🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உன்னை அறிந்தால்... (பகுதி 2)

வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவான உன்னை அறிந்தால்... (பகுதி 1)-யை படித்து ரசித்துப் பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இதோ அதன் தொடர்ச்சி...


புதிதாக என் தளம் வருபவர்களுக்கு : (மற்ற நண்பர்கள் பாடல் வரிகளை ரசிக்கச் செல்லலாம்) நண்பர்களே... மனிதனின் பிரச்சனைகளுக்குக் காரணமான குணம் ஏது ? - முதல் முதலாக எழுதிய இந்தப் பதிவு வெளியிடவில்லை. காரணம் பதிவின் நீளம். இதிலிருந்து வந்த சில பதிவுகள் தான் குணம் என்னும் குறிச்சொல்லில் (Labels) வந்தவை. இந்தப் பதிவு எழுதும் போது, என் மனதில் பல பாடல் வரிகள் தோன்றின. அவற்றில் எனக்குப் பிடித்த பாடல் வரிகளை மிக்ஸ் செய்து (DD Mix - Dindigul Dhanabalan Mix) வெளியிட்டேன்.. அதற்கு முன்... அந்தப் பதிவைப் படிக்காதவர்கள் இங்கே சென்று படித்து விட்டு வந்து, (அல்லது கேட்டு விட்டு) இந்தப் பாடல் வரிகளைப் படித்தால், பாடல்களின் மகத்துவத்தை அறியலாம். மனிதனின் பிரச்சனைக்குக் காரணம் பல இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை ஒப்பிட்டுப் பார்த்தல் - இதைப்பற்றி ஏற்கனவே அந்தப் பதிவில் அலசி விட்டோம்... இனி பாடல் வரிகளை வாசிப்போமா...? நீலக்கலரில்-அருமை வரிகள், சிவப்புக் நிறத்தில்-என் கருத்துக்கள் "நான் பாட்டுக்குப் பாட்டு பாடுறேன்..."

08. படம் : மௌனம் பேசியதே, முதல் வரி : ஆடாத ஆட்டமெல்லாம்...

நித்தம் கோடி சுகங்கள் தேடி, கண்கள் மூடி அலைகின்றோம்... பாவங்களை மேலும் மேலும், சேர்த்துக் கொண்டே போகின்றோம்... மனிதன் என்ற வேடம் போடு, மிருகமாக வாழ்கின்றோம்... தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து, தீமைகளைச் செய்கின்றோம்... காலம் மீண்டும் திரும்பாதே...! பாதை மாறி போகாதே...! பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்று போகும் ஆட்டமே...! ஆடாத ஆட்டமெல்லாம்... போட்டவங்க மண்ணுக்குள்ள... போன கதை உனக்குத் தெரியுமா...? நீ கொண்டு வந்ததென்ன...? நீ கொண்டு போவதென்ன...? உண்மையென்ன உனக்குப் புரியுமா...?

வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே... அட, தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே... இந்த வாழ்க்கை வாழத் தான்... நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் ? கொண்டு செல்ல ? யோசிங்க நண்பர்களே... யோசித்து கீழ்க்காணும் கேள்விக்கு பதில் தரலாம்...!

"குழந்தை ஞானி இந்த இருவரும் தவிர இங்குச் சுகமாய் இருப்பவர் யார் காட்டு...? ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்க்கை நமக்கு மட்டும்... இதுதான் ஞான சித்தர் பாட்டு...! இந்தப் பூமி சமம் நமக்கு... நம் தெருவுக்குள் மதச்சண்டை, ஜாதிச்சண்டை வம்பெதற்கு...?" (படம் : படையப்பா)

09. படம் : சிம்லா ஸ்பெஷல், முதல் வரி : உனக்கென்ன மேலே நின்றாய்... ஓ நந்தலாலா...

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு... பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று... பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே இரண்டும் ஒன்று... பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே இரண்டும் ஒன்று... நானென்ன கள்ளா ? பாலா ? நீ சொல்லு நந்தலாலா...!

