும்படியும் சிந்திக்கும்படியும் இருந்தது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி தனபாலன் சார்..!

    பதிலளிநீக்கு
  12. கூட்டிக் கழிச்சுப் பாத்தா கணக்கு சரியா இருக்கு தனபாலன் அவர்களே . நன்றி

    பதிலளிநீக்கு
  13. மிகவும் அருமையான சிந்தனைகள்....அனிமேஷன் அருமை!

    பதிலளிநீக்கு
  14. விடை சரியாக உள்ளது. நூறு மதிப்பெண்கள்.... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  15. வாழ்க்கை ஒரு கணக்குப் பாடம் அதை படிப் படியா கத்துகிடனும்..அழகா அனிமேசனோட சுருக்கமான வழிகாட்டி! சிறப்பா இருக்குங்க DD.

    பதிலளிநீக்கு
  16. கீதை கணிதம் வித்யாசமான அமைப்பு அருமை..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  17. என்னவென சொல்வது...

    பதினெட்டு வாழ்கை நெறிமுறைகள்!
    மதிகெடும் மனதிற்கு நல்அறிவுரைகள்!
    விதிவெட்டும் சோகம் தறித்திடவே
    பதித்திட்டீர் நல்ல பொறிமுறைகள் !...

    நல்ல தொழில்நுட்பம். அழகிய வேலைப்பாடுடன் கூடி அறிவுரைகள்.
    நல்ல கருத்துப்பாடல்கள் தொகுப்பு.
    அத்தனையும் சிறப்பு!

    பகிர்வுக்கு மிக்க நன்றி தனபாலன் சார்!

    த ம.7

    பதிலளிநீக்கு
  18. மன்னிக்கணும் தனபாலன் சார். பகவத் கீதைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  19. அருமையான பதிவு பாலன் அண்ணா. கணிதத்தைக் கீதையோடு ரசித்தேன்.
    அது சரி... கணக்கு சொல்லிக் கொடுத்திட்டு பரீட்சைல்லாம் வைக்க மாட்டீங்களே... ஏன்னா நான் கணக்குல ரொம்ப வீக்கு.. :))

    பதிலளிநீக்கு
  20. நீங்கள் ஒரு கணினிச் சித்தர். என்னென்னமோ மேஜிக் எல்லாம் காட்டுகிறீர்கள். எண்களைத் தொட்டு அவற்றையும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  21. நல்லதொரு படைப்பு..அருமையான பாடல் வரிகளை நினைவூட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அண்ணா... அழகான பதிவு...அதிலும் எண்ணைத் தொட்டால் வரும் கருத்துகள் அனைத்தும் புதுமை... ஆழமான கருத்துகள்...

    வாழ்த்துகள், தொடர்ந்து கலக்குங்கள்...

    பதிலளிநீக்கு
  23. அருமையான சமன்பாடுகள். ஆனால் பகவத்கீதைக்கும் இதற்கும் எந்த அளவுக்கு சம்பந்தம் என்று தெரியவில்லை. அனிமேஷங்கள் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  24. கீதை சொன்ன கணிதம் அருமை! உங்களின் ஒவ்வொருபதிவும் புதுமை! உங்கள் மனமோ என்றும் இளமை! வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  25. Golden words.
    Amazing. WOW
    'Do your duty the rest will be done by The God.'
    'பொறியாளர் அல்லவா?'
    Now only I have come to know this after seeing one comment.
    Best wishes.
    You have got your own specialty in giving your article.

    பதிலளிநீக்கு

  26. கீதை 18 அத்தியாயங்கள் என்று தெரியும். அதைப் படித்தது கிடையாது. கணிதத்துக்கும் கீடைக்கும் தொடர்பு தெரியவில்லை. ஆனால் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் அவ்வள்வும் அருமை. கணினியில் விற்பன்னர் . விளையாடுகிறீர்கள். சபாஷ்.!

    பதிலளிநீக்கு
  27. கீதையில் கணக்கா ?

    கீதையே கணக்கு தானே.

    மனித வாழ்வில் எந்தெந்த நிலையில் எந்தெந்த தவறுகளை செய்யக்கூடும் என்பதை
    உள்ளங்கனி நெல்லிக்கனி போல் எடுத்துச் சொல்வது கீதை.