அம்மா இல்லேன்னா-அன்பு போச்சி, அப்பா இல்லேன்னா-அறிவு போச்சி, கூடப் பிறந்தவர்கள் இல்லேன்னா-ஆதரவு போச்சி, சம்சாரம் இல்லேன்னா-சகலமும் போச்சி, இத்தனையும் போனாலும், கடைசிக் காலத்தில் நல்ல நண்பன் இல்லேன்னா வாழ்க்கை நாசமாப் போச்சி..! சரியா ? யோசிங்க நண்பர்களே...

"பந்தம் என்ன ?, சொந்தம் என்ன ?, போனா என்ன ? வந்தா என்ன ? உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல, ஹாஹா... பாசம் வைக்க, நேசம் வைக்கத் தோழன் உண்டு, வாழ வைக்க... அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே..ய்... உள்ளமட்டும் நானே, உசிரக் கூடத்தானே, என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்... என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு... நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்..." (படம் : தளபதி)

10. படம் : அண்ணாமலை, முதல் வரி : வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்...

இன்று கண்ட அவமானம்... வென்று தரும் வெகுமானம்... வானமே தாழலாம், தாழ்வதில்லை தன்மானம்... மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்...? பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்... பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே... ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே... எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே... அடே நண்பா.. உண்மை சொல்வேன்... சவால் வேண்டாம்... உன்னை வெல்வேன்...

நண்பனை வென்றாலும், அவனின் சொத்துக்களை, முடிவில் திருப்பிக் கொடுத்து விடுவார்...ஏன் ? யோசிங்க நண்பர்களே...

"பட்டத்திலே பதவி, உயர்வதிலே இன்பம், கிட்டுவதே இல்லை... என் தோழா... உனை ஈன்ற தாய் நாடு, உயர்வதிலே இன்பம், உண்டாகும் என்றே சொல்... என் தோழா... உழைப்பதிலா உழைப்பை, பெறுவதிலா இன்பம், உண்டாவதெங்கே சொல்... என் தோழா... உழைப்பவரே உரிமை, பெறுவதிலே இன்பம், உண்டாகும் என்றே சொல்... என் தோழா..." (படம் : நாடோடி மன்னன்)

11. படம் : யாருக்கும் வெட்கமில்லை, முதல் வரி : மேலும் கீழும் கோடுகள் போடு, அதுதான் ஓவியம்.. நீ சொன்னால் காவியம்..!

சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி... குற்றம் கூறுகையில்... மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா... மூடர்களே... பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள்... முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்...

தவறு செய்யாத மனிதனே கிடையாது... அதே சமயம் அவன் நிலையில் நாம் இருந்தால், நாம் என்ன செய்திருப்போம்...? யோசிங்க நண்பர்களே...

"மண்வெட்டி கையில் எடுப்பார்... சில பேர் மற்றவர்க்குக் குழி பறிப்பார்... அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதைத் தானறிய மறந்திருப்பார்...! அறிவுக்கு வேலை கொடு, பகுத்தறிவுக்கு வேலை கொடு, மூடப் பழக்கத்தை விட்டுவிடு... காலம் மாறுது, கருத்தும் மாறுது, நாமும் மாற வேண்டும்... நம்மால் நாடும் மாற வேண்டும்..." (படம் : தலைவன்)

12. படம் : எங்க ஊர் ராஜா, முதல் வரி : யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க...

நெஞ்சமிருக்கு துணிவாக, நேரமிருக்கு தெளிவாக, நினைத்தால் முடிப்பேன் சரியாக, நீ யார் ? நான் யார் ? போடா போ... ஆடியிலே, காத்தடிச்சா, ஐப்பசியில் மழை வரும்... தேடி வரும் காலம் வந்தா, செல்வமெல்லாம் ஓடி வரும்... யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க... என் காலம் வெல்லும்... வென்ற பின்னே... வாங்கடா வாங்க...

அவ்வாறு செல்வம் வந்த பின்பு அல்லது நினைத்த காரியம் வென்ற பின்பு, நாம் எப்படி இருக்க வேண்டும்...? யோசிங்க நண்பர்களே...

"உண்டு உண்டு என்று நம்பி காலை எடு.. இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு... நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு.. ஓடு ராஜா.. நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.. அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா.. நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா.." (படம் : என் அண்ணன்)

13. படம் : வசந்தி, முதல் வரி : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா...?