    மனித வாழ்வு , ஒரு திண்டும் அல்ல. ( நாட் எ ஸோஃபா ) . ஒரு கல்லும் அல்ல. ( நாட் ஆல்ஸோ எ ஸ்டோன்)
    அது நமக்கு எது கிடைத்திருக்கிறதோ ( அது தனம் . நாம் பெற்றுள்ளது )) அதை நாம் பாலிக்க, கண்காணிக்க‌
    சரிவர நிர்வகிக்க செய்யும் கணக்கே.

    அர்த்தமுள்ள பதிவு.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு,
    வாழ்த்துகள் .
    புதுமையாக தந்துள்ளீர்கள் .ஆங்கிலம் ,தமிழ் இரண்டையும் இணைத்து . இங்கும் தமிழை தேட வேண்டிய நிலை .தமிழ் மறைந்தும் கடமையை செய்கின்றது . சேமித்து வைக்க வேண்டிய கருத்துகள் . மனதில் அமைதியையும் .ஊக்கத்தையும் தரும் கருத்துக் குவியல் .
    காணப்பட்ட ,பதியப்பட்ட அருமையான வரிகள் தேவை. ஆங்கிலம் ,தமிழ் இரண்டையும் பாதுகாத்து வைத்து திரும்ப திரும்ப படித்து அமைதி பெற .
    கொடுங்கள் மகிழ்வடைவேன்
    அன்புடன்

    பதிலளிநீக்கு
  29. விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்து
    சேந்து செய்த அருமையான படைப்பு
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  30. ஆஹா அற்புதமான படைப்பு. இவ்வளவு நேர்த்தியாகவும் நிதானமாகவும் செய்துள்ளீர்கள்.அருமை நண்பரே வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. மிக அருமையான பகிர்வு தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  32. அற்புதமான வாழ்க்கை நெறியை கீதை மூலம் அதோடு அழகான கருத்து மிக்க பாடல் வரிகள். உங்கள் ஒவ்வொரு பதிவையும் படித்து வியப்பாக இருக்கிறது. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  33. நல்ல சிந்தனைகள். எண்களின் மேல் நீங்கள் காட்டிய மாயை சூப்பர்....

    பதிலளிநீக்கு
  34. பதிவுக்குப் பதிவு புதுமைகள் செய்து அசத்துகிறீர்கள்.
    கணித சொற்களை வாழ்க்கையோடு இணைத்தது அருமை

    பதிலளிநீக்கு
  35. அருமையான கருத்துகள். நல்ல அனிமேஷன்....

    பகிர்வுக்கு நன்றிகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  36. கணிதமும் புரிந்தததில்லை; கீதையும் புரிந்ததில்லை.

    திண்டுக்கல்லை இப்படிப் புரட்டுறாரே சூரி சார்!

    பதிலளிநீக்கு
  37. வாழ்க்கைக்கான 18 வாக்கியங்களும் பொறுக்கியெடுத்த விலையுயர்ந்த முத்துக்கள்!

    பதிலளிநீக்கு
  38. உங்களுடைய கருத்துக்களை படித்து மகிழ்ந்தேன்.நடைமுறைப் படுத்தினால் நமக்கு நல்லது.நடைமுறைப் படுத்த முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  39. மிகவும் அருமையான சிந்தனைகள்....அனிமேஷன் அருமை! இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  40. மிகவும் அருமையான சிந்தனைகள்....அனிமேஷன் அருமை!

    பதிலளிநீக்கு
  41. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம், சந்தர்ப்பத்தை சியாக பயன்படுத்த தெரிந்தவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.
    எண்களை தொட்டால் கருத்து விரிவது அழகு.
    வாழ்க்கையை நல்ல முறியில் வாழ கீதை காட்டும் வழி அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  42. கீதையில் கணிதம்... ரூம்போட்டு யோசிச்சு பதிவு போடுவீங்க போல ... புதிய தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  43. அட எப்படி சார் இப்படி எல்லாம் செய்ய முடிகிறது, உங்களிடம் டிசைன் படிக்க வேண்டும் போல,

    (எண்கள் அருகில் கொண்டு செல்லும் போது ஓபன் ஆகும் லிங்க்)

    பதிலளிநீக்கு
  44. மிகவும் அருமையான சிந்தனைகள்...
    ஒவ்வொன்றும் பொக்கிஷம் பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா

    பதிலளிநீக்கு
  45. கீதாவை ,,சாரி ,,,கீதையை நீங்கள் கணக்கு பண்ணியிருக்கும் விதம் அருமை !