தென்னையின் கீற்று விழவில்லை என்றால் - தென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை... தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால் - மங்கையர் சூட நகையும் இல்லை... பிறப்பதில் கூட துயர் இருக்கும் - பெண்மைக்கு பாவம் சுமை இருக்கும் - வலி வந்து தானே வழி பிறக்கும்... சந்தோஷம் காணாத வாழ்வுண்டா...?

ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று - எண்ணி வாழ்ந்துவிட்டால்...?

"சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்...? புயல் மையம் கொண்டால், மழை மண்ணில் உண்டு... எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ.ஓ.ஓ"

14. படம் : பச்சை விளக்கு, முதல் வரி : கேள்வி பிறந்தது அன்று...

குலமகள் வாழும் இனிய குடும்பம்... கோவிலுக்கிணையாகும்...ம்... குறை தெரியாமல் உறவு கொண்டாலே... வாழ்வும் சுவையாகும்... படித்த மாந்தர், நிறைந்த நாட்டில், பார்க்கும் யாவும் பொதுவுடைமை... நல்ல மனமும், பிள்ளை குணமும் நமது வீட்டின் தனி உடைமை... கேள்வி பிறந்தது அன்று... நல்ல பதில் கிடைத்தது இன்று...

கேள்விகள் பல இருந்தாலும் முதலில் ஏன் என்ற கேள்வி நம் மனதில் கேட்டுக் கொள்ள வேண்டும்-ஏன் ? யோசிங்க நண்பர்களே...

"ஏன் என்ற கேள்வி... இங்குக் கேட்காமல் வாழ்க்கை இல்லை... நான் என்ற எண்ணம், கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை... பகுத்தறிவு பிறந்ததெல்லாம், கேள்விகள் கேட்டதானாலே... உரிமைகளைப் பெறுவதெல்லாம், உணர்ச்சிகள் உள்ளதானாலே..." (படம் : ஆயிரத்தில் ஒருவன்)

ரொம்ப யோசிக்கச் சொல்லிட்டேனோ...? அதனாலே பகுதி 2... ரொம்ப யோசனை செஞ்சா கூடப் பிரச்சனை தான். அதனால் நண்பர்களே, நான் இப்ப யோசிக்கிறேன் முடிவு பகுதி 3-யைப் பற்றி... நன்றி...

"மனதுக்கு மட்டும் பயந்துவிடு... மானத்தை உடலில் கலந்துவிடு... இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு... இரண்டினில் ஒன்று பார்த்துவிடு ஹாஹ... என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே... தன்னாலே வெளிவரும் தயங்காதே... தலைவன் இருக்கிறான் மயங்காதே... ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே... ஆஹஹா... ஆஹஹா... ஓஹோஹோ... ஓஹோஹோ... ம்ஹ்ம்... ம்ஹ்ம்... ம்ஹ்ம்... ம்ஹ்ம்..." (படம் : பணத்தோட்டம்)

அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கிச் சென்று தொடர்வதற்கு முன், இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நல்ல கருத்துள்ள பாடல் வரிகளை சரமாய்க் கோர்த்து அளித்த விதம் நன்று. சில பாடல் வரிகள் நான் அறியாதது. நன்றி.
    த.ம. 2

    பதிலளிநீக்கு
  2. தேர்ந்தெடுத்த பாடல் வரிகளும் அதற்கான
    விளக்கங்களும் அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த பயனுள்ள பதிவினை
    தொடர்ந்து தருவதற்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  3. உனக்கென்ன மேலே நின்றாய் என்னுடைய ஃபேவரைட்.

    பதிலளிநீக்கு
  4. என்றும் காலத்தால் அழியாத பாடல்களை எடுத்து
    இங்கே பதிவிட்டு அதற்கான தங்கள் கருத்தையும்
    பகிர்ந்தமை அருமை..

    பதிலளிநீக்கு
  5. பாடல்கள் பலமாய் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பாடல் வரிகளுடன் அற்புதமான பகுதி சகோ .... தொடர் பதிவினை வரவேற்கிறோம்...