    பதிலளிநீக்கு
  46. வாழ்வதற்கான உந்துசக்தியை வழங்கும் வழிகளை மிக எளிமையாக கீதையின் மூலமும் கணிதத்தின் மூலமும் காட்டியமைக்கு மிக்க நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  47. கணக்கு விடும் நம்மாளுகளுக்கு
    கணக்கோடு கீதையில வரும்
    பதினெட்டு
    எட்டட்டும் எல்லோருக்கும்!
    தங்கள் பதிவு அமைப்பின் அழகு
    வலைப்பூவில்
    தாங்கள் பண்டிதரெனச் சாற்றுகிறதே!
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  48. ஆவ்வ்வ் இம்முறை கீதாவிபதேசமோ... நானம் பிறந்திட்டுதோ என ஓடிவந்தேன்ன்... வித்தியாசமான பதிவாக்கிட்டீங்க... கீதாவும் கணக்கும் சூப்பர். அருமையாக + வித்தியாசமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  49. மிகவும் அருமையான சிந்தனைகள்....
    அருமை...அருமை...

    பதிலளிநீக்கு
  50. சூப்பர் பதிவு!!!. என்ன சொல்லிப் பாரட்டுவதென்றே தெரியவில்லை. பதிவின் அனைத்து அம்சங்களும் அருமை. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  51. பொக்கிஷம் போல் பாதுகாக்கவும் கடைபிடிக்கவும் வேண்டும் உங்க பதிவுகளின் சாராம்சங்களை. பாலண்ணாவின் நலனுக்கு எங்கள் பிரார்த்தனையில் என்றும் உண்டு இடம்.

    பதிலளிநீக்கு
  52. வித்தியாசமான சிந்தனை.
    வாழ்த்துக்கள் தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  53. வாழ்க்கை ஒரு போராட்டம் மோதுவது தானே இயல்பு! அருமையான உபதேசம் பகிர்வுக்கு நன்றி தனபாலன் சார்!.

    பதிலளிநீக்கு
  54. அன்புசால் பெருந்தகையீர் வணக்கம். எனது தளத்தில் கருத்து இடுவதில் சிரமம் இருப்பதாக தங்கள் மூலம் அறிகிறேன். களைய என்ன செய்ய வேண்டும்?. உடனே செய்ய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  55. வாழ்விற்குகந்த தத்துவத்தை வகுத்துச் சொல்லும் பகவத் கீதையே தலைப்பாய் அமைந்ததும் இன்றைய ஆக்கத்திற்கு வெகு சிறப்பாக உள்ளது சகோதரா .வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  56. வித்தியாசமான பதிவு, கீதையையும், கணித வார்த்தைகளையும் பயன்படுத்தி ... படிக்கவே ஆர்வமாக இருந்தது. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  57. ஆஹா! இவ்ளோ மேட்டர் .அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  58. கீதைக்கும் கணிததுக்குமான ஒப்பிடு மிகவும் அருமை... அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  59. செம கம்பாரிசன்...சான்சே இல்ல.. அருமை.

    பதிலளிநீக்கு
  60. இந்த அளவு தங்களால் வித்தியாசமாகவும், நுணுக்கமாகவும் சிந்திக்க முடிவதை நினைக்கும்போது வியப்பு மேலிடுகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  61. வாசிக்கத் தூண்டும் தலைப்புடன் அருமையான சிந்தனைகள். நன்றி

    பதிலளிநீக்கு
  62. வாழ்க்கை ஒரு தவிர்க்கவியலா வரப்பிரசாதம்
    வாழ்ந்துதான் ஆகணும் :)

    பதிலளிநீக்கு
  63. பதினெண் கணக்கு மிகவும் அருமை.கணக்கும்,கருத்தும் ஒத்துப்போவது அதைவிட .அருமை.திருப்பிப் படிக்க ஆர்வமூட்டுகிரது. எவ்வலவு பாராட்டினாலும் தகும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  64. குறள்களுக்கேற்ற பாடல்வரிகள். அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  65. மிக அருமையான பகிர்வு, வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.