    பதிலளிநீக்கு
  7. பாடல்கள் ஒவ்வொன்றும் முறையாக தேர்ந்து எடுத்துள்ளீர்கள் - ரசித்தேன் புரிந்தேன் - பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இட வந்த என்னை உங்களின் இந்த குறள் மிகவும் ரசிக்க வைத்தது. அருமை நண்பரே....
    "ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை... நான் என்ற எண்ணம், கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை... பகுத்தறிவு பிறந்ததெல்லாம், கேள்விகள் கேட்டதனாலே... உரிமைகளை பெறுவதெல்லாம், உணர்ச்சிகள் உள்ளதனாலே..." (படம் : ஆயிரத்தில் ஒருவன்)

    இந்தப் பாடல் அடிக்கடி என் கணிணியில் ஒலிக்கும் பாடல். அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  9. நல்ல கருத்துள்ள பாடல்களை அறிமுக படுத்தினீகள்

    அருமை.......

    பதிலளிநீக்கு
  10. வழக்கம் போல் அருமை; நீங்கள் குறிப்பிட்டதில் பல எனக்கும் பிடித்தவையே

    பதிலளிநீக்கு
  11. நடப்பவை எல்லாம் நன்மைக்கே!

    நமக்கு மேலே இருவன் இருக்கிறான் பார்த்துக் கொள்வான்.
    அருமை தனபாலன்.
    ஒவ்வொருவரும் தன்னை அறிதல் நல்லது.
    தன்னை அறிந்தால் கேடில்லை கண்!
    என்று சொல்வார்கள் பெரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  12. நடப்பவை எல்லாம் நன்மைக்கே!

    நமக்கு மேலே இருவன் இருக்கிறான் பார்த்துக் கொள்வான்.
    அருமை தனபாலன்.
    ஒவ்வொருவரும் தன்னை அறிதல் நல்லது.
    தன்னை அறிந்தால் கேடில்லை காண்!
    என்று சொல்வார்கள் பெரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  13. //தன்னை அறிந்தால் கேடில்லை காண்!//
    தவறுதலாய் எழுத்துப் பிழை ஏற்பட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு
  14. அண்ணாமலை -வெற்றி நிச்சயம் பாடல்
    என்றும் என் மனதில் அசைபோடும் அருமையான வார்த்தைகள்

    பகிர்வுக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  15. படிக்க நன்றாக உள்ளது சார் நன்றி

    பதிலளிநீக்கு
  16. நல்ல பாடல்களும் கருத்துக்களும் பல பாடல்கள் எனக்குப் புதிது சார்.......

    தளபதி எனக்கு பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  17. பாட்டு கேட்கிற பழக்கமே எனக்கு கிடையாது ஆனால் உங்கள் தொகுத்து வழங்கிய பாடல் வரிகளை கேட்டபின்பு தான் பாடல் கேட்கவே ஆசை வருகிறது இப்ப எல்லாம் எங்க நல்ல பாடல் வருது அருமையான தொகுத்து அதற்க்கு அழகான விளக்கம் நன்றி

    பதிலளிநீக்கு
  18. ஒவ்வொன்றும் சிந்திக்க வைக்கும் பாடல் வரிகள்...

    பதிலளிநீக்கு
  19. ஒவ்வொன்றும் சிந்திக்க வைக்கும் பாடல் வரிகள்...

    பதிலளிநீக்கு
  20. எப்பொழுதும் சிந்திக்க வைக்கும் அற்புதமான பாடல் வரிகள்..உனக்கென்ன மேலே நின்றாய்..பாடல் அன்றும் இன்றும் எனக்கு பிடித்த அருமையான பாடல் சகோ..நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  21. அருமையான பாடல்கள்....அதற்கான விரிவான விளக்கங்களுடன்...நன்றி பகிர்வுக்கு...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  22. படையப்பாவில் வரும் அந்த வரிகள் தான் எனது ஃபேர்வரிட்.... வைரமுத்துவின் அந்த வைர வரிகள் ஆயிரம் அர்த்தம் சொல்லும்! அருமையான பதிவு ! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  23. நல்ல கருத்துள்ள பாடல்கள்....நன்றி

    பதிலளிநீக்கு
  24. அருமையான பாடல்கள்....அதற்கான விரிவான விளக்கங்களுடன்...நன்றி பகிர்வுக்கு...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  25. நல்ல கருத்துள்ள திரைப்படப் பாடல்களை தேர்ந்தெடுத்து அலசியுள்ளீர்கள். பதிவை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  26. தேர்வு செய்த அனைத்து பாடல்களுமே அருமையான!

    பதிலளிநீக்கு
  27. பாடல்களுக்குள் அர்த்தம் தேடி அது வாழ்க்கைக்கு எவ்வாறு பயன் கொடுக்கும் என விரிவான பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  28. Nalla padalkal nalla varikal valkaikku thevaiyana vidayam. Book a publish panalam.
    Mobile il unkal thalm parka kasdamaka ullathu. Page akalam kudidu.
    Mobile setting seithal ilakuvaka parkalam

    பதிலளிநீக்கு
  29. அழகானதொரு டிசைன்! அற்புதமான பாடல்களுடன் கூடிய அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  30. அத்தனை பாடல்களும் வாழும் தத்துவம் சொல்லும் பாடல்கள்.முழுதுமாய் ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
  31. அருமை அண்ணா..நல்ல நல்ல பாடல்கள் என்றும் அழியாது.. நம்ம பதிவையும் படிச்சு பாருங்க..http://eththanam.blogspot.in/2012/07/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  32. திரைப்பட பாடல்களும் நெறி சொல்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  33. தங்கள் தளத்தின் External Link மட்டும் New Tab இல் ஓபன் ஆக http://www.karpom.com/2011/07/blogger-tips-external-link-new-tab.html

    பதிலளிநீக்கு
  34. அருமையான பாடல்களில் இருக்கும் முத்தான கருத்தை பதிவாக்கிய விதம் அழகு.

    பதிலளிநீக்கு
  35. சினிமாப்பாடல்களின் கருத்தை இவ்வள்வு சிறப்பாக எடுத்துரைத்து அந்த பாடல்களின் கவிஞர்களையும் அந்த பாடல்களையும் பெருமைப்படுத்தி வரும் தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  36. எனக்கு பாடல்களும் அதற்கான விளக்கமும் அருமை பகிர்வுக்கு நன்றி. மிகவு ரசித்தேன் தொடரட்டும் இதுப்போன்ற பதிவு.

    பதிலளிநீக்கு
  37. படையப்பா பாடல் வரிகள் என்றைக்குமே சிந்திக்க தூண்டுபவை, பின்னே நான் எதை கொண்டு வந்தோம் கொண்டு செல்ல இல்லையா...?

    பதிலளிநீக்கு
  38. நண்பரே,

    தங்கள் பதிவினைப் படித்து ரசித்து வருகிறேன். அடியேனின் ஒரு கருத்து. பதிவின் வரிகளுக்கிடையே இன்னும் கொஞ்சம் இடம் இருந்தால் பதிவின் மெருகு கூடும். அதே போல் பத்திகளுக்கிடையே ஒரு காலி வரி அவசியம்.

    பதிலளிநீக்கு
  39. யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு... இது செம வரிகள்...

    பதிலளிநீக்கு
  40. பாடல் தேர்வு எல்லாம் அருமையா இருக்கு பாஸ்... சூப்பர்...

    பதிலளிநீக்கு
  41. கருத்துள்ள பாடல் வரிகள் அருமை.

    பராக்ககளுக்கான இடைவெளி பற்றிய பழனி கந்தசாமியின் வரிகளை ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  42. @பழனி.கந்தசாமி

    /// பத்திகளுக்கிடையே ஒரு காலி வரி அவசியம் ///

    அவர்களுக்கு, இப்போது சரி செய்து விடுகிறேன் ஐயா...
    மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  43. குழந்தை ஞானி இந்த இருவரும் தவிர இங்கு சுகமாய் இருப்பவர் யார் காட்டு...? ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்க்கை நமக்கு மட்டும்... இதுதான் ஞான சித்தர் பாட்டு...! இந்த பூமி சமம் நமக்கு... நம் தெருவுக்குள் மதச்சண்டை, ஜாதிச்சண்டை வம்பெதற்கு...?





    மிகச்சரி சொந்தமே!சில சமயங்களில் மனது தான் கேட்காமல் வம்பு பண்ணுகிறது.அருமை சொந்தமே!!!

    பதிலளிநீக்கு
  44. தேர்வுகள் செய்யப்பட்ட பாடல்கள் எல்லாமே மிகவும் புகழ் பெற்றவை! அதிலும் எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் பெரும்பாலும் ஆழமான அர்த்தங்கள் கொண்டவை! மீண்டும் அவற்றை ஒரு முறை உங்கள் பதிவின் வாயிலாக படிக்க முடிந்ததற்கு அன்பு நன்றி!

    பதிலளிநீக்கு
  45. பதிவின் கெட்அப் இப்போது நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  46. அருமையான பதிவு. நான் பழைய பாடல்களின் பரம ரசிகன். தங்கள் தளத்தில் பல்வேறு பதிவுகளின் மூலம் பழைய பாடல்களை மனதில் மீட்டு அசை போட வாய்ப்பளித்தமைக்கு கோடானு கோடி நன்றிகள். நம்முடைய மற்றுமொரு தளம் இது. நேரம் இருந்தால் கொஞ்சம் வந்துட்டுப் போங்க.

    http://manaththooralgal.blogspot.com/

    பதிலளிநீக்கு
  47. நல்ல பாடல்களின் தொகுப்பு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  48. பாடல்களில் தோரணம் அமைத்துள்ளீர்கள் - வழக்கம்போலவே!

    ஏகப்பட்ட வோட்டுப் பட்டைகள் வைத்துள்ளீர்கள். எனக்குத் தெரிந்த தமிழ் பத்து, இன்டலி, யுடான்ஸ், தமிழ்மணம் மட்டும் வாக்களித்தேன்!!! (எப்போதுமே வாக்களித்து விடுவேன்!)

    பதிலளிநீக்கு
  49. நல்ல பாடல்களின் தொகுப்பு தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  50. பாடல்த்தொகுப்பு அருமை அதை தொகுத்திருக்கும் விதமும் சொல்ல வந்திருக்கும் விடயமும் அதனிலும் அருமை. அடுத்த தொடருக்காய் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  51. சகோதரா எப்படித் தான் எல்லாம் நினைத்து ஒன்று சேர்த்துப் போட்டீர்களோ! மிக நன்று. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம். (தாங்கள் குறிப்பிட்டபடி செய்துள்ளேன் - உலவு)

    பதிலளிநீக்கு
  52. அழகிய கவிச்சரம் கோர்த்த தனபாலனுக்கு வாழ்த்துகக்ள்/

    பதிலளிநீக்கு
  53. தொகுத்துள்ள அத்தனை பாடல்களும் ரசிக்கத் தக்க வரிகளை சிதைவின்றி தருபவையே...

    நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  54. நல்ல பாடல்களின் தொகுப்பு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  55. பாட்டு போட்டு பட்டய கெளப்ப உங்களாலதான்னே முடியுது..அருமை..

    பதிலளிநீக்கு
  56. அர்த்தமுள்ள நல்ல பாடல்வரிகள் அத்துடன் உங்களுடைய கருத்து நடை மிகவும் அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
  57. உனக்கென்ன மேலே நின்றாய் என்னுடைய ஃபேவரைட். mikavum nanru!

    பதிலளிநீக்கு
  58. திரு கண்ணதாசன் அவர்கள் இன்றளவும் பேசப்படுவதற்கு காரணம் அவரது அவரது சொல்க்கட்டும்,எளிமையான வார்த்தை கோர்வைகளும் கவி மனமுமே/

    பதிலளிநீக்கு
  59. அருமையான பாடல் வரிகளுடன் அற்புதமான பயனுள்ள பதிவு நண்பர்கள் தின வாழ்த்துக்குகள்

    பதிலளிநீக்கு
  60. நல்ல கருத்துள்ள பாடல் வரிகள் மற்றும் குறள் எண்: 784 பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  61. மிக அருமையாய்ப் பதிவு செய்திருக்கிறீர்கள் . பாராட்டுகிறேன் .

    பதிலளிநீக்கு
  62. பொதுவாகவே எனக்கு எம்.ஜி.ஆர், ரஜினி அவர்களின் தத்துவப் பாடல்கள் மிகவும் பிடித்த ஒன்று. அதை மேற்கோள் காட்டியது அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  63. சினிமாப் பாடல்களில் உங்களுக்கு இருக்கும் அறிவு வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  64. சிம்லா ஷ்பெஷல் பாட்டு பல தடவை முணுமுணுத்திருக்கேன். ஏமாந்த நெஞ்சம்!! :(

    அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு
  65. பாடல்கள் மூலம் ஒரு புதிய உலகுக்கே அழைத்துப்போய் விடுகிறீர்கள். மிகவும் நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.